| இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மயக்க மருந்து (Anesthetic) என்பது அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். இம்மருந்து மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது.[1] மயக்க மருந்தானது தோலில் உரோஞ்சுவதன் மூலமும், மருந்து ஊசியின் மூலமும் வாயுவாகவும் மனித உடலினுள் உட்செலுத்தப்படுகின்றது. 1842 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாக டை எத்தில் ஈதர் குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.[2] மயக்க மருந்துப் பயன்பாட்டினை அனஸ்தீசியா (anaesthesia) என அழைப்பர். ஜோசப் லிஸ்டர் என்பவரே நவீன மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர். கோக்கைன், மதுசாரம் ஆகியவையும் வேறுசில போதைப்பொருட்களுமே முற்காலத்தில் மயக்க மருந்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்