மூலிகைப் பூச்சி விரட்டிகள்
உழவுத் தொழிலில் பயிர்களை அழிக்கும் ஒரு சில பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் சில இயற்கை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கைப் பூச்சி விரட்டிகள் அல்லது மூலிகைப் பூச்சி விரட்டிகள் எனப்படுகிறது. வகைகள்இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் வகைகள் கீழே தரப்பட்டுள்ளது:
மூலிகைப் பூச்சிவிரட்டி நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி. ஆடாதொடா, வேம்பு போன்ற இலை தழைகளை 5 கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு 10 லிட்டா; மாட்டுச் சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயார். அதன் பிறகு வடி கட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச் சிறுநீர் கிடைக்காவிட்டால் தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். 10 லிட்டா; நீருடன், ஒரு லிட்டர் புச்சி விரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஏழு நாள்களுக்கு மேல் ஊற வைத்தால் பயிர் வளர்ச்சி ஊக்கியாக இது மாறிவிடும். அதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம். |
Portal di Ensiklopedia Dunia