மண்டு தேப்நாத்து
மண்டு தேப்நாத்து (Mantu Debnath) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் தலைநகரமான அகர்த்தலாவைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். மோண்டு தேப்நாத் என்றும் இவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது. [1][2] தேசிய அளவிலான போட்டிகளில் இவர் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். [1] 1969 ஆம் ஆண்டு உருசியாவில் நடந்த அனைத்துலக சீருடற்பயிற்சிப் போட்டியில் வென்ற முதல் இந்திய சீருடற்பயிற்சி விளையாட்டு வீரர் என்ற சிறப்புக்குரியவர் என்ற பெருமையை தேப்நாத் பெற்றுள்ளார். [3][4] சீருடற்பயிற்சி விளையாட்டில் இவர் செய்த சாதனைகளுக்காக இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு மோண்டு தேப்நாத்திற்கு அருச்சுனா விருதை வழங்கி சிறப்பு சேர்த்தது. [1][5][6] சாம் லாலுக்குப் பின்னர் சீருடற்பயிற்சி விளையாட்டுக்காக அருச்சுனா விருது பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. [6][5] திரிபுராவில் அருச்சுனா விருது பெற்ற முதலாவது நபர் மோண்டு தேபநாத் என்பது இவருக்குக் கிடைத்த கூடுதல் பெருமையாகும். [1][4] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தலிப் சிங் தேப்நாத்திற்கு பயிற்சியாளராக இருந்தார். [5] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia