மெல்பேர்ண் வானூர்தி நிலையம்
மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (Melbourne Airport; (ஐஏடிஏ: MEL, ஐசிஏஓ: YMML), ஆத்திரேலியாவில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். இது விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பேர்ணில் அமைந்துள்ளது. 1970-இல் அருகிலிருந்த எசென்டென் வானூர்தி நிலையத்திற்கு மாற்றாக பன்னாட்டு முனையமாக இது துவங்கப்பட்டது. இந்நிலையம், மெல்பேர்ண் நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாறுஇவ்வானூர்தி நிலையம் துவங்குவதற்கு முன் எசென்டன் வானூர்தி நிலையம் தான் மெல்பேர்ண் நகரின் தலையாய நிலையமாக செயல்பட்டு வந்தது. பயணிகள் வருகை அதிகரிப்பால் 1950ல் எஸ்சாண்டன் நிலையம் பன்னாட்டு முனையமாக தரம் உயர்த்தப்பட்டது. 1950களின் இடையில் பன்னாட்டு விமானங்களை கையாள முனையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் நகரின் மையத்தில் நிலையம் இருந்ததால், அதனைச் சுற்றி குடியிருப்புகளும் ஆக்கிரமிப்புகளும் பன்மடங்கு பெருகியிருந்தன. இதனை அகற்றிவிட்டு நிலையத்தை விரிவுபடுத்துவது முடியாத காரியமாக உணர்ந்தனர். எசென்டன் நிலையத்திற்கு மாற்றாக வேறு இடத்தினை தேர்வு செய்ய 1958ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனி குழு ஒன்று உருவாக்கப்பட்டது.[4]. இறுதியில் 1959ம் ஆண்டு மெல்பேர்ண் நகரின் அருகே 5,300 எக்டேர் பரப்பளவில் தளமரைன் என்ற இடத்தைத் தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அரசு.[5]. 1959ம் ஆண்டு மே மாதம் தளமரைனில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதாக அன்றைய பிரதமர் இராபர்ட் மென்சிஸ் அறிவித்தார். இதற்காக 1962-இல் ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு $45 மில்லியன் செலவில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.[4][6][7][8][9] விமான நிலையப் பணிகள் முழுமையடைந்து 1970ம் ஆண்டு சூலை 1ம் நாள் அன்றைய பிரதமர் ஜான் கார்ட்டன் திறந்து வைத்தார். இதன் மூலம் மெல்பேர்ண் பன்னாட்டு வானூர்தி முனையமாக 20 ஆண்டுகள் செயல்பட்டு வந்த எசென்டன் நிலையத்தில் சேவை முடிவிற்கு வந்தது.[10] இருந்தும் 1971ம் ஆண்டு சூன் மாதம் 26ம் நாள் வரை எசென்டென் வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்காக செயல்பட்டு வந்தது. புதிய வானூர்தி நிலையம் செயல்படத்துவங்கிய முதலாம் ஆண்டில் ஆறு பன்னாட்டு வானூர்திகளோடு மொத்த வெளிநாட்டுப் பயணிகள் வருகை 155,275 ஆக பதிவாகியது.[11][12][12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia