மரியம் உசு-சமானி
மரியம் உசு-சமானி பேகம் சாகிபா அல்லது இராசகுமாரி ஈரா குன்வாரி அல்லது உருக்மாவதி சாகிபா அல்லது அர்கா பாய் (मारियम उज़-ज़मानी बेगम साहिबा அல்லது राजकुमारी हिरा कुंवरी அல்லது रुक्मावती साहिबा அல்லது हर्खाबाई, பாரசீகம்: مریم الزمانی بیگم صاحبہ) என்பவர் முகலாயப் பேரரசரான அக்பரைத் திருமணம் செய்த பின்பு, முகலாயப் பேரரசி ஆன இராசபுத்திர இளவரசி ஆவார். மரியம் உசு-சமானி ஆம்பெரின் அரசரான பிஹரி மாலின் மூத்த மகளான ஹர்கா பாய் என்ற எயரில் பிறந்தார்.[1] இவர் பேரரசர் சகாங்கீரின் தாயும் ஆவார்.[2] முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே இலாகூரின் அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது பாக்கித்தானில் அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.[3] இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான சகாங்கீரால் கட்டப்பட்டது. வாழ்க்கைஇராசகுமாரி ஈரா குன்வாரி பேரரசர் அக்பரை பெப்ரவரி 6, 1562 இல் இந்தியாவில் இராச்சசுத்தானிலுள்ள சம்பார் எனும் இடத்தில் திருமணம் செய்தார். இவர் பேரரசர் அக்பரின் மூன்றாவது மனைவியும் ஆவார். பேரரசர் அக்பரின் முதலாவது மனைவி உருக்காயா பேகம் , இரண்டாவது மனைவி சலீமா சுல்தான். திருமணத்தின் பின்பு, இராசகுமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.[4] இவர் 1622 ஆம் ஆண்டு இறந்தார். சோதா பாய்பேரரசர் அக்பரின் மனைவி, சகாங்கீரின் தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. சகாங்கீரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. அக்பர்நாமாவிலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் 'சோதா பாய்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை. சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் பேரரசர் அக்பரின் மனைவியைக் குறிக்கச் 'சோதா பாய்' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5] இம்தியாசு அகமதின் கருத்துப்படி, பேரரசர் அக்பரின் மனைவிக்குச் 'சோதா அக்பர்' எனும் பெயர் முதன்முறையாக அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆப் இராச்சசுத்தான் என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படத்தில்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia