வங்காளதேச தேசியக் கட்சி
சுருக்கமாக பி.என்.பி (BNP) என அறியப்படும் வங்காளதேச தேசியக் கட்சி தற்காலத்தில் வங்காளதேசத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளுள் ஒன்று. 1978 ஆம் ஆண்டின் சனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் ஏழாவது சனாதிபதியான சியாவுர் ரகுமானால் 1978 செப்டெம்பர் 1 இல் இக்கட்சி தொடங்கப்பட்டது. நாட்டின் தேசியக் கருத்துக் கொண்ட மக்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கம். கட்சி உருவான பின்னர், அது இரண்டாம், ஐந்தாம், ஆறாம், எட்டாம் தேசியத் தேர்தல்களிலும், 1978 இலும், 1981 இலும் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தோல்வியடைந்த போதும், நாட்டின் வரலாற்றில் அதுவரை இல்லாதபடி 116 உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவானது. 2014 இல் இடம்பெற்ற தேசியத் தேர்தலைப் புறக்கணித்ததனால், அதன் பின்னர் உருவான நாடாளுமன்றத்தில் இக்கட்சிக்கு உறுப்பினர்கள் எவரும் இல்லை.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia