மூன்றாம் தமிழ் இணைய மாநாடுமூன்றாவதாக “தமிழ் இணைய மாநாடு 2000” மாநாடு இலங்கையைச் சோ்ந்த கொழும்புவில் தோட்டத் தொழிலாளா்களின் அமைச்சா் தொண்டமான் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணமாக சிங்கப்பூரில் ஜீலை மாதம் 22-24 ஆம் நாட்களில் நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்த ஏப்ரல் 13 2000 அன்று சிங்கப்பூரில் தமிழ் இணைய ஒருங்கிணைப்புக் குழு (Tamil Internet Steering Committee - TISC) என்ற குழு தொடங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் லிம் ஸ்வீ சே (en:Lim Swee Say) உரையாற்றினார் [1] உத்தமம் தொடக்கம்சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் அருண் மகிழ்நன் ஒருங்கிணைப்பில் இம் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தொடங்கி வைக்கப்பட்டது.[2] மாநாட்டின் செயல்பாடுகள்இம்மாநாட்டில் இணையதளப் பெயா்கள், தமிழ் எழுத்துரு கலைச்சொல்லாக்கம், ஒருங்குறி முறை ஆகியன பற்றி விவாதிக்கப்பட்டன. இம்மாநாட்டின் வழியாக உலக அளவில் அனைவரும் தமிழ் இணைய மாநாட்டின் செய்திகளை அறிந்துகொள்ள WWW.infitt. Org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிற்கு வந்தன. இம்மாநாட்டின் இறுதி விழாவில் சிங்கப்பூர் அதிபா் எஸ். ஆர். நாதன் கலந்து கொண்டார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia