லீலா நம்பூதிரிபாடு
லீலா நம்பூதிரிபாடு (Leela Nambudiripad)(16 மே 1934 - 27 ஏப்ரல் 2021) என்பவர் சுமங்கலா எனும் புனை பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் மலையாளத்தில் குழந்தைகள் இலக்கியம் எழுதிய இந்திய எழுத்தாளர் ஆவார்.[1][2] நெய்பாயாசம், மிதைப்பொடி மற்றும் மலையாளத்தில் பஞ்சதந்திரத்தின் மொழிபெயர்ப்புகள் ஆகியவை லீலாவின் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் சில. லீலா நம்பூதிரிபாடு 1979ல் குழந்தை இலக்கியத்துக்கான கேரள சாகித்திய அகாதமி விருதையும், 2013ல் குழந்தை இலக்கியத்துக்கான மண்டல சாகித்திய அகாதமி விருதையும் பெற்றவர். பிறப்புலீலா நம்பூதிரிபாடு 1934ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வெள்ளிநேழியில் (பாலக்காடு மாவட்டம், கேரளா, இந்தியா) சமசுகிருத அறிஞர்களான ஓ. எம். சி. நாராயணன் நம்பூதிரிபாடு மற்றும் உமா அந்தர்சனம் ஆகியோரின் மூத்த மகளாகப் பிறந்தார்.[3] பணிலீலா நம்பூதிரிபாடு 1959-ல் எழுத்தாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சுமங்கலா என்ற புனைபெயரில் எழுதினார். 40 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், இவர் மலையாளத்தின் எனிட் பிளைட்டன் எனக் குறிப்பிடப்பட்டார்.[4] லீலா 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். இவற்றில் 23 குழந்தைகளுக்கானவை. மித்தாய்ப்பொடி (இனிப்பு பெட்டி), நெய்பாயாசம் (நெய்யுடன் அரிசி கொழுக்கட்டை), மஞ்சாதிக்குரு, குறிஞ்சியும் கூட்டுக்காரும், ஈ கத்த கெட்டிடுந்தோ (இந்த கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?), நாடோடி சோல்கதைகள், ரகசியம் மற்றும் குடாமணிகள் லீலாவின் முக்கியப் படைப்புகளாகும். பஞ்சதந்திரத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காக இவர் மிகவும் பிரபலமானார். சுமங்கலா வால்மீகி ராமாயணத்தை சமசுகிருதத்திலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். லீலா பேச்சுவழக்கு மலையாளத்தின் அகராதியான பச்சை மலையாள நிகண்டுவின் தொகுப்பாளராகவும் இருந்தார். மலையாள மொழி பற்றிய நுண்ணறிவு மற்றும் பல்வேறு உண்மைகளுக்காக இந்தப் புத்தகம் பாராட்டப்பட்டது.[5][6] லீலா மலையாளத் திரைப்படமான செந்தா (1973) திரைப்படத்தில் பாடல் ஒன்றை எழுதினார். மேலும் குழந்தைகளுக்கான மலையாள மொழி நகைச்சுவையான பூம்பாட்டாவிற்கும் பங்களிப்பாளராக இருந்தார். கேரளாவில் கலை மற்றும் கற்றலுக்கான மையமான கேரள கலமண்டலத்தின் வரலாறு குறித்த புத்தகத்தையும் இவர் எழுதினார்.[5] சுமங்கலா 1979ஆம் ஆண்டு குழந்தை இலக்கியத்தில் சிறந்த படைப்புக்கான கேரள சாகித்திய அகாதமி விருது 1999ஆம் ஆண்டில் குழந்தை இலக்கியத்திற்கான வாழ்நாள் பங்களிப்புக்கான பால சாகித்திய நிறுவன விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 2013ஆம் ஆண்டு குழந்தை இலக்கியத்திற்கான கேந்திர சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர். கேரள சாகித்திய அகாதமி தலைவர் வைசாகன், மலையாளக் குழந்தைகளின் தலைமுறைகளை வாசிப்பு உலகிற்கு அழைத்துச் சென்றதற்காக இவரைப் பாராட்டினார். லீலாவின் புத்தகங்கள் மனித விழுமியங்களின் முக்கியத்துவத்தை விதைத்தன. குழந்தைகள் எளிமையாகப் படிக்கக்கூடியதாகவும் இருந்தன. இவர் எழுதும் தொனியை "ஒரு பாட்டி தன் பேரக்குழந்தைகளுக்குக் கதை சொல்லும்" தொனியுடன் ஒப்பிடப்படுகிறது.[5] வாழ்க்கைலீலா 2014-ல் தேசமங்கலம் அஷ்டமூர்த்தி நம்பூதிரிபாடு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உஷா நம்பூதிரிபாடு, டி. நாராயணன் மற்றும் டி. அஷ்டமூர்த்தி என மூன்று குழந்தைகள் இருந்தனர். கேரள கலாமண்டலத்தின் மக்கள் தொடர்புத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றினார்.[7] இவர் இந்தியாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்காஞ்சேரி நகரில் வசித்து வந்தார்.[8] நம்பூதிரிபாடு 27 ஏப்ரல் 2021 அன்று வடக்காஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் முதுமை தொடர்பான நோய்களால் 87 அகவையில் இறந்தார். [9] வெளியீடுகள்ஆதாரம்(கள்): [10]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia