வணிகச் சட்டங்கள்
Meaning discounting of bill ஒப்பந்தச் சட்டம் 1872அறிமுகம்: வெளி இணைப்பு கூட்டு வர்த்தகச் சட்டம் 1932வெளி இணைப்பு இந்திய நிறுமச் சட்டம் 2013அறிமுகம்: வெளி இணைப்பு பொருட்கள் விற்பனைச் சட்டம்அறிமுகம்அசையும் /நகரும் சொத்துகளை விற்பது / வாங்குவது குறித்து இந்த சட்டம் கூறுகிறது.இது சரக்கு விற்பனைச் சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.இந்தியாவில் 1930 ஆம் ஆண்டில் இந்த சட்டம் (SALE OF GOODS ACT 1930) இயற்றப்பட்டது.அதற்கு முன்பு , இந்திய ஒப்பந்தங்கள் சட்டத்தின்கீழ் இந்த விஷயங்கள் இருந்தன.இங்கிலாந்து நாட்டின் பொருட்கள் விற்பனைச் சட்டம் 1893 ஐப் பின்பற்றி இந்த சட்டம் இயற்றப்பட்டது.இந்தியாவில் ஜம்மு -காஷ்மீர் மாநிலம் தவிர இதர பகுதிகளுக்கு இந்த சட்டம் பொருந்தும். விற்பது மற்றும் வாங்குவது என்பது மிக எளிமையான பரிவர்த்தனைகள் போலத் தோன்றினாலும் இவற்றால் பல சிக்கல்கள் எழ அதிகமான வாய்ப்புகள் உள்ளன.உதாரணமாக , வாங்குபவரோ அல்லது விற்பவரோ தாங்கள் செய்துகொண்ட ஒப்பன்தத்தின்படி தங்கள் கடமையை நிறைவேற்றத்தவறும்போது தகராறுகள் எழுகின்றன.இவற்றைத்தீர்த்து வைக்கவும் சமரசம் செய்து வைக்கவும் தனி அமைப்புகள் தேவைப்படுகின்றன.எனவே இத்தகைய பிரச்னைகள் எழாவண்ணம் முன்கூட்டியே தடுக்கும் நோக்கத்துடன் இந்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.ஜூலை 01, 1930 முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. வரையறைகள்இந்த சட்டத்தின் பிரிவு 2 , இந்த சட்டத்தில் கூறப்படும் பல்வேறு சொற்களை வரையறுக்கிறது.ஏதேனும் சொற்கள் வரையறுக்கப்படாமல் இருந்தால் இந்திய ஒப்பந்த சட்டம் 1872 இல் உள்ள வரையரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
விற்பனை- பிரிவு 4(2) விற்பனை என்ற சொல்லை வரையறுக்கிறது. பொருட்கள் - பிரிவு 2(7) பொருட்கள் என்ற சொல்லை வரையறுக்கிறது."பணம் மற்றும் Actionable Claims தவிர்த்த ஏனைய நகரும் சொத்துக்கள் அனைத்துமே பொருட்கள்தான்.வர்த்தக நிறுவனக்களின் பங்களும் பொருட்களே.விற்பனைக்கு முன்பாக பூமியில் இருந்து வெட்டி எடுத்து தர சம்மதிக்கப்பட்ட , நிலத்தில் வளர்ந்துள்ள பயிர்கள்,புல் ஆகியவையும் பொருட்கள்தான்.
1.இன்னவை என்று அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்ட பொருட்கள் (Specific Goods)
விற்பனையும் விற்பனைக்கான ஒப்பந்தமும்விற்பவரின் கடமைகள்
வாங்குபவரின் கடமைகள்
விற்பவரின் உரிமைகள்
வாங்குபவரின் உரிமைகள்
வாங்குபவர் விழிப்புடன் இருக்கவேண்டும்வெளி இணைப்பு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955வெளி இணைப்பு நேரடிவரிச் சட்டங்கள்வருமான வரிச் சட்டம்அறிமுகம்ஓர் அரசாங்கம் , மக்களிடமிருந்து பல்வேறு வரிகளின் வாயிலாக திரட்டப்படும் வருமானத்தைக்கொண்டுதான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது.இதுமட்டுமின்றி மக்களுக்குத் தேவையான பொது வசதிகளை உருவாக்குவதும் இந்த வருமானத்தில் இருந்துதான்.அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கம் பெற்றுள்ள அதிகாரத்தை ஆதாரமாகக்கொண்டு அரசாங்கம் மக்கள் மீது பலவிதமான வரிகளை விதிக்கிறது.இத்தகைய வரிகளுள் வருமானவரி மிகவும் முக்கியமானதாகும்.இது ஒரு நேரடி வரியாகும்.அதாவது , வரியைச் செலுத்துபவரே அதனால் உண்டாகும் தாக்கத்தையும் அனுபவிக்கிறார்.விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளில், வரியைச் செலுத்துபவர் , அதன் சுமையை வேறு ஒருவரிடம் தள்ளிவிட்டு விடுகிறார்.எடுத்துக்காட்டாக பொருளை விற்கும் வியாபாரி , விற்பனை வரியை தாமே செலுத்தினாலும், அதன் சுமையை விலையில் கூட்டி வாங்குபவர் அல்லது நுகர்பவரிடம் வசூல் செய்துவிடுகிறார்.எனவே இதன் தாக்கம் நுகர்பவர் மீதே விழுகிறது. வருமான வரியைக் கணக்கிடல்ஒரு தனி நபர், பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம்.ஒருவருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலப்புகளில் கணக்கிடுகிறார்கள்.
மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்விலக்கு பெறும் வருமானங்கள்சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மறைமுக வரிச் சட்டங்கள்அறிமுகம்கலால் வரிச் சட்டம் 1944அறிமுகம்வெளி இணைப்பு சேவை வரிஅறிமுகம்வரி சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட முனைவர் ராஜா செல்லையா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்தியாவில் , முதன்முதலாக, 1994 ஆம் ஆண்டு சூலை முதல் நாள் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தவிர இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களில் வசிப்பவர்கள் , தாங்கள் பெறும் சேவைகளுக்கு ஏற்ப சேவை வரி செலுத்தவேண்டும்.முதலில் மூன்று சேவைகள் மட்டுமே வரி விதிப்புக்கு உள்ளாயின.வரி விகிதம் 5 விழுக்காடாக இருந்தது.பிறகு படிப்படியாக இந்த சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.2012 ஜூலை முதல் எதிமறைப்பட்டியலில் கூறப்பட்டுள்ள சில சேவைகள் தவிர இதர சேவைகள் அனைத்தும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. அரசியல் அதிகாரம்சட்டத்தின் அங்கீகாரம் இன்றி எந்த அரசும் மக்களிடம் இருந்து எந்த வகையான வரியும் வசூல் செய்யக்கூடாது என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 265 கூறுகிறது. அட்டவனை 7 இன் கீழ் மூன்று பட்டியல்கள் உள்ளன. பட்டியல் 1 : நடுவண் அரசின் அதிகாரங்கள் பட்டியல் 2 :மாநில அரசின் அதிகாரங்கள் பட்டியல் 3 :பொதுப் பட்டியல் வரையறைகள்எதிர்மறைப் பட்டியல்:=எந்த எந்த சேவைகளுக்கு வரி கட்ட வேண்டும் என்று தொடக்கத்தில் கூறப்பட்டாலும் தற்போது எதிர்மறைப் பட்டியல் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதின் மூலம் எந்த எந்த சேவைகளுக்கு வரிகட்டவேண்டியதில்லை என்பதை அரசு தெளிவாகக் கூறியுள்ளது.இந்தப் பட்டியலில் இடம் பெற்றவை தவிர மற்ற சேவைகளுக்கு வரிகட்டப்படவேண்டும்.
(1) அரசாங்கம் மற்றும் லோக்கல் அதாரிட்டி ஆகியவை வழங்கும் (கீழ் காண்பவைதவிர ) சேவைகள் சேவை வரியை சேவையை வழங்குபவர்தான் (Service Provider) கட்ட வேண்டும் என்பது அறிமுக காலத்தில் கூறப்பட்டது.ஆனால் தற்போது உள்ள நடைமுறையின்படி சேவை வரியை சேவையை வழங்குபவர் அல்லது சேவையைப் பெறுபவர்(Service Recipient) அல்லது இருவரும் இணைந்தும் கட்டலாம். இதற்கு "Reverse Charge Mechanism" என்று பெயர். விற்பனை வரிச் சட்டம்அறிமுகம்விற்பனை வரியைப் பொருத்தவரை, ஒரு மாநிலத்துக்குள் நடைபெறும் விற்பனைகளை அந்த அந்த மாநில அரசின் விற்பனைவரிசட்டங்களும் மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனை போன்ற விஷயங்களை மத்திய விற்பனை வரிச் சட்டமும் கட்டுப்படுத்துகின்றன. வெளி இணைப்பு
சுங்க வரிச் சட்டம் 1962அறிமுகம்வெளி இணைப்பு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986அறிமுகம்வெளி இணைப்பு
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881அறிமுகம்மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881(Negotiablae Instruments Act 1881 ) என்ற சொற்றொடரில் "Negotiable " என்ற சொல்லுக்கு மாற்றத்தக்கது (அதாவது ஒருவர் பெயரில் இருந்து இன்னொருவருக்கு மாற்றத்தக்கது) என்றும் "Instrument " என்பதற்கு "ஒருவருக்கு ஆதரவாக ஓர் உரிமையை உருவாக்கும் வகையில் எழுதப்பட்ட ஓர் ஆவணம்" என்றும் பொருள் கூறலாம். காசோலை (Cheque) , உண்டியல் (Bill) , கடன் பத்திரம்(Promissory Note) போன்றவை மாற்றுமுறை ஆவணங்கள் ஆகும்.
அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999அறிமுகம்வெளி இணைப்பு அன்னிய நன்கொடைகள் (நெறிப்படுத்தும்) சட்டம் 2010அறிமுகம்வெளி இணைப்பு
போட்டிகள் சட்டம் 2002அறிமுகம்வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia