வன் மின்பகுளிவன் மின்பகுளி (strong electrolyte) என்பது வேதிக் கரைசலில் முற்றிலுமாக அல்லது கிட்டத்தட்ட முற்றிலுமாக அயனியாக்கம் அல்லது பிரிகை அடையும் ஒரு வேதிப் பொருளைக் குறிக்கும் ஆகும். இந்த அயனிகள் கரைசலில் நன்றாக மின்சாரத்தைக் கடத்துகின்றன. முதன் முதலில், நீர்மக் கரைசல் ஒன்றில் எந்தவேதிப்பொருள் நன்றாக மின்சாரத்தைக் கடத்துகிறதோ அப்பொருளே "வன் மின்பகுளி" என்று வரையறை செய்யப்பட்டது. ஓர் ’அயனி’ என்பதற்கான பொருள் விரிவடைந்து அதன் பண்புகள் பெரும் பிரிதலுக்கு உட்பட்டதால் தற்போதைய வரையறை நடைமுறையில் பதிலீடு செய்யப்பட்டது. ஒரு வன் மின்பகுளியின் அடர் கரைசல், அதே வெப்பநிலையில் தூய்மையான நீரைக்காட்டிலும் குறைவான ஆவியழுத்தம் பெற்றுள்ளது. வலிமையான அமிலங்கள், வலிமையான காரங்கள் மற்றும் கரையக்கூடிய அயனி உப்புகள் முதலியன வன் மின்பகுளிகளாகும். வலிமை குறைந்த அமிலங்கள் மற்றும் காரங்கள் குறை மின்பகுளிகளாகும். வினைகளை எழுதுதல்வன் மின்பகுளியைப் பொறுத்தவரை வினையில் எழுதப்படும் ஒர் தனி அம்புக்குறி அயனியாக்க வினையானது முற்றிலுமாக ஒரே திசையில் நிகழ்கிறது என்பதைக் காட்டுகிறது. மாறாக, குறை மின்பகுளிகளில் பிரிகையானது ஒரே திசையில் நிகழாமல் கனிசமான அளவுக்கு அயனியாக்கமும் மறு பிணைப்பும் நிகழ்வதைக் குறிக்கும்[1].
உருகிய நிலையில் அல்லது நீர்த்த கரைசலில் மட்டும் வன் மின்பகுளிகள் மின்சாரத்தைக் கடத்தும். மேலும் அவை முற்றிலுமாக அயனியாக மாறுகின்றன. கால்வானிக் மின்கலத்தில் மின்பகுளி வலிமையாக இருந்தால் உற்பத்தியாகும் மின்சாரமும் அதிகமாக இருக்கும். உதாரணங்கள்வல்லமிலங்கள்
வன் காரங்கள்
உப்புகள்
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia