மறைசெய்தியியல்
மறைசெய்தியியல் (ஆங்கிலம் - Steganography) (ஸ்டிகனோகிராபி), என்பது அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வேறு ஒருவருக்கும் அங்கு ஒரு செய்தி இருக்கிறது என்கிற சந்தேகமே தோன்றாத வகையில், மறைசெய்திகளாக செய்திகளை எழுதும் கலை மற்றும் அறிவியல் ஆகும். இது புலப்பாடுக்கு தெளிவற்று இருப்பதன் மூலம் செய்தியைப் பாதுகாக்கிறது. ஸ்டிகனோகிராபி என்கிற வார்த்தை கிரேக்க மூலத்தில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் “மறைபொருளுடன் எழுதுவது” என்பதாகும். இந்த பதத்தின் முதல் பதிவுற்ற பயன்பாடு என்பது 1499 ஆம் ஆண்டில் ஜோஹனஸ் ட்ரைதிமியஸ் எழுதிய ஸ்டிகனோகிராபியா புத்தகத்தில் வெளிப்பட்டது. ஒரு மந்திரப் புத்தகமாக வெளிவந்த இதில் மறைகுறியீட்டியலும் (கிரிப்டோகிராபி) மறைசெய்தியியலும் மிகச் சிறந்த வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. பொதுவாக செய்திகள் படங்கள், கட்டுரைகள், கொள்முதல் பொருட்களுக்கான பட்டியல், அல்லது வேறு ஏதேனும் இணைப்புஉரை ஆகிய வேறு ஏதோ ஒன்று போலிருக்கும். ஒரு அந்தரங்க கடிதத்தின் புலப்படும் வரிகளுக்கு இடையே மறைசெய்தி ஒரு புலப்படாத மையினால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மறைகுறியீட்டியல் (கிரிப்டோகிராபி) மட்டும் கொண்டிருப்பதைத் தாண்டி மறைசெய்தியியலின் அனுகூலம் என்னவென்றால், அந்த செய்திகள் கவனத்தைக் கவர்வதாய் இருக்காது. குறியீடாக்கப்பட்டிருப்பது பார்வைக்கு வெளிப்படையாய் புலப்படும் சமயத்தில், அது எவ்வளவு தான் உடைக்க முடியாததாய் இருந்தாலும், சந்தேகத்தை நிச்சயமாய்க் கிளப்பும் என்பதோடு குறியீடாக்கம் சட்டவிரோதமாக இருக்கும் நாடுகளில் அவை தானாகவே குற்றமிழைத்தாகி விடும்.[1] எனவே, மறைகுறியீட்டியல் (கிரிப்டோகிராபி) என்பது ஒரு செய்தியின் உள்ளடக்கத்தைப் பாதுகாக்கிற அதே சமயத்தில், மறைசெய்தியியல் செய்திகள் மற்றும் தொடர்பு கொள்ளும் நபர்கள் இரண்டையுமே பாதுகாக்கிறது என்று கூறலாம். கணினிக் கோப்புகளுக்குள் தகவல்களை மறைத்து வைப்பதும் மறைசெய்தியியலில் அடங்கியதாகும். எண்மருவி மறைசெய்தியியலில், மின்னணு தகவல்தொடர்பில் ஒரு ஆவணக் கோப்பு, படக் கோப்பு, நிரல் அல்லது நெறிமுறை போன்ற ஒரு போக்குவரத்து அடுக்குக்குள்ளாக ஸ்டிகனோகிராபி குறிமுறைகள் இருக்கலாம். மீடியா கோப்புகள், அவற்றின் பெரிய அளவுகளின் காரணமாக, மறைசெய்தியியல் கடத்தலுக்கு மிக உகந்தவையாக இருக்கின்றன. ஒரு எளிய உதாரணமாக, ஒரு வழக்கமான படக் கோப்பினைக் கொண்டு துவங்கும் ஒருவர், அதில் ஒவ்வொரு 100வது பிக்சலையும் ஒரு எழுத்தைக் குறிக்கும் வகையில் திருத்த முடியும். இதற்கென கவனித்துப் பார்க்காத ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு இந்த வித்தியாசம் சாதாரணமாய்க் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிக நுட்பமானதாய் இருக்கும். புராதன மறைசெய்தியியல்:மறைசெய்தியியலின் முதல் பதிவு பெற்ற பயன்பாடுகள் கிமு 440 காலத்திலேயே துவங்கி விட்டன. ஹெரோடோடஸ் தனது தி ஹிஸ்டரிஸ் ஆஃப் ஹெரோடோடஸ் படைப்பில் மறைசெய்தியியலின் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகிறார்.[2] கிரீஸ் தாக்குதலைச் சந்திக்க இருப்பதைக் குறித்து டெமாராடஸ் ஒரு எச்சரிக்கை அனுப்பினார். ஒரு மெழுகுப் பலகையில் அதன் பரப்பில் மெழுகு பூசப்படும் முன்னதாக அந்த பலகையில் நேரடியாய் செய்தியை எழுதியிருந்தார். மெழுகுப் பலகைகள் அக்காலத்தில் அழித்து மீண்டும் பயன்படுத்தும் எழுது பரப்புகளாக பொதுவான பயன்பாட்டில் இருந்தன; சிலசமயங்களில் சுருக்கெழுத்துக்கும் பயன்பட்டன. இன்னொரு பழங்கால உதாரணம் ஹிஸ்டியேயஸ், தனது மிகவும் நம்பகமான அடிமையின் தலையை மொட்டையடித்து அதில் செய்தியை பச்சை குத்தி விடுவார். அந்த அடிமைக்கு முடி வளர்ந்ததும், அந்த செய்தி மறைந்திருப்பதாய் ஆகி விடும். பெர்சியர்களுக்கு எதிரான ஒரு கலகத்தைத் தூண்டும் நோக்கத்தோடு அவர் இதனைச் செய்தார். மறைசெய்தியியல் தொழில்நுட்பங்கள்:உருரீதியான மறைசெய்தியியல்:சமீபத்திய வரலாற்று காலம் மற்றும் இன்றும் மறைசெய்தியியல் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. சாத்தியப்பாடுகள் முடிவில்லாது உள்ளன, அவற்றில் தெரிந்த உதாரணங்களில் சில: ![]()
செய்தியைப் படிக்க முடிந்ததை குறித்து ஹெரோடோடஸ் குறிப்பிடுகிறார். இந்த செய்தி பெர்சியாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் குறித்து கிரீஸ் நாட்டுக்கான எச்சரிக்கை செய்தியை சுமந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழிமுறைக்கென குறைபாடுகள் உள்ளது வெளிப்படை. ஏனெனில் அடிமையின் முடி வளரும் வரை காத்திருப்பதால் நேரும் தாமதம், மற்றும் ஒரு தடவை பயன்படுத்தி விட்ட பின் அடுத்தடுத்த செய்திகளுக்கு கூடுதலான அடிமைகள் தேவைப்படுவது ஆகியவை குறைபாடுகளாகும். இரண்டாம் உலகப் போரில், பிரெஞ்சு எதிர்ப்புப்படையினர் தகவல் சுமப்பவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத மை கொண்டு சில செய்திகளை எழுதி அனுப்பினர்.
எண்மருவி மறைசெய்தியியல்:
தனிநபர் கணினியின் நுழைவை அடுத்து 1985 ஆம் ஆண்டில் நவீன மறைசெய்தியியல் காலடி எடுத்து வைத்தது. செவ்வியல் மறைசெய்தியியல் பிரச்சினைகளுக்கு இது புதுவடிவம் கொடுத்தது.[4] அதனையடுத்த வளர்ச்சி மந்தமாகத் துவங்கினாலும், அதன்பின் வேகமெடுத்திருக்கிறது என்பதை இப்போது இருக்கும் ‘மறைசெய்தியியல்’ நிரல்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூறலாம். சுமார் 725க்கும் அதிகமான மறைசெய்தியியல் பயன்பாடுகள் மறைசெய்தியியல் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] எண்மருவி மறைசெய்தியியலில் பினவருவன அடங்கும்: ![]() ![]()
அச்சிட்ட மறைசெய்தியியல்:எண்மருவி மறைசெய்தியியலில் இருந்து வரும் இறுதிவடிவம் அச்சிட்ட ஆவணங்களின் வடிவில் இருக்கலாம். வெளிப்பட்ட உரை யாக இருக்கும் ஒரு செய்தி முதலில் மரபு வழியான முறைகளைக் கொண்டு மறைகுறியீடுகளாய் மாற்றப்பட்டு ஒரு சைபர்டெக்ஸ்ட் உருவாக்கப்படலாம். பின், கபடமற்ற வெளி உரை ஒன்றுக்குள் இந்த சைபர்டெக்ஸ்ட் வைக்கப்பட்டு, ஸ்டிகோடெக்ஸ்ட் உருவாகிறது. உதாரணமாக வெளி உரையின் எழுத்துக்கள் அளவு, இடைவெளி, அச்சுமுகம், அல்லது மற்ற பண்புகள் இந்த ரகசிய செய்தியைக் கொண்டிருக்கும் வகையில் மாற்றிக் கொள்ளப்படலாம். இந்த நுட்பத்தை அறிந்த ஒருவர் மட்டுமே அந்த செய்தியைப் பெற்று அதன் மறைகுறியீடுகளை விலக்கி செய்தியை மீட்க முடியும். இத்தகையதொரு நுட்பமாக பேகான்’ஸ் சைபரை ஃபிரான்சிஸ் பேகான் உருவாக்கினார். கூடுதலான உபயோக வார்த்தைகள்:பொதுவாக, சற்று மரபார்ந்த வானொலி மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுவதை ஒத்த (அல்லது அதற்கு சீரான) வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும், மென்பொருளில் குறிப்பாகத் தோன்றக் கூடிய, எளிதில் குழப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் சில பதங்களை சுருக்கமாக விவரிப்பது பொருத்தமாக இருக்கும். இவை எண்மருவி மறைசெய்தியியல் அமைப்புகளுக்கு மிகவும் பொருத்தமுற்றவையாக இருக்கும். பேலோடு (payload) என்பது ரகசியமாய் தகவல்தொடர்பு செய்ய வேண்டிய தரவின் அளவு. கேரியர் (carrier) என்பது இந்த பேலோட் மறைக்கப்படும் சிக்னல், கற்றை, அல்லது தரவுக் கோப்பு; இது “சானல் ” (இது ”JPEG image" போன்று உள்ளீட்டு வகையைக் குறிக்கவே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.) என்பதில் இருந்து மாறுபட்டதாகும். பேலோடு மறைக்கப்பட்ட பின் கிடைக்கும் சமிக்ஞை, கற்றை அல்லது தரவுக் கோப்பு சில சமயங்களில் தொகுப்பு (பேக்கேஜ்) என்று, மறைசெய்திக் கோப்பு , அல்லது ரகசியச் செய்தி என்று குறிப்பிடப்படுகின்றது. பேலோடு குறியீடாக்கம் செய்வதற்கு எத்தனை சதவீதம் பைட்டுகள், மாதிரிகள், அல்லது பிற சமிக்ஞை கூறுகள் திருத்தப்படுகின்றன என்பது என்கோடிங் டென்சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 0 மற்றும் 1 இந்த இரண்டு எண்களுக்கு இடையில் ஒன்றாக வெளிப்படுத்தப்படும். நிறைய கோப்புகள் கொண்டதொரு தொகுப்பில், பேலோடு கொண்டிருக்கலாம் எனக் கருதப்படும் கோப்புகள் சந்தேகத்திற்குரிய கோப்புகளாக க் கருதப்படுகின்றன. இந்த சந்தேகம் சில வகை புள்ளிவிவர பகுப்பாய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டிருந்தால், அது ஒரு கேன்டிடேட் (candidate) என்று குறிப்பிடப்படலாம். எதிர் நடவடிக்கைகள்:உருரீதியாக எழுதப்பட்டிருக்கும் மறைசெய்தியைக் கண்டுபிடிக்க கவனமான உரு ஆய்வு செய்யப்பட வேண்டும். உருப்பெருக்கல், ரசாயனங்கள் மற்றும் புறஊதாக் கதிர்கள் ஆகியவை உள்ளிட்டவற்றை இதற்குப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். ஏராளமான பேர்களை சக நாடுகளைக் கண்காணிக்கும் பொருட்டு நியமித்திருக்கும் நாடுகளில் கூட, இது ஆதாரவள பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் நேரத்தை சாப்பிடும் ஒரு நிகழ்முறையாக இருக்கிறது. ஆயினும், சில சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது சிறைகள் அல்லது போர்க் கைதிகளுக்கான முகாம்கள் போன்ற சில இடங்களில் இருந்து பரிவர்த்தனை செய்யப்படும் அஞ்சல்களை மட்டும் சோதனை செய்வது சாத்தியமானதே. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், போர்க் கைதி முகாம் அஞ்சல்கள் மீதான கண்காணிப்பை எளிதாக்க சிறப்பு ரசாயன காகிதம் தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டது. இது புலப்படாத மையையும் காட்டிக் கொடுத்து விடும். பேப்பர் டிரேட் ஜர்னலின் ஜூன் 24, 1948 பதிப்பில் அமெரிக்க அரசாங்க அச்சு அலுவலகத்தின் தொழில்நுட்ப இயக்குநரான மோரிஸ் எஸ்.கான்ட்ரோவிட்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில், இந்த காகிதத்தின் உருவாக்கம் சம்பந்தப்பட்ட பொதுவான வார்த்தைகள் விவரிக்கப்படுகின்றன. இதன் மூன்று மாதிரிவடிவங்கள் சென்ஸிகோட் , அனிலித் , மற்றும் கோயடலித் காகிதம் என பெயரிடப்பட்டிருந்தது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த ஜெர்மானிய போர்க்கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட அஞ்சலட்டைகள் மற்றும் எழுதுபொருட்கள் தயாரிப்பில் இவை பயன்பட்டிருந்தன. முகாம் கைதி ஏதேனும் ஒரு ரகசிய செய்தியை எழுத முயற்சித்திருந்தால், சிறப்பு காகிதம் அதனைப் புலப்படுத்தி விடும். குறைந்தது இரண்டு அமெரிக்க காப்புரிமைகளேனும் இந்த தொழில்நுட்பத்திற்காக வழங்கப்பட்டன. ஒன்று திரு.கான்ட்ரோவிட்ஸ்க்கு எண். 2,515,232, “நீர்-கண்டறியும் காகிதம் மற்றும் நீர்-கண்டறியும் பூச்சு சேர்க்கை”க்காக ஜூலை 18, 1950 அன்று வழங்கப்பட்டது; இன்னொன்று எண். 2,445,586, ”ஈரப்பதம்-உணரும் காகிதம் மற்றும் அதன் தயாரிப்பு”க்கு ஜூலை 20, 1948 அன்று வழங்கப்பட்டது. இதேபோல் இன்னொரு உத்தியாக, நீரில் கரையும் மை கொண்டு கோடு போட்ட காகிதம் வழங்கப்படுவதும் இருந்தது. நீர் அடிப்படையிலான கண்ணுக்குத் தெரியாத மை படும்போது இந்த கோட்டு மை “ஒழுகி” விடும். கணினி அறிவியலில், மறைசெய்தியியல்ரீதியாக குறியீடாக்கம் செய்யப்பட்ட தொகுப்புகளைக் கண்டறிவது ஸ்டிகனாலிஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. எப்படி இருப்பினும், திருத்தப்பட்ட கோப்புகளைக் கண்டறிவதற்கான எளிய வழியாய் இருப்பது அவற்றை நன்கறிந்த மூலக் கோப்புகளுடன் ஒப்பிடுவதே ஆகும். உதாரணமாக, ஒரு இணையதளத்தில் வரைகலைப் படங்கள் வழியே நகரும் தகவல்களைக் கண்டறிய, இந்த ஆதாரங்களின் சரியான நகல்களை ஒரு பகுப்பாய்வாளர் வைத்திருப்பார். அவர் தளத்தின் தற்போதைய உள்ளடக்கத்துடன் அதனை ஒப்பிட்டு ஆராய்வார். கேரியர் ஒன்றே என அனுமானித்துக் கொண்டால், இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் தான் பேலோடைக் காட்டுவதாய் அமையும். பொதுவாக, மிக உயர்ந்த அழுத்த விகிதம் பயன்படுத்தி எழுதுவது மறைசெய்தியியலை சிக்கலாக்கும், ஆனாலும் சாத்தியமற்றதாக்குவதில்லை. அழுத்துவதால் தோன்றும் பிழைகள் தரவு ஒளிந்து கொள்வதற்கு இடமளிக்கிறது என்றாலும், உயர்ந்த அழுத்த விகிதங்கள் பேலோடு மறைத்து வைப்பதற்கு இருக்கும் இடத்தையும் குறைத்து விடுகிறது. இதனால் குறியீடாக்க அடர்த்தி அதிகரித்து எளிதாகக் கண்டறிய வழிவகுத்து விடுகிறது (மிதமிகுதியான சந்தர்ப்பங்களில், சாதாரணமாய் பார்த்தாலே கூட கண்டுபிடிக்கக் கூடியதாய் ஆகி விடும்). பயன்பாடுகள்நவீன அச்சு எந்திரங்களின் பயன்பாடுமறைசெய்தியியல் சில நவீன அச்சு எந்திரங்களிலும் பயன்படுகிறது. எச்பி மற்றும் ஜெராக்ஸ் நிறுவன வண்ண லேசர் பிரிண்டர்கள் இதில் அடக்கம். ஒவ்வொரு பக்கத்திலும் மிகச் சிறிய மஞ்சள் புள்ளிகள் சேர்க்கப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படாத அளவிலான இந்த புள்ளிகள் அச்சு எந்திரத்தின் வரிசை எண்களின் குறியீட்டையும், அத்துடன் தேதி மற்றும் நேர முத்திரைகளையும் கொண்டிருக்கும்.[6] நவீன நடைமுறையில் இருந்தான உதாரணம்ரகசிய செய்தியுடன் ஒப்பிடுகையில் உறையிடும் செய்தி (தரவு உள்ளடக்க பதத்தில் - பிட்டுகளின் எண்ணிக்கை) எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ ரகசிய செய்தியை மறைப்பது அவ்வளவு எளிதாக இருக்கும். இந்த காரணத்தால், இணையத்தில் மற்றும் பிற தகவல் தொடர்பு ஊடகங்களில் எண்மருவிப் படங்கள் (இவை தரவின் பெரிய அளவுகளைக் கொண்டிருக்கும்) செய்திகளை மறைக்கப் பயன்படுகின்றன. எவ்வளவு பொதுவாய் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாய் தெரியவில்லை. உதாரணமாக, ஒரு 24-பிட் பிட்மேப்பில் ஒவ்வொரு பிக்சலிலும் ஒவ்வொரு 8 பிட்டும் மூன்று வண்ண மதிப்புகளை (சிவப்பு, பச்சை, மற்றும் நீலம்) குறிப்பிடும். நீல மதிப்பை மட்டும் எடுத்துக் கொண்டால் 28 வித்தியாசமான நீல மதிப்புகள் இருக்கலாம். நீலத்திற்கான மதிப்பில் 11111111 மற்றும் 11111110 க்கு இடையிலான வித்தியாசம் மனித விழிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவுடையதாய் இருக்கலாம். எனவே, மிக முக்கியத்துவம் குறைந்த பிட் (ஏறக்குறைய கண்டறியமுடியாத வகையில்) வண்ணம் குறித்ததல்லாத பிற தகவல்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். பச்சை மற்றும் சிவப்புக்கும் நாம் இதனைச் செய்தால் ஒவ்வொரு மூன்று பிக்சல்களுக்கும் ஆஸ்கி உரையின் ஒரு எழுத்தை நாம் பெற முடியும். கொஞ்சம் வடிவான வகையில் கூறுவதென்றால், மறைசெய்தியியல் குறியீடாக்கத்தை கண்டறிவதை கடினமாக்க செய்ய வேண்டியது என்னவென்றால், பேலோடு (ரகசியமாய் பொதிக்கப்படும் சிக்னல்கள்) கேரியருக்கு (மூல சிக்னல்) ஏற்படுத்தும் மாற்றங்கள் கண்களுக்குப் புலப்படுவது (அத்துடன் புள்ளிவிவரரீதியாகவும்) மிகக் குறைவான அளவில் இருக்கும் வகை செய்வதாகும்; அதாவது, மாற்றங்கள் கேரியரின் சத்த தளத்தில் இருந்து பிரித்தறியமுடியாததாய் இருக்கும். எந்த ஒரு ஊடகமும் கேரியராக செயலாற்ற முடியும் என்றாலும், பெரும் அளவிலான உபரி அல்லது அழுத்தத்தக்க தகவல்களுடனான ஊடகம் தான் மிகவும் பொருத்தமானது. தகவல் சித்தாந்த பார்வையில் இருந்து பார்த்தால் இதன் அர்த்தமானது, ‘மேற்பரப்பு’ சமிக்ஞைக்கு அவசியப்படுவதை விட அதிகமான கொள்திறனை அலைவரிசை கொண்டிருக்க வேண்டும். அதாவது, அங்கே உபரிநிலை இருக்க வேண்டும் என்பதாகும். ஒரு எண்மருவி படிமத்தில், இது படக் கூறில் இருந்தான சத்தமாக (noise) இருக்கலாம், ஆனால் எண்மருவி ஒலியைப் பொறுத்தவரை, இது பதிவு செய்யும் தொழில்நுட்பங்கள் அல்லது பெருக்க சாதனத்தில் இருந்தான சத்தமாகவும் இருக்கலாம். பொதுவாக, ஒரு அலைமருவி சமிக்ஞையை எண்மருவியாக்கும் மின்னணுவியலானது தெர்மல் சத்தம், ஃப்ளிக்கர் சத்தம், மற்றும் ஷாட் சத்தம் போன்ற பல்வேறு சத்தங்களால் பாதிப்புறுகின்றன. மறைந்திருக்கும் தரவுக்கு ஒரு சத்த உறையாக பயன்படுத்திக் கொள்ளத்தக்க அளவுக்கு இந்த சத்தமானது கைப்பற்றிய எண்மருவி தகவலுக்கு போதுமான வித்தியாசங்களை வழங்குகிறது. இதனுடன் சேர்த்து, இழப்புடனான அழுத்த செயல்முறைகள் (JPEG போன்றவை) எப்போதும் அழுத்தம்நீக்கப்பட்ட தரவில் சற்று பிழையை அறிமுகப்படுத்துகின்றன; இதனையும் மறைசெய்தியியலுக்கு பயன்படுத்திக் கொள்வது சாத்தியமே. எண்மருவி நீர்க்குறியீடுக்கு மறைசெய்தியியல் பயன்படுத்தப்படலாம். இதில் ஒரு செய்தி (இது வெறும் ஒரு அடையாளம்காட்டியாக மட்டும் இருக்கிறது) ஒரு படத்தில் ஒளிந்திருக்கும். அதன் ஆதாரம் பின்தொடரப்பட்டு சரிபார்க்கப்பட முடியும். பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சர்ச்சைமறைசெய்தியியல் செய்திகள் மின்னஞ்சல் செய்திகளில், அதிலும் குறிப்பாக கூள மின்னஞ்சல்களில் மறைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதும் போது, கூள அஞ்சல் என்னும் கருத்தே ஒரு புதிய வெளிச்சத்தைப் பெறுகிறது. ”சாஃபிங் மற்றும் வினோயிங்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனுப்புநர் அஞ்சல் செய்திகளை அகற்றி விட்டு தங்களது தடங்களை உடனடியாக நிரப்பி வைக்க முடியும். ![]() பயங்கரவாதிகள் மறைசெய்தியியல் நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த வதந்திகள் முதல்முதலாய் யுஎஸ்ஏ டுடே நாளிதழில் வெளிவந்தது. பிப்ரவரி 5, 2001 அன்று ”பயங்கரவாத கட்டளைகள் இணையவெளியில் மறைவாய் உலாவருகின்றன” மற்றும் “இணைய குறியீடாக்க தொழில்நுட்பத்தின் பின்னால் பயங்கரவாதக் குழுக்கள் ஒளிந்து கொள்கின்றன’’ ஆகிய தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. அதே வருடம் ஜூலையில், ஒரு கட்டுரை இன்னும் துல்லியமாய் எழுதியது: "தீவிரவாதிகள் ஜிகாத்துக்கு இணையத்தில் வலை பின்னுகின்றனர்”. அந்த கட்டுரையில் இவ்வாறு மேற்கோளிடப்பட்டது: “சமீப காலத்தில், அல் காயிதாவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான ரகசியக் குறியீட்டு செய்திகளை ஏல விற்பனை இணையத்தளமான eBay.com தளத்தில் வெளியாகும் எண்மருவிப் புகைப்படங்களில் மறைத்து அனுப்புகின்றனர் ”. உலகெங்கும் உள்ள மற்ற ஊடகங்களும் இந்த ஊகங்களை குறிப்பாக 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பலமுறை வெளியிட்டன. ஆனால் ஆதாரங்களை அவை ஒருபோதும் காட்டவில்லை. இத்தாலிய செய்தித்தாளான கோரியெரெ டெல்லா செரா வெளியிட்ட செய்தியில், மிலனில் உள்ள வியா குவாரன்டா மசூதியில் பிடிபட்ட அல் கெய்தா பிரிவினர் தங்களது கணினிகளில் ஆபாசப்படங்களைக் கொண்டிருந்தனர். இந்த படங்கள் எல்லாம் ரகசிய செய்திகளை ஒளித்து வைக்க பயன்பட்டவையாகும் என்று கூறியது. (ஆயினும் வேறு எந்த இத்தாலிய செய்தித்தாளும் இது பற்றி எப்போதும் செய்தி வெளியிடவில்லை). யுஎஸ்ஏ டுடே கட்டுரைகள் பழம்பெரும் அயலுறவு செய்தியாளரான ஜேக் கெல்லியால் எழுதப்பட்டவையாகும். செய்திகளையும் ஆதாரங்களையும் திரித்ததாகக் கூறி இவர் 2004 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார். அக்டோபர் 2001 இல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில், அல்கெய்தா படங்களில் செய்திகளை மறைக்க மறைசெய்தியியல் நுட்பங்களைப் பயன்படுத்தியது என்றும், அந்த படங்கள் மின்னஞ்சல் வழியாக (யூஸ்நெட் வழி அனுப்பப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகம்) அனுப்பப்பட்டன என்றும், செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யவும் அதனைச் செயல்படுத்தவும் இவ்வாறு அவர்கள் செய்தனர் என்றும் தெரிவித்தது. 2006 ஏப்ரலில் வெளியான தி பெடரல் பிளான் ஃபார் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பர்மேஷன் அஸூரன்ஸ் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட்[7] பின்வரும் கூற்றுகளை அடக்கியிருந்தது:
இதுதவிர, ஜிகாதிக்களுக்கான பயிற்சி கையேடான ”தி டெக்னிக்கல் முஜாஹித்” என்னும் இணையத்தின் ”பயங்கரவாதப் பயிற்சி நிரல்கூறு” ஒன்று, “ரகசிய தகவல்தொடர்பு மற்றும் படங்களில் ரகசியங்களை மறைப்பது” என்னும் தலைப்பில் ஒரு பிரிவைக் கொண்டிருந்தது.[8][சான்று தேவை] இவையெல்லாம் இருந்தாலும், பயங்கரவாதிகள் கணினி மறைசெய்தியியலைப் பயன்படுத்திய நிகழ்வு என்று ஒன்றும் வெளிவரவில்லை . அல் கெய்தாவின் மறைசெய்தியியல் பயன்பாடு என்பது சற்று எளிமையானது: 2008 ஆம் ஆண்டில், ரங்சீப் அக்மது என்னும் ஒரு பிரித்தானிய முஸ்லீம் அல் காயிதா தொலைபேசி எண்கள் கொண்ட ஒரு முகவரி புத்தகத்தை கண்ணுக்குப் புலப்படாத மை கொண்டு எழுதி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது பயங்கரவாதக் குற்றம் உறுதி செய்யப்பட்டது.[9] மேலும் காண்க
மேற்கோள்கள்
குறிப்புதவிகள்
கூடுதல் வாசிப்பு
புற இணைப்புகள்
உரை மறைக்கும் கருவிகள்ஆன்லைன்:
பதிவிறக்கத்தக்கவை:
கோப்பு மறைக்கும் கருவிகள்இணைய இணைப்பில்:
பதிவிறக்கத்தக்கவை:
ஸ்டிகனாலிஸிஸ் கருவிகள்
|
Portal di Ensiklopedia Dunia