யாங் டி பெர்துவா நெகிரியாங் டி பெர்துவா நெகிரி (ஆங்கிலம்: Yang di-Pertua Negeri; மலாய்: Yang di-Pertua Negeri) என்பது மன்னர்களின் ஆளுமை இல்லாத மலேசிய மாநிலங்களான பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் (கவர்னர்) ஆளுநரைக் குறிப்பிடும் பதவி. இவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைப்பார்கள். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1] பொதுசிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களைச் சுல்தான்கள் என்று அழைக்கிறார்கள். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும், பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம். ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவாவை, மலேசியாவின் மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்கள் நியமனம் செய்வார். மலேசியப் பிரதமருடன் கலந்தாலோசித்த பிறகு, அந்த நியமனத்தைச் செய்வார். ஒரு மாநிலத்தின் யாங் டி பெர்துவா, நான்கு ஆண்டு காலம் பதவி வகிப்பார். இவரை மாண்புமிகு Tuan (Yang Terutama (T.Y.T.) என்று அழைக்க வேண்டும். மக்களாட்சி முறைமைஇந்தப் பதவி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலேசிய மாமன்னர் யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் நியமிக்கப்படும் பதவி ஆகும். அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களின் சம்மதத்தைப் பெற்ற பின்னர், யாங் டி பெர்துவா நெகிரி நியமிக்கப் படுகிறார்கள்.[2] பினாங்கு, மலாக்கா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில், யாங் டி பெர்துவா நெகிரி என்பவர்; நாடாளுமன்ற மக்களாட்சி முறைமையில் மாநிலத் தலைவராகச் செயல் படுகிறார். செயல்பாடுகள்மாநிலச் சட்டமன்றத்தில் யாங் டி பெர்துவா நெகிரியின் முக்கியமான செயல்பாடுகள்:
விளக்கம்
யாங் டி பெர்துவா நெகிரி பட்டியல்யாங் டி பெர்துவாக்களின் பட்டியல்:
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia