மாயமான்குறிச்சி சாஸ்தாசித்தாஉடையார் மற்றும் சுந்தரவிநாயகர் கோயில்

அருள்மிகு சாஸ்தாசித்தாஉடையார் மற்றும் சுந்தரவிநாயகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மாயமான்குறிச்சி, ஆலங்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:சாஸ்தா சித்தாவுடையார்
தாயார்:பூரணபுஷ்கலாஅம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மாயமான்குறிச்சி சாஸ்தாசித்தாஉடையார் மற்றும் சுந்தரவிநாயகர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மாயமான்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சாஸ்தா சித்தாவுடையார், பூரணபுஷ்கலாஅம்பாள் சன்னதிகளும், கஜமாடசுவாமி உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya