மே. அ. இராசகுமார்

மே. அ. இராசகுமார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்கே. கருணகிரி முத்தையா
பின்னவர்கே. சோலைராசு
தொகுதிமருங்காபுரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-09-18)18 செப்டம்பர் 1937
மேலூர், திருச்சிராப்பள்ளி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்மேலூர், சேவல்பட்டி, மணப்பாறை
முன்னாள் மாணவர்
  • ஜமால் முகமது கல்லூரி (இளங்கலை) * சென்னை சட்டக் கல்லூரி (இளங்கலைச் சட்டம்)
தொழில்வழக்கறிஞர்

மே. அ. இராசகுமார் (M. A. Rajkumar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1937ஆம் ஆண்டு செப்டெம்பர் 18ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலூரில் பிறந்தார். திருவரங்கம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்த இராசகுமார், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் இளநிலைப் படிப்பினையும் சென்னை, சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டப் படிப்பினையும் முடித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 48-49.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya