ராஜேஷ்குமார்ராஜேஷ்குமார் (Rajesh Kumar) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.[1][2] 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன் மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், 20 மார்ச், 1947இல் பிறந்தார்.[சான்று தேவை] இவரது பெற்றோர் இரங்கசாமி மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் ஆவர். இவரது இயற்பெயர் ராஜகோபால். கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார். பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1968இல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல் புதினம் “வாடகைக்கு ஒரு உயிர்” 1980இல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும் பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள் இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டிற்கான, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. படைப்புகள்(பட்டியல் முழுமையானதல்ல)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia