மவுண்ட் ரஷ்மோர்
மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடம் கட்ஸோன் போர்க்லம் (1867–1941) என்பவரால் சௌத் டகோடா நகரில் கீஸ்டோன் என்ற இடத்தில் கிரானைட் சிற்பமாக செதுக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். அமெரிக்க ஒன்றியத்தின் 150 ஆண்டு கால வரலாற்றை விவரிக்கும் வண்ணம் முன்னாள் அமெரிக்க ஒன்றிய அதிபர்களின் தலைகளை (இடமிருந்து வலம்): ஜார்ஷ் வாஷிங்டன் (1732–1799), தாமஸ் ஜெபர்சன் (1743–1826), தியோடோர் ரூஸ்வெல்ட் (1858–1919), மற்றும் ஆப்ரகாம் லிங்கன் (1809–1865) சிற்பமாக 60-அடி (18 m) கொண்டு அமெரிக்க ஒன்றிய அதிபர்கள் நினைவிடத்தில் அமையப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகும்.[1] இந்த நினைவிடம் பரப்பளவிலும் [2] கடல் மட்டத்திலிருந்து 5,725 அடிகள் (1,745 m) உயரத்திலும் உள்ளது.[3] அமெரிக்க ஒன்றிய உள்நாட்டுத்துறை செயலகமான தேசிய பூங்கா சேவை மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தோராயமாக இரண்டு மில்லியன் மக்கள் இந்த நினைவிடத்தைப் பார்வையிட வருகின்றனர்.[4] வரலாறுலகோடா சியோக்ஸ் சிக்ஸ் க்ராண்ட்ஃபாதர்ஸ் என்று முதலில் அறியப்பட்டது. 1885 ஆம் ஆண்டு காலத்திலான படையெடுப்பின் போது நியூ யார்க் நகரத்தின் சிறப்புமிக்க வழக்கறிஞராக இருந்த சார்லஸ் ஈ. ரஷ்மோர் என்பவரின் நினைவாக இந்த மலைக்கு மவுண்ட் ரஷ்மோர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[5] ஆரம்பத்தில் சௌத் டகோடா மாவட்டத்தில் உள்ள ப்ளாக் ஹில்ஸ் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வரவை அதிகரிக்க ரஷ்மோர் சிற்பவேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிக்குழு மற்றும் அதிபர் கால்வின் கூலிட்ஜ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு இந்த திட்டம் அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிக்குழுவின் ஒப்புதலைப் பெற்றது. சில சேதங்களுடன் எந்தவித இறப்பும் இல்லாமல் இந்த சிற்ப வடிவமைப்பு 1927 ஆம் ஆண்டு தொடங்கி 1941 ஆம் ஆண்டில் முடிவுற்றது.[4] ![]() சிக்ஸ் கிராண்ட்ஃபாதர்ஸ் என்று இருந்த போது, லகோடா தலைவர் ப்ளாக் எல்க் என்பவரின் புனிதப் பயணம் முடிவுற்ற ஹார்னே பீக் என்ற வழியின் ஒரு பகுதியாக இந்த மலை இருந்தது. 1875 ஆம் ஆண்டு முதல் 1877 ஆம் ஆண்டு வரை இருந்த தொடர்ச்சியான இராணுவ படையெடுப்புகளைத் தொடர்ந்து அமெரிக்க ஒன்றியம் இந்த பகுதியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது, 1868 ஆம் ஆண்டின் லேரமீ கோட்டை உடன்படிக்கை என்ற உரிமை சாசனம் அடிப்படையில் தற்போதும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன (சர்ச்சைகள் என்ற பகுதியைக் காண்க). வெள்ளை நிற அமெரிக்க குடியேற்றத்தார் இந்த சிகரத்தை கோகர் மவுண்டைன் (Cougar Mountain), சுகர்லோஃப் மவுண்டைன் (Sugarloaf Mountain), ஸ்லாபர் மவுண்டைன் (Slaughterhouse Mountain), மற்றும் கீஸ்டோன் க்ளிஃப்ஸ் (Keystone Cliffs) என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். ரஷ்மோர், டேவிட் ஸ்வான்ஸே (இவரது மனைவி கேரீ எழுத்தாளர் லாரா இன்கால்ஸ் வில்டர் மற்றும் பில் சைல்ஸ் ஆகியோரின் சகோதரி ஆவார்) ஆகியோரின் பயணத்தின் போது மவுண்ட் ரஷ்மோர் என்று பெயர் மாற்றப்பட்டது.[7] 1923 ஆம் ஆண்டு மவுண்ட் ரஷ்மோரை சௌத் டகோடாவின் சுற்றுலாத் தளமாக மாற்றும் சிந்தனை வரலாற்றாசிரியர் டோனே ராபின்சன் அவர்களுக்கு உதித்தது. சிற்ப கலைஞர் குட்ஸோன் போர்கலம் என்பவரை ப்ளாக் ஹில்ஸ் பகுதிக்கு பயணம் செய்து அங்கு சிற்பம் செதுக்க இயலுமா என்பது பற்றி உறுதியளிக்குமாறு 1924 ஆம் ஆண்டு ராபின்சன் அறிவுறுத்தினார். ஜார்ஜியாவின் ஸ்டோன் மவுண்டேன் பகுதியில் பாஸ்-ரிலீஃப் நினைவுச்சின்னத்தை கான்பிடரேட் தலைவருகளுக்காக கான்பிடரேட் மெமோரியல் கார்வின்ங் என்ற பெயரில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டு உருவாக்கும் முயற்சியில் போர்க்லம் இருந்தார்.[8] நீடில்ஸ் என்று அறியப்படும் கிரானைட் தூண்களாக சிற்பங்களை வடிவமைப்பது ஆரம்ப திட்டமாக இருந்தது. ஊசி போன்ற தூண்கள் மிக மெல்லியதாக இருந்ததால் அவை சிற்பத்தை தாங்குவது கடினம் என்று போர்க்லம் உணர்ந்தார். தென்கிழக்கு பகுதியை நோக்கியவாறு மற்றும் அதிகளவு சூரிய ஒளி படும் விதத்தில் இருந்த மவுண்ட் ரஷ்மோர் பகுதியை தேர்வு செய்தார். மவுண்ட் ரஷ்மோரைக் கண்ட பிறகு, "இந்த வானத்தை நோக்கி அமெரிக்க பயணிக்கும்" என்று போர்க்லம் கூறினார்.[9] 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவு ஆணையத்தை அமெரிக்க கூட்டாட்சி மன்றம் (Congress) அங்கீகரித்தது.[9] குடியரசுக் கொள்கையைச் சார்ந்த இரண்டு நபர்களுடன் ஒரு மக்களாட்சி கொள்கையின் நபரும் அவர்களுடன் வாஷிங்டனையும் சேர்ந்து உருவமாக வைக்குமாறு அதிபர் கூலிட்ஜ் வற்புறுத்தினார்.[10] ![]() அமெரிக்க ஒன்றியத்தின் முதல் 150 ஆண்டுகள் வரலாறு பற்றிய நினைவாக அமெரிக்க ஒன்றியத்தின் அதிபர்கள் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடோர் ரூஸ்வெல்ட் மற்றும் ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரின் பிரம்மாண்டமான 60-அடி (18 மீ) சிற்பங்களை குட்ஸோன் போர்க்லம் மற்றும் 400 பணியாளர்கள் இணைந்து 1927 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் 1941 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை செதுக்கினர். குடியரசை பாதுகாத்தல் மற்றும் தங்களது காலத்தில் குடியரசை வலியுறுத்த பங்கு கொண்டதற்காக இந்த அதிபர்களை போர்க்லம் தேர்வு செய்தார்.[9][11] தாமஸ் ஜெபர்சனின் உருவம் முதலில் வாஷிங்கடன் உருவத்தின் வலது புறத்தில் அமைந்து இருந்தது வேலை முடிந்த பிறகு இந்த பாறை பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டது இதன் காரணமாக ஜெபர்சன் உருவம் வெடிப் பொருட்களால் உடைக்கப்பட்டு புதிய உருவம் வாஷிங்டன் உருவத்திற்கு இடது புறத்தில் செதுக்கப்பட்டது.[9] 1933 ஆம் ஆண்டு நேஷனல் பார்க் சர்விஸ் அமைப்பு மவுண்ட் ரஷ்மோரை தங்களது அதிகாரத்தின் கீழ் எடுத்துக் கொண்டது. இதன் அகக்கட்டமைப்பை செம்மைப்படுத்துவதன் மூலம் பொறியாளர் ஜூலியன் ஸ்பாட்ஸ் இந்த திட்டத்திற்கு உதவினார். எடுத்துக்காட்டாக, இவர் வைத்திருந்த புதிய தரம் கொண்ட நான்கு சக்கர வண்டியின் காரணமாக பணியாளர்கள் மவுண்ட் ரஷ்மோரின் உச்சிக்கு எளிதாக சென்றடைந்தனர். 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி வாஷிங்டனின் முகம் முழுமையாக முடிக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது. தாமஸ் ஜெபர்சனின் முகம் 1936 ஆம் ஆண்டிலும், ஆப்ரகாம் லிங்கனின் முகம் 1937 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியிலும் அர்ப்பணிக்கப்பட்டது. மக்கள்-உரிமைகளின் தலைவர் சூசன் பி. அந்தோனியின் தலையையும் இணைக்க வேண்டும் என்று அமெரிக்க ஒன்றியத்தின் கூட்டாட்சி மன்றத்தில் ஒரு மசோதா 1937 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது ஆனால் கூட்டரசு கோட்பாட்டின் நிதி ஒதுக்கீட்டின் படி இந்த தலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது இதன் படி இவைகள் முன்பே தொடங்கப்பட்டதாக இந்த மசோதாவில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டது.[12] 1939 ஆம் ஆண்டில் தியோடோர் ரூஸ்வெல்ட்டின் முகம் அர்ப்பணிக்கப்பட்டது. சிற்பக் கலையுடன் தொடர்புடைய கருவிகள் மற்றும் ஒரே மாதிரி காட்சியமைப்பு கொண்ட உருவங்களை வெளிப்படுத்தும்- ஸ்கல்படர் ஸ்டூடியோ 1939 ஆம் ஆண்டில் போர்க்லம் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இரத்த நாளத்தில் அடைப்பு காரணமாக 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போர்க்லம் இறந்தார். இவரது மகன் லிங்கன் போர்க்லம் இந்த திட்டத்தை தொடர்ந்தார். தலைப் பகுதியிலிருந்து இடுப்பு பகுதி[13] வரை செதுக்குவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் போதுமான அளவு தொகை ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் செதுக்குவது முடிக்கப்பட்டது.[9] லூசியானா பர்சேஸ் பகுதி வடிவத்தில் டெக்லரேசன் ஆப் இண்டிபெண்டன்ஸ், யூ.எஸ். கன்ஸ்டியூஸன், லூசியானா பர்சேஸ் நினைவாக எட்டு-அடி உயரமுள்ள எழுத்துக்களையும் மற்றும் பானாமா கால்வாய் பகுதிக்காக கையகப்படுத்தப்பட்ட அலாஸ்கா முதல் டெக்சாஸ் வரையிலான மற்ற ஏழு பகுதிகளின் பெயர்களையும் கொண்டிருக்கும் மிகப்பெரிய பலகையை அமைப்பது என்று போர்க்லம் திட்டமிட்டு இருந்தார்.[11] ![]() இந்தத் திட்டத்தின் மதிப்பு சுமார் 989,992.32 அமெரிக்க டாலர்களாகும்.[14][15] இவ்வளவு பெரிய சிற்ப செதுக்குதல் பணியினை நிறைவேற்றும் போது ஒருவரும் இறக்க வில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரலாற்று இடங்கள் பற்றிய தேசிய பதிவேட்டில் மவுண்ட் ரஷ்மோர் பட்டியலிடப்பட்டது. 1934 ஆம் ஆண்டின் கல்லூரி பருவங்களின் குழுவில் வெற்றியாளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்த மாணவர் வில்லியம் ஆண்ட்ரூ புர்கெட் எழுதிய கட்டுரை, 1973 ஆம் ஆண்டு சிற்பத்தின் உச்சியில் வெண்கல தகட்டில் வைக்கப்பட்டது.[12] 1991 ஆம் ஆண்டு அதிபர் ஜார்ஜ்.ஹச். டபிள்யூ. புஷ் அதிகாரப்பூர்வமாக மவுண்ட் ரஷ்மோரை அர்ப்பணித்தார். செதுக்கப்பட்ட முகங்களுக்கு பின் பதினாறு பீங்கான் பூச்சு மரச்சட்டங்களுடன் காப்பறைகள் சேர்ந்து பாறைக்கு70 அடிகள் (21 m) உள்ளே செங்குத்தான பள்ளதாக்காக வெட்டப்பட்டுள்ளது. இந்த மரச்சட்டங்களில் சுதந்திரம் பற்றிய அறிவிப்பு மற்றும் அரசியலமைப்பு பற்றிய எழுத்து வடிவங்கள், நான்கு அதிபர்கள் மற்றும் போர்க்லம் பற்றிய வாழ்க்கை வரலாறு, மற்றும் அமெரிக்க ஒன்றியத்தின் வரலாறு ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஹால் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பகுதிக்கு செல்லும் வழியாக அறைகள் உருவாக்கப்பட்டன; காப்பறைகள் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன.[16] பத்து ஆண்டுகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பார்வையாளர் மையம், லிங்கன் போர்க்லம் அருங்காட்சியகம் மற்றும் அதிபர்களின் சுவடு ஆகியவற்றை கொண்ட பார்வையாளருக்கான வசதிகள் மற்றும் சுற்றிப் பார்க்கும் வசதிகளுடன் 1998 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தை பராமரிப்பதற்கு விரிசல்களைக் கண்டறியவும் சரிசெய்யவும் மலை ஏறுபவர்கள் ஆண்டுதோறும் தேவைப்படுகின்றனர். மரப்பாசிகளை நீக்குவதற்காக இந்த நினைவுச்சின்னம் சுத்தம் செய்யப்படவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் கருவிகளை தயார் செய்யும் ஜெர்மன் தயாரிப்பாளர் கார்செர் ஜிஎம்பிஹெச் (GmbH) தண்ணீரை வேகமாக அடித்து இலவசமாக சுத்தம் செய்யும் செயலை 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் தேதி மேற்கொண்டார்.[17] சர்ச்சை![]() 1876-77 கிரேட் சியோக்ஸ் போருக்கு பிறகு லகோடோ பகுதிகளை அமெரிக்க ஒன்றியம் கைப்பற்றியதால் மவுண்ட் ரஷ்மோர் அமெரிக்க ஒன்றியத்தை பிறப்பு நாடாக கொண்டவர்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தியது. ப்ளாக் ஹில்ஸ் பகுதியை லகோடோவிடம் வாழ்நாள் முழுவதும் இருக்குமாறு 1868 ஆம் ஆண்டின் லேரமீ கோட்டை உடன்படிக்கை அளித்தது. 1971 ஆம் ஆண்டில் நினைவுச்சின்னத்தில் அமெரிக்கன் இந்தியன் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு "மவுண்ட் க்ரேஸி ஹார்ஸ்" என்ற பெயருடன் வேலை உருவாக காரணமாக இருந்தது. இதில் பங்கேற்றவர்களில் இளம் வயதினர், பெற்றோரின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் லகோடோவின் பழம்பெரும் மனிதர் ஜான் ஃபயர் லாமி டீர் இருந்தனர், மலையின் உச்சியில் ஊழியர்களுடன் இறை வழிபாடு செய்தனர். அதிபர்களின் முகங்கள் மீது அடையாளக்குறி மூலம் மறைப்பர் என்றும் ப்ளாக் ஹில்ஸ் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் முடிவு செய்யும் வரை அழுக்கடைந்த நிலையிலே இருக்கும் என்று லாமே டிர் கூறினார்.[18] பூங்காவிற்கான கண்காணிப்பாளராக அமெரிக்காவைப் பிறப்பிடமாக கொண்ட ஒருவர் 2004 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பொருள் விளக்கத்திற்காக பல்வேறு வளாகங்களை திறக்கப் போவதாகவும் மற்றும் நான்கு அதிபர்களும் ஒரு வளாகம் மற்றும் ஒரே ஒரு மையத்தில் இருப்பார்கள் என்றும் ஜெரார்ட் பேக்கர் தெரிவித்தார்.[19] அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஒரு பிரபலமானவரின் நினைவாக ப்ளாக் ஹில்ஸில் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் மேலும் மவுண்ட் ரஷ்மோருக்கு பதிலளிக்கும் வண்ணம் க்ரேஸி ஹார்ஸ் மெமோரியல் கட்டப்பட்டது. லகோடோ தலைவர்களுக்கு ஆதரவாகவும் மற்றும் மவுண்ட் ரஷ்மோரை விட பெரிதாக இருக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டிருந்தது மேலும் த க்ரேஸி ஹார்ஸ் மெம்மோரியல் பவுண்டேசன் ஒன்றிணைந்த நிதிகளை வாங்க மறுத்தது. இருந்த போதிலும் இந்த நினைவுச்சின்னம் சர்ச்சைக்கான முக்கிய காரணமானது குறிப்பாக அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட குழுக்களிடையேயும் இருந்தது.[20] இந்த நினைவுச்சின்னம் சர்ச்சையை எரிச்சல் உண்டுபண்ணுகிற நிலைக்கு மாற்றியது ஏனெனில் இவற்றின் விதியின் கருத்திற்கு எதிராக இனவெறி மேன்மை சட்டமுறைமை உடையதாக குறிப்பாக தெரிவிக்கிறது என்று சிலர் வாதத்தில் ஈடுபட்டனர். இந்தியப் பகுதிகளை கைப்பற்றிய போது இருந்த நான்கு அதிபர்களை போர்க்லம் தனது விருப்பத் தேர்வுடன் மலைகளில் செதுக்கப்பட்டது. கு குல்ஸ் குலன் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்த காரணத்தினால் கட்ஸோன் போர்க்லம் தானாக சர்சைகளில் சிக்கிக் கொள்வார்.[8][21] 2009 ஆம் ஆண்டு ரீகார்விங் ரஷ்மோர்: ரேங்கிங் த பிரசிடெண்ட்ஸ் ஆன் பீஸ், ப்ராஸ்பெர்டி அண்ட் லிபர்டி என்ற தனது புத்தகத்தை எழுத்தாளர் இவன் இலாண்ட் என்பவர் வெளியிட்டார், இந்த நினைவுச்சின்னத்தில் உள்ள நான்கு அதிபர்களில் மூவரின் தலைமைப் பதவிக் காலம் பற்றிய புதிய ஆய்வை இந்த புத்தகம் பரிந்துரைத்தது.[22] சூழலியல்![]() சௌத் டகோடோ வட்டத்தில் ப்ளாக் ஹில்ஸ் பகுதியின் மற்ற இடங்களில் உள்ள தாவரம் மற்றும் விலங்கினங்களைப் போல மவுண்ட் ரஷ்மோரிலும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருந்தன. டர்கே வல்ச்சர், பால்ட் ஈகிள், ஹவாக், மற்றும் மெடோவால்ர்க் போன்ற பறவைகள் மவுண்ட் ரஷ்மோரைச் சுற்றி பறக்கும், மலையின் விளிம்புகளின் எப்போதாவது இந்த பறவைகள் கூடுகளை உருவாக்கிக் கொள்ளும். சிறிய பறவைகளான பாடும்பறவைகள், நத்ஹாட்ச் மற்றும் வுட்பெக்கர் போன்றவை பசுமை மாறாத இந்த பகுதிகளை வாழும் இடமாக கொண்டிருந்தன. எலி, குழிபறித்து வாழும் அணில், அணில், கீரியினப் பிராணி, முள்ளம்பன்றி, ரக்கூன், நீர்வாழ் எலியுருவ விலங்கு, பாட்கர், கொயோட், பெரிய கொம்புகளைக் கொண்ட ஆடு, மற்றும் பாப்கேட் போன்ற நிலத்தில் வாழ்கின்ற பாலூட்டி விலங்குகள் இங்குள்ளன. தவளைகள் மற்றும் பாம்புகளின் இனங்களும் இந்த பகுதியை வாழிடமாகக் கொண்டுள்ளன. இந்த நினைவுச்சின்னத்தில் உள்ள இரண்டு ஓடைகளான க்ரிஸ்ஸி பியர் மற்றும் ஸ்டார்லிங் பாசின் ஓடைகளில் லாங்கோஸ் டேஸ் மற்றும் ப்ரூக் ட்ரவுட் போன்ற மீன்கள் உள்ளன.[23] ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் விலங்குகள் இந்த பகுதியில் அதிகமாக இல்லை: ஆடுகளின் இனத்திலிருந்து தோன்றிய மலை ஆடு கஸ்டர் ஸ்டேட் பார்க் பகுதிக்கு 1924 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து கொண்டுவரப்பட்டது.[24] குன்றுப் பகுதிகளில் உள்ள ஊசியிலை மரங்களில் ஒன்றான பொண்டெரோசா பைன் வகை மரங்கள் இந்த நினைவுச்சின்னத்தைச் சுற்றி சூரிய ஒளியிலிருந்து நிழல்களை வழங்கும் வகையில் உள்ளன. பர் ஓக், ப்ளாக் ஹில்ஸ் ஸ்ப்ரூஸ் மற்றும் காட்டன்வுட் போன்ற மற்ற மரங்களையும் உள்ளடக்கியது. மவுண்ட் ரஷ்மோரைச் சுற்றி புற்செடிகளின் ஒன்பது இனங்கள் உள்ளன. ஸ்னாப்ட்ராகன், சன்ஃப்ளவர் மற்றும் வியோலெட் போன்றவற்றை உள்ளடக்கிய காட்டு மலர்கள் அதிகமாக உள்ளன. உயரமான மட்டங்களில் தாவரங்களின் வாழ்க்கை அடர்த்தியற்று இருக்கும்.[24] எனினும் தோராயமாக ஐந்து சதவீத தாவர இனங்கள் மட்டுமே ப்ளாக் ஹில்ஸ் பகுதிக்கு சேராத நிலையில் உள்ளன.[25] ஆண்டில் ஒரு முறை மட்டுமே இந்த பகுதி 18 அங்குலங்கள் (460 mm)மழைப் பொழிவைப் பெறுகிறது இது விலங்குகள் மட்டும் தாவரங்களின் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மரங்கள் மற்றும் மற்ற தாவரங்கள் மேல்மட்ட வழிந்தோடுதலை தடுக்க உதவி புரிகின்றன. அணைகள், நீரொழுக்கு மற்றும் வசந்த காலங்களில் கீழ்நோக்கி செல்லும் தண்ணீரை அணைகள் மூலம் பாதுகாக்கப்பட்டு விலங்குகளுக்கு நீர் அளிக்கும் இடமாக உருவாக்கப்படுகிறது. மணற் கற்பாறை மற்றும் சுண்ணாம்புக்கல் போன்றவை நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நீர்த்தேக்கங்களை உருவாக்கவும் உதவி புரிகின்றன.[26] மவுண்ட் ரஷ்மோரைச் சுற்றியுள்ள போண்டெரொசா காடுகளில் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை காட்டுத் தீ ஏற்படுகிறது. இது எரிந்த நிலையில் உள்ள மரங்களின் மாதிரிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இது நிலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு குப்பைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. பெரிய அளவிலான காட்டுத் தீ நிகழ்ச்சிகள் நிகழ்வது அபூர்வம் ஆனால் முந்தைய காலங்களில் நிகழ்ந்துள்ளது.