ராயகடா
![]() இராயகடா (Rayagada) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவடடத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இராயகடா நகரத்தை நிறுவியவர் கலிங்கத்தின் ஜெய்ப்பூர் சிற்றரசர் விஸ்வநாத் தேவ் கஜபதி (கிபி 1527-1531) ஆவார். 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் வரை ராயகடா நகரம், ஜெய்ப்பூர் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.[1] இந்நகரம் அருகே உள்ள தேவகிரி மலையில் பஞ்சமுக சிவலிங்கம் கோயில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 24 வார்டுகளும், 16,362 வீடுகளும் கொண்ட ராயகடா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 71,208 ஆகும். அதில் ஆண்கள் 36,036 மற்றும் 35,172 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.62% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.06%, இசுலாமியர் 2.21%, கிறித்தவர்கள் 2.93% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.[2] இநநகரத்தில் பெரும்பான்மையோர் ஒடியா மொழி பேசுகின்றனர். அரசியல்இந்நகரம் இராயகடா சட்டமன்றத் தொகுதிக்கும் (பட்டியல் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது), கோராபுட் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia