லஷ்கர்-இ-ஜாங்விலஷ்கர்-இ-ஜாங்வி (Lashkar-e-Jhangvi, உருது: لشكرِجهنگوی) பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1996 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பானது சிபா-இ-ஷபா அமைப்பிலிருந்து பிரிந்த ரியாஸ் பஸ்ராவால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவால் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.[2] இந்த அமைப்பு தொடர்ந்து ஷியா பிரிவு மக்களையும் அவர்களைப் பாதுகாப்பவர்களையும் அழித்து வந்துள்ளது.[3][4] பாகிஸ்தான் உளவு அமைப்பால் இந்த தீவிரவாதக் குழு ஆபத்தான ஒன்று என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[5] உருவான விதம்ரியாஸ் பஸ்ரா தன்னுடன் அக்ரம் லகோரி மற்றும் மாலிக் ஈஷாக் ஆகியோரைச் சேர்த்துக் கொண்டு சிபா-இ-ஷபா அமைப்பிலிருந்து பிரிந்து 1996-ல் இந்த அமைப்பை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் ரியாஸ் பஸ்ரா மரணமடைந்த[6] பின்னர் இந்த அமைப்பின் தலைவராக 'அக்ரம் லகோரி ஆனார்.[7] சிறைச்சாலையிலிருந்த மாலிக் ஈஷாக் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தியதி விடுதலை செய்யப்பட்டபின்னர் இகுழுவின் செயல் தலைவரானார் (operational chief).[8][9][10][11] தொடர்புகள்இந்தக் குழுவிற்கு தலிபான், இஸ்லாமிக் மூவ்மெண்ட் ஆஃப் உஸ்பெக்கிஸ்தான், 'சிபா-இ-ஷபா, ஹர்கத்-உல்-முஜாகித்தீன், ஜெய்ஸ்-இ-முகம்மது, அல் காயிதா[1][12][13] மற்றும் ஜூந்தாலா ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு இருந்தது.[14] மேலும் இவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தனது செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் அல் காயிதா அமைப்பிடமிருந்து பண உதவியும் பெற்றுள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia