மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல்
2006ஆம் வருடம் ஐக்கிய மாநிலங்கள் மட்டுமே மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல் என்பதற்காக யூஎஸ்$400 செலவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.[1] பாராம்பரிய அஞ்சலுடனான ஒப்புமைபாராம்பரிய விளம்பர அஞ்சல் முறைமையுடன் ஒப்பிடுகையில் மின்னஞ்சல் முறைமையில், சாதகங்கள் மற்றும் பாதகங்கள் ஆகியவை உள்ளன. சாதகங்கள்மின்னஞ்சல் வழி (இணைய தளம் வழியாக) சந்தைப்படுத்துதல் என்பது பல்வேறு காரணங்களினால், பல நிறுவனங்களிலும் பிரபலமாக உள்ளது:
பாதகங்கள்பல நிறுவனங்களும் தங்களது தற்போதைய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவே மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதலைப் பயன்படுத்துகின்றன; ஆயினும், வேறு பல நிறுவனங்கள் வேண்டாத, பெருமளவிலான, ஈசல் (ஸ்பாம்) என்று அறியப்படும் மின்னஞ்சல்களையும் அனுப்புகின்றன இணையதள நிர்வாகிகள் "இணையத்தின் தவறாகன பயன்பாடு" என்பதற்கே தங்களைப் பொறுப்பாகக் கருதி வந்துள்ளனர்; "இணையத்தின் மூலம் தவறாக நடந்து கொள்ளுதல்" என்பதற்கு அல்ல. அதாவது, ஈசல் மின்னஞ்சலுக்கு எதிராக அவர்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடும்; ஆயினும், அவதூறு, வர்த்தகச் சின்னத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றைச் சட்ட அமைப்புகளிடமே அவர்கள் விட்டு விடுகிறார்கள். பெரும்பான்மையான நிர்வாகிகள், எந்தவொரு வேண்டாத மின்னஞ்சல் என்று தாங்கள் வரையறுக்கும் ஈசல் மின்னஞ்சலை உணர்வு பூர்வமாக மிகவும் வெறுக்கிறார்கள். எச்சரிக்கை அளித்தோ அல்லது எச்சரிக்கை இன்றியோ இணையத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் வலைத்தளத்தையே எடுத்து விடுவது போன்ற இரும்புக் கரம் கொண்டு அடக்கும் நடவடிக்கைகள் இவ்வாறு ஈசல் மின்னஞ்சல் அனுப்புமைக்கு முற்றிலும் சாதாரணமான பதிலிறுப்புகளேயாகும். இணைய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் காணப்படும் சேவை விதிமுறைகள், பொதுவாக, இத்தகைய நடவடிக்கைகளை அனுமதிப்பதாகவே உள்ளன; ஆகவே, ஈசல் மின்னஞ்சல் அனுப்புனர் பின்னடைவுரிமை ஏதும் பெற முடியாது. இவ்வாறு, சட்ட விரோதமான மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல் சட்ட பூர்வமான மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதலை நசுக்கி விடுவதாக உள்ளது. இணையத்தின் ஆரம்ப நாட்களில் (அதாவது அர்பாநெட் என்பதில்), வணிக நோக்கங்களுக்கான அந்த ஊடகப் பயன்பாடு அனுமதி பெற்றிருக்கவில்லை. இதன் விளைவாக, சந்தையாளர்கள் தங்களைச் சட்ட பூர்வமான மின்னஞ்சல் வழி வணிகங்களாக நிலை நாட்டிக் கொள்வதற்காகக் கடுமையாகப் போரிட்டபோதும், குற்றம் சார்ந்த ஈசல் மின்னஞ்சல் நடவடிக்கைகள் தம்மையும் சட்டபூர்வமானவர்கள் என்று சொல்லிக் கொண்டமையால் அது மேலும் தடைபடலானது. வெளியிலிருந்து காண்பவர்களுக்கு சட்டபூர்வமான பயனர்களையும், ஈசல் மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதலை மேற்கொள்பவர்களையும் வேறுபடுத்திக் காண்பது கடினம். முதலாவதாக, ஈசல் மின்னஞ்சலாளர்கள் சட்டபூர்வமான இயங்குனர்களாகத் தங்களை அறிவித்துக் கொள்கிறார்கள். இரண்டாவதாக, ஐக்கிய மாநிலங்களின் நேரடி சந்தையாளர்கள் கழகம் (டிஎம்ஏ) போன்ற நேரடி-சந்தை அரசியற் குழுக்கள், சில இணைய வழங்குனர்கள் ஈசல் மின்னஞ்சல் என்று கருதும் வேண்டாத வணிக மின்னஞ்சல்களிலிருந்து "வெளியேறத் தெரிவு செய்யும்" மின்னஞ்சல்களை அனுப்புவதைப் போன்ற நடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக்குவத்ற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு சட்டசபை உறுப்பினர்களை வலியுறுத்தி வருகின்றனர். மூன்றாவதாக, ஈசல் மின்னஞ்சலின் அபாரமான அளவையானது சில பயனர்கள் சட்டபூர்வமான வணிக மின்னஞ்சல்களையும் ஈசல் மின்னஞ்சல்கள் என்று கருத வழி வகுத்துள்ளது. ஒரு பயனர் தாம் சந்தாதாரராக இருக்கும் ஒரு மின்னஞ்சல் பெறுநர் பட்டியலில் இருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறுகையில், இத்தகைய நிலை உருவாகிறது. சட்டபூர்வமான மின்னஞ்சல் மற்றும் ஈசல் மின்னஞ்சல் ஆகிய இரண்டுமே, அவை கொண்டுள்ள தகவல்கள் ஹெச்டிஎம்எல் மற்றும் கணிப்பொறி வரைகலைப் படங்களைக் கொண்டு ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பதானால் மேலும் குழப்பம் உருவாகிறது. முறையாக நிலை நிறுத்தப்பட்ட மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் மிகுந்த திறன் கொண்ட வழி ஒன்றைக் கடைப்பிடிக்கின்றன. "இரட்டை விருப்பத் தெரிவு நுழைவு" எனப்படும் இந்த முறைமையில், விபரங்கள் கூறி அவர்கள் விடுக்கும் கோரிக்கையை, சாத்தியமான பெறுநர், தன்னிச்சையாக சுண்டி விட்டுப் பிரத்தியேகமான ஒரு தொடர் சங்கிலியில் இடுவார். இது, மின்னஞ்சல் முகவரியின் உரிமையாளர் மெய்யாகவே அத்தகவலை விரும்பினார் என்று உறுதி செய்யும் வண்ணம், ஒரு பிரத்தியேகமான அடையாளக் குறியீட்டைக் கொண்டிருக்கும். மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல் மற்றும் தானியங்கி பதிலிறுப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பொறுப்பான நிறுவனங்கள், தகவல்கள் வெளியேறுவதற்கு முனபாக, ஒவ்வொரு கோரிக்கையையும் உறுதி செய்து கொள்ள, இத்தகைய இரட்டை விருப்பத் தெரிவு நுழைவு முறைமையைப் பயன்படுத்துகின்றன. ரிடர்ன் பாத் என்னும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2008ஆம் வருடத்தின் இடைக்காலத்தில், விநியோக முறைமை என்பது சட்டபூர்வமான சந்தையாளர்களுக்கு இன்னமும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. இந்த அறிக்கையின்படி, சட்டபூர்வமான மின்னஞ்சல் சேவையாளர்கள் சராசரியாக 56 சதவிகித விநியோகத்தைப் பெற்றிருந்தனர். 20 சதவிகிதத் தகவல்கள் மறுதளிக்கப்பட்டன மற்றும் எட்டு சதவிகிதம் வடிகட்டப்பட்டது.[5] இணையத்தில் ஈசல் மின்னஞ்சலின் அளப்பரிய அளவையின் காரணமாக, பெரும்பாலான பயனர்களுக்கு ஈசல் மின்னஞ்சல் வடிகட்டிகள் அவசியமாகவே உள்ளன. இத்தகைய வடிகட்டிகளால் பல முறை சட்டபூர்வமான வணிக மின்னஞ்சல்கள் கைப்பற்றப்பட்டு மறைக்கப்படுவதாக சில சந்தையாளர்கள் அறிவிக்கின்றனர். இருப்பினும், இவ்வாறு சட்டபூர்வமான மின்னஞ்சல்களை வடிகட்டிகள் தடுக்கின்றன என்று பயனர்கள் புகார் செய்வது என்பதானது அவ்வளவு பொதுவான நிகழ்வாக இல்லை. மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்தும் நிரலைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தமது நிரல்கள், ஈசல் மின்னஞ்சல் தொடர்பான சட்டங்களை, உதாரணமாக, ஐக்கிய மாநிலங்களின், வேண்டாத பாலியல் இலக்கியம் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் சட்டம் (கன்ட்ரோலிங் தி அசால்ட் ஆஃப் நான்-சொலிசிட்டட் போர்னோகிராஃபி அண்ட் மார்க்கெட்டிங் ஆக்ட்- கேன்-ஸ்பாம்),[6] ஐரோப்பிய அந்தரங்கம் மற்றும் மின்னணு வழித் தொடர்பு ஒழுங்கு முறைமைகள் 2003 அல்லது அவர்களது இணைய சேவை வழங்குனர்கள் ஏற்கக்கூடிய பயன்பாட்டுக் கோட்பாடு ஆகியவற்றை, மீறாத வண்ணம் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். பொருந்துகிற சட்டங்களுக்கு உட்பட்டே ஒரு நிறுவனம் நடந்து கொண்டாலும், இணைய மின்னஞ்சல் நிர்வாகிகள் அந்த நிறுவனம் ஈசல் மின்னஞ்சல் அனுப்புவதாகத் தீர்மானித்தால், அதனை (உதாரணமாக ஸ்ப்யூஸ் என்னும் ஈசல் மின்னஞ்சல் தடுப்பு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு என்னும் சேவை) கறுப்புப் பட்டியலில் இடலாம். விருப்பத் தெரிவு நுழைவு முறையிலான மின்னஞ்சல் விளம்பரம்விருப்பத் தெரிவு நுழைவு மின்னஞ்சல் விளம்பரம் அல்லது அனுமதி பெற்ற சந்தைப்படுத்துதல் என்பது மின்னஞ்சல் வழியாக விளம்பரம் செய்யும் ஒரு முறைமையாகும். இந்த முறைமையில், விளம்பரத்தைப் பெறுபவர் அதனைப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கிறார். மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்தும் முறைமையின் பாதகங்களை நீக்க சந்தையாளர்கள் உருவாக்கிய பல முறைமைகளில் இதுவும் ஒன்றாகும்.[7] விருப்பத் தெரிவு நுழைவு சந்தைப்படுத்துதல் என்பதானது அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகியோரிடையே ஒரு கைகுலுக்கும் நெறிமுறையைப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கலாம்.[7] இந்த முறைமையானது, நுகர்வோர் மற்றும் சந்தையாளர்கள் ஆகியோருக்கிடையே பெரும் அளவிலான திருப்தியை விளைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. விருப்பத் தெரிவு நுழைவு வழி மின்னஞ்சல் விளம்பரம் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோருக்கு அனுப்பப்படும் தகவல் பொருளானது "எதிர்பார்க்கப்படுவதாக" அமையும். இதைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளருக்கு வேண்டாத விளம்பரங்களை அனுப்பும் சாத்தியம் குறைகிறது. கருத்தியலின்படி நோக்குகையில், விருப்பத் தெரிவு நுழைவு வழி மின்னஞ்சல் விளம்பரங்கள், இலக்கற்ற விளம்பரங்களாக இருக்கும் நிலை மாறி, தனிப்பட்ட வகையிலும் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான முறையிலும் அமைவதாக இருக்கும். அனுமதி பெற்ற சந்தைப்படுத்துதல் என்பதற்குப் பொதுவான ஒரு உதாரணம், ஒரு விளம்பர நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் செய்திக் கடிதமாகும். இத்தகைய செய்திக் கடிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் நிகழ்வுகள் அல்லது தொழில் முன்னேற்றங்கள் அல்லது புதிய பொருட்கள் ஆகியவை பற்றித் தெரிவிக்கின்றன.[8] இந்த வகையிலான விளம்பரத்தில், செய்திக் கடிதம் அனுப்ப விழையும் ஒரு நிறுவனமானது, வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்கும் கட்டத்தில் அத்தகைய ஒரு செய்திக் கடிதத்தைப் பெறுவதற்கு அவர் விரும்புவாரா என்று கேட்கலாம். விருப்பத் தெரிவு நுழைவின் கடைக்காலின் அடிப்படையில், தொடர்புத் தகவல்களை தரவுத் தளத்தில் சேமித்து, சந்தையாளர்களுக்குத் தொழில் முன்னேற்றப் பணி குறித்த செய்திகளைத் தானியங்கி முறையில் அனுப்பி வைக்க இயலும். அவர்கள் தம்முடைய தொழில் முன்னேற்றப் பணிகளைத் தனிவகைச் சந்தைக் கூறுகள் என்பனவாகவும் பிரித்துக் கொள்ள இயலும்.[9] சட்டத் தேவைகள்2002ஆம் வருடம் ஐரோப்பியக் கூட்டமைப்பு, அந்தரங்கம் மற்றும் மின்னணுத் தொடர்புகளின் மீதான ஆணைகள் என்பதை அறிமுகப்படுத்தியது. இந்த ஆணைகளின் 13ஆம் விதிக்கூறு, சந்தைப்படுத்தும் நோக்கங்களுக்காக மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. இந்த ஆணையானது, விருப்பத் தெரிவு நுழைவு முறைமையை நிலை நாட்டுகிறது. இதன் மூலமாக, பெறுநருடன் முன் கூட்டியே ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் மட்டுமே வேண்டாத மின்னஞ்சல்களை அனுப்ப இயலும். உறுப்பினர் மாநிலங்களின் சட்டங்களில் இந்த ஆணைகள் உட்சேர்க்கப்பட்டு விட்டன. ஐக்கிய நாட்டில், அந்தரங்கம் மற்றும் மின்னணுத் தொடர்பு (ஈசி ஆணைகள்) ஒழுங்கு முறைமைகள் 2003 [10] என்பதன் கீழ் இது வருகிறது மற்றும் ஏதாவது ஒரு வகையில் மின்னணுத் தொடர்பு மூலம் சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்துவதாக உள்ளது. 2003ஆம் ஆண்டின் கேன்-ஸ்பாம் சட்டம் ஈசல் மின்னஞ்சல் அனுப்புவதற்கான அபராதமாக, ஒவ்வொரு தனிப்பட்ட பெறுநருக்குமாக யுஎஸ் $11,000 அபராதமாக விதிக்கிறது. ஆகவே, இந்த சட்டத்துடன் ஒத்துப் போகும் வகையிலான சேவை ஒன்றையோ அல்லது ஒரு விசேஷமான மென்பொருளையோ ஐக்கிய மாநிலங்களில் உள்ள பல வணிக மின்னஞ்சல் சந்தையாளர்களும் பயன்படுத்துகின்றனர். இந்தச் சட்டத்துடன் ஒத்துப் போவதாக உள்ள பழைய வழிகளும் பல வகைகளில் உள்ளன. இந்தச் சட்டம் வணிக மின்னஞ்சல் தொடர்பாக விடுத்துள்ள ஒழுங்குமுறைமையின்படி, பயன்ர்கள் தங்களது மின்னஞ்சல் திரும்ப வருவதற்கான ஒரு முகவரியை அதிகார பூர்வமாக அளிக்க வேண்டும். இது, செல்லுபடியாகக் கூடிய ஒரு உண்மையான முகவரி, ஒரு சுண்டலில் சந்தாவை விலக்கிக் கொள்ளும் வசதி ஆகியனவற்றைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், பொதுவான செல்லுமை கொண்ட முகவரிகள் இல்லாமல் இருக்கும் விலைக்கு வாங்கப்பட்ட முகவரிகளை இறக்குமதி செய்வதையும் இது தடை செய்கிறது. சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கூடுதலாக, மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள், தங்களது வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் சந்தைப் பிரசாரங்களைத் தாமே மேலாண்மை செய்து கொள்வதற்கான உதவியையும் அளிக்கத் துவங்கினர். மின்னஞ்சல் படிமங்கள் மற்றும் பொதுவான சிறந்த முறைமைகள் ஆகியவற்றை வழங்குவது மட்டும் அல்லாமல், சந்தாக்கள் மற்றும் அவை இரத்து செய்யப்படும் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தானியங்கி முறைமையில் கையாளும் முறைமைகளையும் சேவை வழங்குனர்கள் அளிக்கின்றனர். மேலும், பெற்ற மற்றும் திறந்த தகவல்களின் புள்ளி விபரங்களையும் அளித்து, அந்தத் தகவல்களின் ஊடாக உள்ள இணைச் சங்கிலிகளை பெறுநர்கள் எவரேனும் சுண்டியுள்ளனரா என்பதையும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கேன்-ஸ்பாம் சட்டம் அண்மையில் சில புதிய ஒழுங்கு முறைமை விதிமுறைகளுடன்[தெளிவுபடுத்துக] புதுப்பிக்கப்பட்டு 2008வது வருடம் ஜூலை 7 முதல் அமலுக்கு வந்துள்ளது.[சான்று தேவை] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia