மலாக்கா முதலமைச்சர்
மலாக்கா முதலமைச்சர் (ஆங்கிலம்: Chief Minister of Malacca; மலாய்: Ketua Menteri Melaka); என்பவர் மலேசிய மாநிலமான மலாக்கா மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆகும். மலாக்கா மாநில சட்டமன்றத்தின் (Malacca State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார். தற்போது மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் உள்ளவர் அப்துல் ரவுப் யூசோ. இவர் 31 மார்ச் 2023 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மலாக்கா மாநிலத்தின் 13-ஆவது முதலமைச்சர் ஆவார். நியமனம்மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மலாக்கா யாங் டி பெர்துவா எனும் மலாக்கா ஆளுநர்; முதலில் முதலமைச்சரை மலாக்கா மாநிலத்தின் மலாக்கா மாநில ஆட்சிக்குழுவின் தலைவராக நியமிப்பார். அவ்வாறு நியமிக்கப்படும் ஒரு முதலமைச்சர், அப்போதைய மாநில சட்டமன்ற அமர்வில், ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். அத்துடன் மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர் ம்லேசியக் குடியுரிமை பெற்றவராகவும்; அல்லது பதிவு மூலம் மலேசியக் குடிமகன் தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில், மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 10 அல்லது நான்கிற்கும் குறையாத உறுப்பினர்களை மாநில ஆட்சிக்குழுவில் மலாக்கா யாங் டி பெர்துவா நியமிப்பார். பதவி உறுதிமொழிஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் மலாக்கா யாங் டி பெர்துவா முன்னிலையில் பதவி உறுதிமொழி; பற்று உறுதிமொழி மற்றும் இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆட்சிக்குழுவினர் கூட்டாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அத்துடன் அவர்கள் வருமானம் தரும் எந்த ஒரு பதவியையும் வகிக்கக் கூடாது; அல்லது கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்தும் எந்த ஒரு வணிகம் அல்லது தொழிலிலும் ஈடுபடக்கூடாது என்று உறுடிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.. நம்பிக்கையில்லா வாக்கெடுப்புமாநில அரசாங்கம் தனது மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால்; குறிப்பாக ஒரு நிதி மசோதாவை நிறைவேற்ற முடியாவிட்டால்; அல்லது மாநிலச் சட்டமன்றம் ஆளும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால்; முதலமைச்சர் உடனடியாகப் பதவிதுறப்பு செய்ய வேண்டும். மாற்று மலாக்கா முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பது மலாக்கா ஆளுநரின் பொறுப்பு ஆகும். மலாக்கா ஆளுநர் அனுமதிக்கும் காலம் வரையில்; முதலமைச்சர் பதவி வகிக்காத மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் பதவியில் இருப்பார். ஒரு தேர்தலில் தோல்வி அடைந்த முதலமைச்சர் அவர் தம் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து; அல்லது ஒரு முதலமைச்சரின் மரணத்தைத் தொடர்ந்து; ஆளும் கட்சியால் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபரை புதிய முதலமைச்சராக மலாக்கா யாங் டி பெர்துவா நியமிப்பார். அதிகாரங்கள்ஒரு முதலமைச்சரின் அதிகாரம் பல வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு முதலமைச்சர் அவரின் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அல்லது அவருடைய அரசாங்கம் சட்ட மன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியுற்றால்; புதிய ஒரு மாநிலத் தேர்தலுக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும்; அல்லது அந்த முதலமைச்சர் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது ஆளுநரானால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மாநிலத்தின் முக்கியமான ஒரு கொள்கை தொடர்பான சட்டத்தை, மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சரால் நிறைவேற்ற முடியாமல் போனால், அல்லது அவர் மீதோ அல்லது அவரின் ஆளும் கட்சியின் மீதோ நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுமானால்; அந்த முதலமைச்சர் பதவிதுறப்பு செய்ய வேண்டும்; அல்லது மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும். தற்காலிக மாநில அரசின் முதலமைச்சர்முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மலாக்கா ஆளுநரால் கலைக்கப்பட்ட மாநிலச் சட்டமன்றம் அதன் முதல் கூட்டத்தின் தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்படலாம். மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து பொதுத் தேர்தலை 60 நாட்கள் வரை தாமதப்படுத்த மாநில அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது. மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும். வழக்கமாக, ஒரு மாநிலச் சட்டமன்றம் கலைக்கப் படுவதற்கும் அடுத்த மாநிலச் சட்டமன்றம் கூட்டப் படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், முதலமைச்சர் மற்றும் அவரின் நிர்வாகக் குழுவினரும் தான் காபந்து அரசாங்க பதவிகளில் (Caretaker Government) இருப்பார்கள். மலாக்கா முதலமைச்சர் பட்டியல்1957-ஆம் ஆண்டு முதல் மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் பட்டியல் பின்வருமாறு:[1][2] அரசியல் கட்சிகள்:
வாழும் முன்னாள் முதலமைச்சர்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia