மாத்ரிமந்திர்
மாத்ரிமந்திர் (Matrimandir, சமசுகிருதத்தில் அன்னை ஆலயம் என்று பொருள்) என்பது ஒருங்கிணைந்த யோகா பயிற்சியாளர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவத்தின் ஒரு மாளிகையாகும். இது ஆரோவில்லின் மையத்தில் அமைந்துள்ளது. இதை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின், அன்னை நிறுவினார். சமய, சமயச் சடங்குகள் கடந்த நிலையில் பிரபஞ்ச அன்னையாகிய மகாசக்தியை உணரும் வண்ணத்தில் உருவாக்கப் பெற்ற இக்கோள வடிவிலான மனஒருமை அரங்கு, 1971 ஆம் ஆண்டு அன்னையின் பிறந்த நாளன்று அடிக்கல் நாட்டப் பெற்றுக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன.[1] மாத்ரி மந்திரின் அமைப்புஅன்னையின் 93வது பிறந்த நாளான, பிப்ரவரி 21, 1971 அன்று அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து, மே 2008இல் இது நிறைவடைந்தது. இதனை கட்ட சுமார் 37 ஆண்டுகள் ஆனது. மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல் வடிவங்களை ஸ்ரீஅரவிந்தர் உணர்த்தும் வகையில் இம்மண்டபத்தை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. மாத்ரிமந்திர் சிறிது தட்டையான கோளவடிவிலான ஆலயமாகும். தரைமட்டத்திலிருந்து 29 மீ. உயரத்தில் உள்ள இக்கோளத்தின் விட்டம் 36 மீ. முக்கோண வடிவச் சட்டங்களால் ஆன இக்கோளத்தின் புறப்பகுதி, தங்க ரேக்குகள் பதிக்கப்பெற்ற வட்ட வடிவத் தட்டுகளால் அமைக்கப் பெற்றுக் காண்போரைக் கவர்கின்றது. கோளத்தின் உட்புற மேற்பகுதியில் ஒரு பெருங்கூடம் உள்ளது. அதன் விக்கிரகங்களோ, படங்களோ கிடையாது. பன்னிரு பக்கங்களைக் கொண்ட அந்த அறையின் தளப்பகுதியும் சுவர்களும், வெண் சலவைக் கற்களால் ஆனவை. பன்னிரு தூண்களைக் கொண்ட அந்த அறையில் சன்னல்கள் இல்லை. நுழையவும், வெளியேறவும் கூடிய வகையில் இரு வாசல்கள் உண்டு. அறையின் மையத்தில் அன்னையின் சின்னமும், அதன் நடுவில் நான்கு புறமும், அரவிந்தரின் சின்னங்கள் பொருத்தப் பெற்ற பொன்முலாம் பூசிய மேடையின்மீது உருண்டை வடிவிலான ஒளி ஊடுருவக்கூடிய படிகம் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நேர் மேற்கூரையிலுள்ள ஆடியின் வழியாகச் சூரிய ஒளிக்கீற்றுகள் உள் புகுந்து படிகத்துள் பிரதிபலிக்கும் அழகு நேரில் தரிசித்து அனுபவிக்கத்தக்கது. சூரிய ஆற்றலை மின்கலங்களில் சேகரித்து வைத்துச் சூரிய ஒளி இல்லாத பொழுதுகளில் அப்படிகத்தின் மீது செலுத்தப் பெறும். இப்படிகம் உலகிலேயே மிகப்பெரிய செயற்கைப் படிகமாகும். பிரபஞ்ச அன்னையின் நான்கு மகாசக்தியின் செயல்பாடுகளைக் குறிக்கும் வண்ணம் இங்கு நான்கு தூண்கள் அமைக்கப்பெற்றுள்ளன.[2]
![]() இருப்பிடம்சென்னை- புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், பொம்மையார் பாளையம்மற்றும் முதலியார் சாவடியிலிருந்து சுமார் 6.கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia