ரசிப் தைய்யிப் எர்டோகன்
ரசிப் தைய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan)( பிறப்பு:26 பெப்ரவரி 1954) துருக்கியின் தற்போதைய 12வது ஜனாதிபதியாவார். அவர் முன்பு துருக்கியின் பிரதமராக 2003 முதல் 2014வரையான காலப்பகுதியிலும்,இஸ்தான்பூலின் மேயராக 1994முதல் 1998வரையான காலப்பகுதியிலும் கடமையாற்றினார்.2001இல், அவர் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை உருவாக்கினார்.2014ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் நிற்கமுன்னர், அவரது கட்சியை பொதுத்தேர்தல்களில் தலைமை தாங்கி வழிநடத்தி 2002,2007,2011 ஆண்டு தேர்தல்களில் அவரது கட்சியை வெற்றிபெறச் செய்தார்.இஸ்லாமிய அரசியல் பின்னணி கொண்ட அவர்,தான் பழமைவாத ஜனநாயகவாதி என கூறுகின்றார்.அவரது நிருவாகம் சமூகப் பழமைவாதம் மற்றும் பொருளாதார கொள்கையுடையதாக நோக்கப்படுகின்றது.[4] ஒரு இமாம் ஹதிப் பாடசலையில்(இரண்டாம் நிலைக்கல்வி நிலையம்) கற்ற எர்டோகன், துருக்கியின் ஒரு உதைப்பந்தாட்ட அணியில் நடுத்தர சிறப்பான வீராக விளையாடினார்.1994இல் இஸ்லாமிய நலன்புரிக் கட்சியிலிருந்து இஸ்தான்பூலின் மேயராக தெரிவுசெய்யப்படமுன்னர்,இஸ்லாமிய அரசியல் கட்சிகளில் மாணவனாக இணைந்துகொண்டார்.[2] 1998இல் மதசகிப்புத்தன்மை காரணமாக அவரது அலுவலகத்திலிருந்து தடை செய்யப்பட்டு,10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,வெளிப்படையான இஸ்லாமிய அரசியலை கைவிட்டு, மிதவாத பழமைவாத கட்சியொன்றாக நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை 2001இல் உருவாக்கினார்.அவரது கட்சி, 2002ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைய விட சற்றுக்குறைவான ஆசனங்களை வென்றது.எர்டோகனின் அரசியல் அலுவலகத்தடை நீக்கப்படும்வரை, கட்சியின் இணைநிறுவனர் அப்துல்லாஹ் குல் அவரது அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.சேர்ட் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியடைந்ததைத் தொடரந்து,2003 மார்ச் மாதம் எர்டோகன் துருக்கியின் பிரிதமரானார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia