மெர்சர் கவுன்ட்டி (Mercer County) ஐக்கிய அமெரிக்க மாநிலமானநியூ செர்சியிலுள்ளகவுன்ட்டி அல்லது மாவட்டம் ஆகும். மாநிலத் தலைநகரமானஇட்ரென்டனே இதற்கும் தலைநகரம் ஆகும்.[2][3] இந்த கவுன்ட்டி இட்ரென்டன் பெருநகரப் புள்ளியியல் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[4] தவிரவும் ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்புத் துறையின் நியூயார்க் பெருநகரப் பகுதியிலும் அடங்குகின்றது.[5] பிலடெல்பியா பெருநகரப் பகுதியின் எல்லையில் உள்ளது; கூட்டரசு தொலைத்தொடர்பு ஆணையத்தின் பிலடெல்பியா வரையறுத்த சந்தைப் பகுதியின் அங்கமாகவும் உள்ளது.[6] 2015இல் மெர்சர் மாவட்ட மக்கள்தொகை 371,398 ஆகும்; இது 2010 கணக்கெடுப்பின் தொகையைவிட 1.3% கூடுதலாகும். மாநிலத்தில் மிகக்கூடிய மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் 12வதாக உள்ளது.[7] ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் கூடுதலான வருமானம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக மெர்சர் மாவட்டம் விளங்குகின்றது; நாட்டிலுள்ள 3,113 மாவட்டங்களில் 78ஆம் இடத்திலும் மாநிலத்தில் ஆறாம் நிலையிலும் உள்ளது.[8] இந்த மாவட்டம் 1838ஆம் ஆண்டு பெப்ரவரி 22 அன்று நியூ செர்சி சட்டப்பேரவையின் சட்டத்தால் உருவானது.
மெர்சர் மாவட்டத்தில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரின்சுடன் இறையியல் குருத்துவக் கல்லூரி, இரைடர் பல்கலைக்கழகம், நியூ செர்சி கல்லூரி, தாமசு எடிசன் மாநிலக் கல்லூரி, மெர்சர் கவுன்ட்டி கம்யூனிட்டிக் கல்லூரி ஆகியன அமைந்துள்ளன.[9]