வடிவீஸ்வரம்

வடிவீசுவரம்
கிராமம்
வடிவீசுவரம் is located in தமிழ்நாடு
வடிவீசுவரம்
வடிவீசுவரம்
தமிழ்நாட்டில் வடிவீசுவரத்தின் அமைவிடம்.
ஆள்கூறுகள்: 8°10′46″N 77°26′20″E / 8.17944°N 77.43889°E / 8.17944; 77.43889
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி மாவட்டம்
ஏற்றம்
15 m (49 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
629 002
தொலைபேசி இணைப்பு எண்04652
வாகனப் பதிவுதநா74

வடிவீசுவரம் (Vadiveeswaram) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரின் கிழக்குப் பகுதியில் பழையாற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் முதலில் பிராமணர்கள் வாழ்ந்த அக்ரகாரம் ஆகும். 19-ஆம் நூற்றாண்டில் நன்கு அறியப்பட்ட நீலகண்ட சிவன் இவ்வூரில் பிறந்தார்.

நிலவியல்

வடிவீசுவரம் பழையாறு ஆற்றிலிருந்து[1] 8°10′46″N 77°26′20″E இல்[2] அமைந்துள்ளது. மேலும், பெரிய தெரு, பெரியவா தெலுங்கு, தளவாய் (தளவழி) தெரு, மேட்டு தெரு, கிழக்கு ரத தெரு , மேற்கு ரத தெரு, சாஸ்தன் கோவில் தெரு மற்றும் கல்மாடத் தெரு ஆகிய தெருக்களைக் கொண்டுள்ளது.

2001-ஆம் ஆண்டில், இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, வடிவீசுவரத்தில் 81 விழுக்காடு கல்வியறிவு பெற்ற 5,254 மக்கள் வசிக்கின்றனர்.[3]

நாகர்கோவில் இரயில் நிலையம் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். இது மையத்திலிருந்து (முக்கிய வீதிகள்) சுமார் 5 நிமிட நடைப்பயணத்தில் உள்ளது.

கருநாடக இசையமைப்பாளர் நீலகண்ட சிவன் 1839-இல் வடிவீசுவரத்தில் பிறந்தார். திருநீலகண்ட போதம் என்ற படைப்பில் அவர் பிறந்த இடத்தை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார். 2007இல் கிராமத்தில் கர்நாடக இசை விழா நடைபெற்றது.[4]

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya