மன்காட்டன் திட்டம்
மான்கற்ரன் திட்டம் (மான்ஹாட்டன் திட்டம்; Manhattan Project) என்பது முதல் அணு குண்டை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது (1931-1946) ஐக்கிய அமெரிக்க தலைமையில் ஐக்கிய இராச்சியம், கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றின. இந்த திட்டம் நடைபெற்ற இடமான மன்ஹாட்டன் அமெரிக்காவின் பெரிய நகரமனான நியூ யோர்க்கின் ஒரு பகுதி ஆகும். நாசி படைத்துறை அணு ஆயுதம் தொடர்பாக ஆய்வு செய்வதாக பயந்து, இந்த திட்டம் தொடங்கியது. 1939 ஒரு சிறு ஆராய்ய்சி திட்டத்தில் இருந்து தொடங்கி, பின்னர் இந்த திட்டத்தில் 130,000 நபர்களை பணியாற்றினார்கள். இதற்கு $2 பில்லியன் (24 பில்லியான் - 2008) செலவு ஏற்பட்டது. இந்த திட்டதை அமெரிக்க படைத்துறை நிர்வாகித்தது, அமெரிக்க இயற்பியலாளர் ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் வழிநடத்தினார். இந்த திட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் 6, 1945 இல் முதல் அணுகுண்டு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்டது. இதில் 140, 000 மக்கள் இறந்தார்கள், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இரண்டாவது அணுகுண்டு ஆகஸ்ட் 8, 1945 அன்று ஜப்பானிய நகரமான நாகசாகி மீது வீசப்பட்டது. இதில் 39,000 மக்கள் இறந்தார்கள், 25,000 மக்கள் காயமடைந்தனர். |
Portal di Ensiklopedia Dunia