ராதிகா ராமசாமி
ராதிகா ராமசாமி, ஓர் இந்திய காட்டுயிர் ஒளிப்படக்கலைஞராவார். அனைத்துலக ஏற்புபெற்ற இந்தியாவின் முதல் பெண் காட்டுயிர் ஒளிப்படக் கலைஞராவார்.[1][2] இவர் புது தில்லியில் வசித்துவரும் இவர், சார்பிலா ஒளிப்படக்கலைஞராவார்.[3] வாழ்க்கை வரலாறு![]() ![]() தேனி அருகே உள்ள வெங்கடாச்சலபுரம் என்ற ஊரில் பிறந்தார். திருமணத்திற்குப் பின் 1999 முதல் புது தில்லியில் வசித்து வருகிறார்.[4] இவர் கணினியியலில் பொறியியல் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்று மென்பொருள் பொறியாளராக இருந்து பின்னர் முழுநேர சார்பிலா ஒளிப்படக் கலைஞராக மாறினார்.[5] செயல்பாடுகள்ஆரம்பத்தில் தனது மாமா வாங்கித் தந்த ஒளிப்படக் கருவியில், பொழுதுபோக்காக மரங்களையும் மலர்களையும் எடுக்கத் தொடங்கிப் பின்னர், 2003 இல் பரத்பூர் இராஜஸ்தானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியக் களமான கேவலாதேவ் தேசியப் பூங்காவில் பறவைகளை முதன்முதலாக ஒளிப்படம் எடுக்கத் தொடங்கினார்.[6] தொடக்கக்காலத்தில் நேர்த்தியான படங்களாக எடுக்காவிட்டாலும் பறவைகளின் குணாதிசயங்களைக் காட்சிப்படுத்தினார். ஒக்லா பறவைகள் சரணாலயத்திற்கு அடிக்கடி சென்று கவனிக்கத் தொடங்கி பின்னர் இந்தியா, கென்யா, தன்சானியா நாடுகள் உட்பட பல நாடுகளுக்குச் சென்று பறவைகளைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.[6] 2005 இல் தூய்மை கங்கைத் திட்டதிற்கு இவரது கானுயிர்ப் படங்கள் புது தில்லியிலுள்ள இந்திய சர்வதேச மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 2007 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆண்டு மலரில் இவரின் பறவை ஒளிப்படம் வெளிவந்தது.[1] பேர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2008 ஆம் ஆண்டு சிறந்த 20 ஒளிப்படக் கலைஞர்களுள் ஒருவராக இவரைத் தேர்வு செய்தது.[5][7] இவர் இந்திய ஒளிப்படக்கலைச் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும், நிக்கான் தொழிற்சேவை அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.[5] வனவிலங்கு தொடர்பான ஒளிப்படக் கண்காட்சிகள், பயிற்சி வகுப்புகள் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்[4][8][9] 2015 மார்ச் 20 இல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை நடத்திய தேசிய ஒளிப்படக்கலை விருது விழாவின் நடுவராக இருந்தார். 2016 இல் இத்தாலியில் சியேனா அனைத்துலகப் பட விருது நிகழ்வின் நடுவராகவும் இருந்துள்ளார்.[10] பல சர்வதேசப் புகைப்பட விழாக்களில் பங்கெடுத்தும் நடுவராகவும் இருந்துள்ளார்.[11] வெளியீடுகள்
விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia