மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள்
மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள் என்பது மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் முயற்சியால் நூலாக வெளியிடப்படும் பழங்கால ஓலைச் சுவடியில் இருந்த அரிய சைவ இலக்கியங்களைக் குறிக்கும். மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடுகள்தமிழகத்திலுள்ள தொன்மையான ஆதீனங்களுள் குறிப்பிடத்தக்கதாய் விளங்குவது மயிலம் பொம்மபுர ஆதீனம் ஆகும். இம்மடம் வீரசைவத்தை முதலாவதாகப் பின்பற்றுகிறது. சைவமும் தமிழும் தழைத்தினிது வளர வேண்டும் என்னும் அருள்நோக்குடன் சமயப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஆற்றி வருகிறது இத்திருமடம். இத்திருமடத்தின் 18ஆம் பட்ட சுவாமிகள் அவர்கள் காலத்தில் புலவர் பெருமக்களைக் கொண்டும், தானும் ஒரு புலவராக விளங்கியும் சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். தமிழின்மீது கொண்ட அளப்பறிய பற்றினால் கி.பி. 1937ஆம் ஆண்டில் முருகன் செந்தமிழ்க் கழகம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி வைத்ததோடு 1938 இல் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி என்னும் பெயரில் தமிழ் வளர்க்கவும் கல்லூரி ஒன்றைத் தொடங்கி அருளினார். வெளியீடுகள்பழங்கால சைவ இலக்கியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சுக்குக் கொண்டு வரும் திருப்பணியைத் தொடங்கி வைத்தது மயிலம் பொம்மபுர ஆதீனம் எனலாம். நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகளின் நூல்கள் பலவும் மயிலம் பொம்மபுர ஆதீன வெளியீடாகவே பதிப்பிக்கப் பெற்றுள்ளன. வெளியீட்டு வரிசைநூல் வரிசை/நூற்பெயர்/ஆசிரியர்/ஆண்டு
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia