ருக்குமணி முத்துக்கிருஷ்ணன்
ருக்குமணி முத்துக்கிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 10, 1948) மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிங்கை, மலேசிய வானொலிகளில் 100க்கும் மேற்பட்ட சமூக வானொலி நாடகங்களை எழுதியவர். மலேசியத் தமிழ்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான பரப்புரைகளைச் செய்து வருகின்றார். குழந்தை வளர்ப்பு, சிறுவர் பராமரிப்பில் ஏற்பட்டு வரும் சமூகச் சிக்கல், சீர்கேடுகளைப் பற்றி அதிகம் எழுதி வருகின்றார். ஆதரவற்றக் குழந்தைகளின் இல்லங்களுக்குச் சென்று பணிவிடை செய்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இவருடைய கணவர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனும் ஓர் எழுத்தாளர். எழுத்துத் துறை ஈடுபாடு1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய ஆக்கங்கள் மலேசியா, சிங்கப்பூர் தேசிய பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. பல தொடர்கதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் என் ஏறக்குறைய ஐநூறு படிவங்களைப் படைத்துள்ளார். நூல்கள்
பரிசுகளும், விருதுகளும்
சாதனையாளர் விருதுகள்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia