ரத்னாவளி (திரைப்படம்)
ரத்னாவளி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரஃபுல்லா கோசு இயக்கிய இத்திரைப்படத்தை[1] ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் தயாரித்திருந்தார். கல்கத்தாவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[2] இதன் பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பி. எஸ். ரத்னாபாய், பி. எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள் ஆகியோர் நடித்திருந்தனர். பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றிய ரத்னாவளி நாடகத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.[4] திரைக்கதைஹர்ஷவர்தனர் எழுதிய ரத்னாவளி என்ற காப்பியத்தை அடிப்படையாக வைத்து பம்மல் சம்பந்த முதலியார் இதன் திரைக்கதையை எழுதினார். கௌசாம்பி நாட்டு மன்னனுக்கும் (எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி), இலங்கையின் இளவரசி ரத்னாவளிக்கும் (பி. எஸ். ரத்னாபாய்) ஏற்பட்ட காதல் பற்றியது இத்திரைப்படத்தின் கதை.[5] ஒரே அரசனை ஒன்று விட்ட சகோதரிகளான இருவர் மணக்கிறார்கள்.[6] நடிகர்கள்
பாடல்கள்பாபநாசம் சிவன் பாடல்களை இயற்றிய முதலாவது திரைப்படம் இதுவாகும்.[3]
வரவேற்புஇப்படம் வெற்றி அடையவில்லை, ஆனாலும் நகைச்சுவைக் காட்சிகளுக்காக வரவேற்பைப் பெற்றது. ‘தென்னாட்டுச் சார்லி சாப்ளின்’ எனப் போற்றப்பட்ட சி. எஸ். சாமண்ணா, சுப்பிரமணிய முதலியார், கே. எஸ். அங்கமுத்து, பபூன் சண்முகம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர்.[6] நாடகங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருந்த பி.எஸ். ரத்னாபாய், பி.எஸ். சரஸ்வதிபாய் ஆகிய இரு சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்தனர். நெல்லை மாவட்டம், பாளையம்கோட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பாடல்கள் கிராமபோன் இசைதட்டுகளில் அக்காலத்தில் வெளியாகியுள்ளன.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia