யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை என்பது சைவ மக்களுக்குச் சிறப்பாகவும், தமிழ் மக்களுக்குப் பொதுவாகவும் நன்மை தரும் விடயங்களை செய்வதற்கென யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் உருவாக்கப்பட்ட ஒரு சைவ சமய நிறுவனமாகும். ஆறுமுக நாவலர் சைவ சமயத்திற்கும் தமிழ்மொழிக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கினைக் கொண்டு அவரின் மறைவிற்குப் பின் சைவப் பெரியோர்களால் சைவ மக்களின் சமய, கல்வி, கலாசார, சமூக மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. வரலாறுயாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை சர்வதாரி வருடம் சித்திரை மாதம் 29ம் திகதி (ஏப்ரல் 29, 1888)) யாழ்ப்பாணம் சைவ சமய பரிபாலன சபை என்ற பெயரில் வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்டது. பின்னர், விகிர்தி வருடம் கார்த்திகை 15ஆம் நாள் (நவம்பர் 15, 1890) திருத்தப்பட்ட பிரமாணங்களுக்கமைய யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையின் பணிகள் யாவும் யாழ்ப்பாணம் கல்லூரி வீதி 66 ஆம் இலக்கத்தில் உள்ள நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் இயங்கும் பணிமனையில் இருந்தே நெறிப்படுத்தப்படுகின்றன. சேவைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia