மேகநாத சாஃகா
மேகநாத சாஃகா (Megh Nad Saha, மேக்நாத் சாஹா, வங்காளம்:মেঘনাদ সাহা, தேவநாகரி: मेघनाद साहा, அக்டோபர் 6, 1893 – பெப்ரவரி 16, 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது.[1][2] பிறப்பு, பள்ளிப்பருவம்மேகநாத சாஃகா அக்டோபர் 6, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் சகன்னாத் சாஃகா என்ற சிறு மளிகை வியாபாரியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமை காரணமாக சாஃகாவை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்ப நினைத்தார் அவர் தந்தை. சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் அவரைத் தடுத்து சாஃகாவை பள்ளியில் தொடரச் செய்தனர். விளையும் பயிர் முளையிலேபுகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்துள்ளார். 1905 ஆம் ஆண்டு வங்கத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது ஆங்கில அரசு. மக்கள் வெகுண்டெழுந்தனர். சாகாவுக்கு வயது பன்னிரண்டு. தன்னால் போராட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லையே என்று வருந்தினார் சாஃகா. வங்கத்தின் கவர்னர் பள்ளிக்கு வந்த அன்று தன் நண்பர்களை அழைத்துப்பேசி, வகுப்புகளைப் புறக்கணித்தார் சாகா. பள்ளி நிருவாகம் இச்செயலை வன்மையாக கண்டித்தது. சாகாவுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது. வேறு வழியின்றி சிறிய பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்டார் சாகா. இருப்பினும் மனந்தளராத சாகா, பள்ளி இறுதித்தேர்வில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். உதவித்தொகையை மீண்டும் பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில்பிரசிடென்சி கல்லூரியில் சாஃகா வுடன் சத்தியேந்திர நாத் போசு மற்றும் மகலனோபிசு ஆகியோர் இணைந்தனர்; இவர்களும் பின்னாளில் முக்கியமான இயற்பியலாளர்களாக வளர்ந்தெழுந்தனர். கல்லூரியில் பிரபுல்ல சந்திர ரே, சகதீசு சந்திர போசு ஆகிய மகத்தான இயற்பியலாளர்கள் சாஃகாவின் ஆசிரியர்களாக இருந்தனர். இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பில் பல்கலையிலேயே இரண்டாவதாக வந்த சாஃகா (முதலிடம் சத்தியேந்திர நாத் போசுக்கு!) இந்திய நிதிப்பணியில் சேர்ந்து வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தைக் கரையேற்ற நினைத்தார். ஆனால் அவர் பள்ளியில் செய்த வகுப்புப் புறக்கணிப்பு, சுபாசு சந்திர போசு, இராசேந்திர பிரசாத் ஆகிய விடுதலை வீரர்களுடனான தொடர்பு ஆகிய காரணங்களால் அவருக்கு I.F.S. வேலை நிராகரிக்கப்பட்டது. அதுவே இயற்பியலுக்கு நன்மை ஆகிப்போனது -- அவரது முதல் காதலான இயற்பியலின் பக்கம் சாஃகாவின் நாட்டம் சென்றது. சாஃகா அயனியாக்க சமன்பாடு
பிற முக்கிய பங்களிப்புகள்
சாஃகா பெற்ற முக்கிய பெருமை
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia