முக்காடு![]() முக்காடு, தலை மற்றும் முகத்தின் சில பகுதிகளை மறைக்க, பெரும்பாலும் பெண்கள் அணியும் துணியாகும். வெயிலை மறைக்கவும் சமயக் காரணங்களுக்காகவும் சில திருமண வைபவங்களிலும் இது அணியப்படுகிறது. சமயத் தொடர்புள்ள ஒன்றாக, இது ஒரு பொருளுக்கோ, இடத்துக்கோ மதிப்புக் கொடுப்பதற்காக அணியப்படுவதாகக் கருதப்படுகிறது.[1] முக்காட்டின் உண்மையான சமூக பண்பாட்டு, உளவியல், மற்றும் சமூக பால்சார் செயற்பாடுகள் குறித்து பரந்த அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆனாலும், சமூகத் தொலைவைப் பேணுதல், சமூகத் தகுதியைக் காட்டுதல், பண்பாட்டு அடையாளம் என்பன முக்காட்டில் செயற்பாடுகளுக்குள் அடங்கும் எனலாம்.[2][3] அறியப்பட்ட வரலாற்றின்படி கி.மு பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசிரியச் சட்டத்தில் முக்காடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில்இந்தியாவை ஆண்ட முகலாயர்களின் பண்பாட்டுத் தாக்கத்தால், வட இந்தியாவில் பெண்கள் முக்காடு இடும் வழக்கம் கிபி 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் பரவலாயிற்று.[4]ஆனால் சீக்கியப் பெண்கள் முக்காடு அணியும் வழக்கத்தை, சீக்கிய சமய குரு அமர் தாஸ் கடுமையாக எதிர்த்தார்.[5] இதனையும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia