உச்சைச்சிரவம் எனும் ஏழுதலைகளையும், பறக்கும் திறனும் கொண்ட வெள்ளைக் குதிரையானது பாற்கடல் கடையும் பொழுது தோன்றியதாகும்.
அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்ற இவர்கள் ஐவரும் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த இல்லறவழிகாட்டிகளாக முன்னிருத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பஞ்சகன்னிகைகள் என்று பெயர்
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமான தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம் எனப்படுகிறது.
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் தேவலோக மரங்கள் என்று அறியப்படுகின்றன. இவை பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவையாகும்.
கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி பிரநாளம் எனப்படுகிறது.