[27] நிலவியல்![]() மவுண்ட் ரஷ்மோர் கிரானைட் மூலம் அதிகமாக அமையப்பட்டுள்ளது. சௌத் டகோட்டா வட்டத்தின் ப்ளாக் ஹில்ஸ் பகுதியில் ஹார்னே பீக் வடமேற்கு பகுதியில் உள்ள பாதோலித் கிரானைட் பகுதியில் இந்த நினைவுச்சின்னம் செதுக்கப்பட்டுள்ளது, எனவே ப்ளாக் ஹில்ஸின் மையப்பகுதியில் நிலவியல் பகுதிகளை உருவாக்குவதற்கு மவுண்ட் ரஷ்மோர் வெளிப்படையாக உள்ளது. 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ப்ரிகேம்பிரியன் காலத்தில் பாதோலித் கற்பாறைகள் மைக்கா வகை இளகல் பாறைகளாக மாறியது.[28] கரடு முரடான பாறைகலிருந்து சிறிய பெக்மாடைடாக பிரிக்கப்பட்ட கிரானைட் ஹார்னே பீக் பகுதியுடன் தொடர்புடையது. அதிபர்களின் முன் தலையில் உள்ள மெல்லிய நிறமுடைய கோடுகள் இவற்றினால் ஏற்பட்டவையாகும். ப்ளாக் ஹில்ஸ் கிரானைட்கள் ப்ரிகேம்பிரியன்களுக்கு பிந்தைய காலங்களில் அரித்து அழிக்கப்பட்டது , ஆனால் காம்பரியன் காலங்களில் இவைகள் மணற்கற்கள் மற்றும் மற்ற படிவங்களாக புதைவுற்றது. பலேஸோயிக் காலங்களில் இந்த பகுதி புதைவுற்ற நிலையில் இருந்தது, எனினும் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டெக்டோனிக் காலங்களில் மீண்டும் அரிக்கப்பட்டு வலுவூட்டப்பட்டது. ப்ளாக் ஹில்ஸ் பகுதி நீண்டு குறுகிய நிலப்பரப்புள்ள பகுதிகளாக வலுவூட்டப்பட்டது.[29] இதைத் தொடர்ந்து இந்த மலைப்பகுதிகளில் ஏற்பட்ட அரிப்புகள் அடிப்பகுதியிலிருந்து கிரானைட்டை உருக்குதல் மற்றும் மற்ற மெல்லிய பாறை வகைகளிலிருந்து சிற்ப வேலைகளை மேற்கொள்ள அனுமதித்தது. வாஷிங்டன் சிற்பத்தின் கீழே உள்ள பாறைகள் கிரானைட் மற்றும் கருமையான பாறைகளுக்கு இடையே உள்ள தொடர்பை காட்டுகிறது. போர்க்லம் இந்த மவுண்ட் ரஷ்மோரை பல காரணங்களாக தேர்ந்தெடுத்தார். இந்த மலையில் உள்ள பாறைகள் மென்மையான, மற்றும் சிறப்பாக துகளாக்கப்பட்ட கிரானைட்டைக் கொண்டிருக்கும். நீடித்து உழைக்ககூடிய கிரானைட் 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அழியக்கூடியது,1 அங்குலம் (25 mm) இது இந்த சிற்பங்களை வலிமையுடன் பாதுகாக்க போதுமானது என்பதை சுட்டிக்காட்டுகிறது.[9] இந்த பகுதியில் இது மிகப்பெரிய மலையாகும் கடல்மட்டத்திலிருந்து 5,725 அடிகள் (1,745 m) உயரத்தில் வானில் தோன்றுகிறது.[3] ஏனெனில் இந்த மலை தென்கிழக்கு பகுதியை நோக்கி உள்ளது, இதன் மூலம் வேலையாட்கள் நாட்களின் அதிகமான நேரங்களில் சூரிய ஒளியை பெறும் அனுகூலம் பெற்றிருந்தனர். சுற்றுலாத்துறை![]() சௌத் டகோடாவில் சுற்றுலாத்துறை இரண்டாவது பெரிய துறையாக உள்ளது, இங்கு முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மவுண்ட் ரஷ்மோர் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் இந்த நினைவிடத்தை பார்வையிட்டுள்ளனர்.[4] ரஷ்மோர் இசை குழுக்களின் இறுதி நிகழ்ச்சிகளுக்கு இந்த இடம் வீடாக உள்ளது. மேலும் ஸ்டர்கிஸ் மோட்டர்சைக்கிள் ராலி நிகழ்ச்சியின் வாரங்களில் அதிகப்படியான பார்வையாளர்களை கவர்கிறது. பிரபல கலாசாரம்குறிப்புகள் மற்றும் குறிப்புதவிகள்
மேலும் படிக்க
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia