மில்ட்டன் பிரீட்மன்
மில்ட்டன் பிரீட்மன் (Milton Friedman) (ஜூலை 31, 1912 – நவம்பர் 16, 2006) 20ம் நூற்றாண்டின் அதி முக்கிய பொருளியல் நிபுணர்களில் ஒருவர். இவருக்கு 1976 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இவரின் consumption analysis, monetary history and theory க்கும் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களை விபரித்தற்காகவும் இந்தப் பரிசு கிடைத்தது. இவர் தீவிர திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திரமான ஆரோக்கியமான சமூகத்துக்கு அவசியம் என்று முன்னிறுத்தினார். இவரே 70கள், மற்றும் 80களில் தென் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். அர்ஜென்டினாவின் பொருளாதார வீழ்ச்சி, சிலியின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக னொமி கிளைனின் கொள்கையை "Shock Doctrine" என்று விமர்சித்துள்ளார். இவர் காலனித்துவத்தின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு, இந்தியாவை உதாரணம் காட்டி, அது எப்படி பிரித்தானியாவுக்கு வரவை விட செலவு மிக்கதாக இருந்த என்ற ஆய்வை சுட்டி, விடுதலைக்கு சற்றுப் பின் இந்தியாவின் ஏழ்மை நிலையை அதன் முன் நிலையோடு ஒப்பிட்டு காலனித்துவம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று கருத்துப்பட பதிலளித்தார்[1]. மேலும் இந்தியா பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக முன்னர் (1920க்கு முன்னர்) இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றதென்றும், அதன் பின்னர் தோய்வு கண்டது என்று குறிப்பிட்டார். இது பல ஆய்வுகளுக்கு முரணான தகவல் ஆகும்[மேற்கோள் தேவை]. கொள்கைகள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia