ம. கனகரத்தினம்
மயில்வாகனம் கனகரத்தினம் (Mylvaganam Canagaratnam, 15 ஏப்ரல் 1924 – 20 ஏப்ரல் 1980) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். வாழ்க்கைச் சுருக்கம்கனகரத்தினம் 1924 ஏப்ரல் 15 இல் பிறந்தவர்.[1] இவர் 1977 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக இரட்டை-அங்கத்தவர் தொகுதியான பொத்துவிலில் போட்டியிட்டு இரண்டாவதாகத் தெரிவாகி நாடாளுமன்றம் சென்றார்.[2] தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் (1977 திசம்பரில்) இவர் அன்றைய ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். இதன் மூலம் அவர் மட்டக்களப்புக்கான மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4] தாக்குதல்கனகரத்தினம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு முன்னால் 1978 சனவரி 27 இல் இனந்தெரியாதோரால் சுடப்பட்டார்.[5][6] இவர் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.[4][7] படுகாயமடைந்த நிலையில் 1980 ஏப்ரல் 20 இல் இவர் காலமானார்.[3][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia