ரேணுகா ரவீந்திரன்
ரேணுகா ரவீந்திரன் (Renuka Ravindran, இராஜகோபாலன்), இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பீடாதிபதியாகப் பணியாற்றினார்.[1] கல்வி மற்றும் பணிரேணுகா இராஜகோபாலன் சென்னை வேப்பேரி பிரசண்டேசன் கான்வென்ட்டின் மாணவியாக இருந்தார். பின்னர் சென்னை பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார்.[2] இவர் இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செருமனி ஆச்சென் பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3][4] 1967 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்து கணிதவியல் பிரிவில் பேராசிரியராகவும், பின்னர் இந்திய அறிவியல் கழகத்தின் பீடாதிபதியாகவும் பணிபுரிந்தார். செருமனியில் கெய்செர்சிலாப்டன் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்.[5] அவர் நேரியல்சாரா அலைகள் மற்றும் நியூட்டன் விதிக்கு உட்படாத திரவங்கள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia