மதுரைக் கணக்காயனார்மதுரைக் கணக்காயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்ககாலப் புலவர் நக்கீரர் இந்தக் கணக்காயனாரின் மகன். மதுரைக் கணக்காயனார் பாடல்கள் சொல்லும் செய்திஅகநானூறு 27 - பாலை
அகநானூறு 336 - குறிஞ்சிஅல்லகுறிப் பட்ட தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான். அவள் பசும்பூட் பாண்டியனின் பொதியமலையில் பூத்த காந்தள் மலர் போல் மணக்கும் கூந்தலையும், நெற்றியையும் உடையவள். வென்வேற் பொறையனுக்கும் கொல்லிமலைக்கும் உள்ள தொடர்பைப் போல நட்பினை உடையவள். தொகுபோர்ச் சோழன் பொருள்மலி பாக்கத்து (பட்டினப்பாக்கத்து) மோதும் கடல்லை போல நெஞ்சே! நீ அலைமோதுகிறாய். என்கிறான். அகநானூறு 342 - குறிஞ்சிதலைவன் தலைவியை அடைய வருகிறான். குறியிடம் பிழைபட்டுவிடுகிறது. அவளை அடையமுடியவில்லை. வறிது மீளும்போது தன் நெஞ்சோடு பேசுகிறான். நெஞ்சே! நீ யார்? நீயும் நானும் ஒன்றுதானே? கிளைஞன்தானே? ஏன் கலங்குகிறாய்?
நற்றிணை 23 - குறிஞ்சிதாய் நலம் பேணிய தலைவியின் அழகு அழிந்து அவளது கண்கள் கொற்கை முத்தைப் போல் கண்ணீர் சிந்துவதைக் காட்டித் திருமணம் செய்துகொண்டு தலைவியை அடையுமாறு தோழி தலைவனிடம் சொல்கிறாள். புறநானூறு 330
பகைவேந்தன் படை தன்னைத் தாண்டி வராவண்ணம் தான் ஒருவனாகவே தன் வாளைக்கொண்டு தடுத்து நிறுத்தினான். பொங்கிவரும் கடலுக்கு ஆழிக்கரை போல நின்றான். அவனைப் பாடிக்கொண்டு அவன் இல்லத்துக்குச் சென்றவர்களுக்கு வாரி வாரி வழங்கினான். வாங்குவோர் தாங்கமுடியாத அளவுக்கு மிகுதியாக வழங்கினான். |
Portal di Ensiklopedia Dunia