மு. கற்பக விநாயகம்
மு. கற்பக விநாயகம் (M. Karpaga Vinayagam)(பிறப்பு 16 மே 1946) என்பவர் இந்திய நீதிபதி, தமிழ் அறிஞர் மற்றும் சார்கண்ட்டு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். ஆரம்ப கால வாழ்க்கைவிநாயகம் 1946ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சட்டப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1969ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் இளநிலை தேர்ச்சிக்குப் பின்னர் எல். எல். பி. பட்டத்தினை 1972-ல் சென்னை சட்டக் கல்லூரியில் பெற்றார்.[1] பணிவிநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குகளுக்காக ஆஜரானார். 1993ஆம் ஆண்டு தில்லி சட்ட இதழான நடப்பு குற்ற அறிக்கையின் ஆசிரியரானார். விநாயகம் 1996ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 2006 செப்டம்பர் 17 அன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதியரசர் விநாயகம் தனது நீதித்துறை வாழ்க்கையைத் தவிரச் செம்மொழி மற்றும் பழமையான தமிழ் மொழியின் மீது அபரிமிதமான அறிவைக் கொண்டவர் ஆவார். இவர் பண்டைய காலத்தில் குற்றவியல் சட்டம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.[2] ஓய்வுக்குப் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். நவம்பர் 2008 இல், புது தில்லி மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia