வடகிழக்கு மண்டலக் குழு![]() வடகிழக்கு மண்டல குழு (North Eastern Council) என்பது ஒரு மண்டல சபை ஆகும். மண்டலக் குழு சட்டம் 1971 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான ஆலோசனைக் குழுவாகும். இது நவம்பர் 7, 1972 அன்று சில்லாங்கில் நடைமுறைக்கு வந்தது. [1] இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் எட்டு மாநிலங்கள். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகியவை ஆகும். முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சிக்கிம் 2002 ஆம் ஆண்டில் மண்டல குழுவில் சேர்க்கப்பட்டது.[2] சபையின் தலைமையகம் சில்லாங்கில் அமைந்துள்ளது. [3] பணிகள்மண்டல குழு ஆரம்பத்தில் ஒரு ஆலோசனைக் குழுவாக அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது 2002 முதல் மண்டல திட்டமிடல் அமைப்பாக செயல்படுகிறது. இந்த மாநிலங்களின் பொருளாதார மற்றும் சமூகத் திட்டத்தை கவனித்துக்கொள்வதற்கும், மாநிலங்களுக்கு இடையிலான சுமூகமான உறவை மேம்படுத்தவும் செயல்படுகிறது.[4] நிதிமண்டல குழுவின் நிதி முக்கியமாக மத்திய அரசிடம் உள்ளது. வரலாற்று ரீதியாக 56% மாநில அரசுகள் மற்றும் மீதமுள்ளவை மத்திய அரசு துறைகளால் வழங்கப்பட்டுள்ளன.[4] 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 3 ஆண்டு திட்டம், 2500 கோடி வருடாந்திர பட்ஜெட்டைக் கொண்டது. மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia