மதுகர் நர்கர் சந்துர்கர்மதுகர் நர்கர் சந்துர்கர் (Madhukar Narhar Chandurkar)(14 மார்ச் 1926 - 28 பிப்ரவரி 2004) என்பவர் பம்பாய் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.[1][2] கல்விசந்துர்கர் 1926-ல் பிறந்தார். இவர் நாக்பூரில் உள்ள சோமல்வார் அகதமி மற்றும் ஹிசுலாப் கல்லூரியில் படித்தார். பின்னர் இவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து தேர்ச்சி பெற்றார். சந்துர்கர் வழக்கறிஞராகப் பதிவுசெய்து 1954-ல் நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல், குற்றவியல் மற்றும் வரி விடயங்களில் பயிற்சியைத் தொடங்கினார். நீதிபதி பணிஇவர் 28 அக்டோபர் 1967 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி பதவியில் நியமிக்கப்பட்டார். 1968ல் நிரந்தர நீதிபதியானார். நீதிபதி சந்துர்கர் 2, சனவரி 1984-ல் பம்பாய் உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[3] பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியாக ஏப்ரல் 2, 1984ஆம் ஆண்டு மாற்றப்பட்டார். இங்கு இவர் 13, மார்ச் 1988 வரை பணியிலிருந்தார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia