லக்கிடி, பாலக்காடு
லக்கிடி அல்லது லக்கிடி பெருர் (Lakkidi or Lakkidi Perur) என்பது இந்தியாவின், கேரளத்தின் ,பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றைப்பாலம் வட்டத்ததில் உள்ள ஒரு சிற்றூராகும். இது பாலக்காடு - பட்டம்பி சாலையில் பாலக்காடுக்கு மேற்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒற்றைப்பாலம் ஆகும். இது மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 303 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. லக்கிடி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 679301 மற்றும் தொலைபேசி குறியீடு 0466 ஆகும். வரலாறுஇந்த இடம் முதலில் வள்ளுவநாடு ஸ்வரூபம் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. [1] வள்ளுவநாடு என்பது தென்னிந்தியாவின் தற்போதைய கேரள மாநிலத்தில் இடைக்கால சிற்றரசாக இருந்தது, தெற்கில் பாரதப்புழா ஆற்று முதல் வடக்கில் பந்தலூர் மலை வரையிலும், மேற்கில் அரபிக் கடலாலின் பொன்னானி, துறைமுகத்திலிருந்தும், கிழக்கில் அட்டப்பாடி மலைகளாலுக்கு இடையிலும் இந்த அரசு இருந்தது. லக்கிடியைச் சேர்ந்த கிள்ளிக்குறிச்சி மங்கலம் 18 ஆம் நூற்றாண்டய கவிஞர் குஞ்சன் நம்பியார் பிறந்த இடமாகும். இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் நய்யாண்டி பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் கேரள அரசால் நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia