மதராசபட்டினம் (நூல்)
மதராசபட்டினம் என்பது, முன்னர் மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னை நகரத்தின் கிபி 1600 முதல் 1947 ஆண்டு வரையிலான கதை கூறும் நூல் ஆகும். நரசய்யா இந்த நூலை எழுதியுள்ளார். பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகம் இதன் முதற் பதிப்பை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதன் இரண்டாம், மூன்றாம் பதிப்புக்கள் முறையே 2008இலும், 2010இலும் வெளிவந்தன. நோக்கம்இந்தியாவில் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட நகரங்களுள் காலத்தால் முந்தியது மதராசபட்டினம் என்னும் சென்னைதான். இந்நகரம் பல்வேறு முதன்மைகளைக் கொண்டது. இந்நகரைக் குறித்துப் பிரித்தானியரின் குறிப்புக்களிலும், பல்வேறு நூல்களிலும் காணப்படும் பல விவரங்கள் சுவையானவை. இதன் காலத்தில் தோன்றிய முக்கிய நகரங்களான பம்பாய் (மும்பாய்), கல்கத்தா (கொல்கத்தா) ஆகியவற்றிலும் அதிகமாகக் கவனிக்கத்தக்கது இந்நகரம் என்பதை இந்நூலாசிரியர் உணர்ந்துகொண்டது இந்த நூல் எழுதப்பட்டதற்கு ஒரு காரணமாகத் தெரிகிறது.[1] அத்துடன், மதராசபட்டினம் பற்றிய ஆதாரபூர்வமான நிகழ்வுகளைச் சாதாரண சராசரித் தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டது என இதன் நூலாசிரியர் கூறுகின்றார்.[2] உள்ளடக்கம்இது வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு வரலாற்று நூலாகவன்றி நிகழ்வுகளின் முக்கியத்துக்கு மட்டும் இடம் கொடுத்திருப்பதாக நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன், அந்நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்த மனிதர்களும் அவர்களது நோக்கும் இந்நூலில் விவரிக்கப்பட்டிருப்பதுடன், பல சுவையான நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. நூலின் உள்ளடக்கம் பின்வரும் 13 அத்தியாயங்களைக் கொண்டது. 14 ஆவதாக அட்டவணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.[3]
குறிப்புகள்உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
|
Portal di Ensiklopedia Dunia