கட்வங்கம் என்பது சிவபெருமானுடைய ஆயுதங்களில் ஒன்றாகும். இந்த ஆயுதம் எலும்பினால் செய்யப்பட்ட தண்டுப்பகுதியையும், முன்பக்கத்தில் மண்டையோட்டினையும் பெற்று காணப்படுகிறது.
ஆதிலட்சுமிக்கும், குபேனனுக்கும் செல்வங்களை வழங்கிய சிவபெருமானின் வடிவம் சுவர்ண ஆகர்ஷன பைரவர் என்று வழங்கப்படுகிறது. சுவர்ண ஆகர்சன பைரவர் என்றால் பொன்னை இழுத்துத் தரும் பைரவர் என்று பொருளாகும்.
மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார் என்ற இருவர் மட்டுமே பாண்டிய நாடு முழுவதும் சமண இருள் சூழந்திருந்த போதும், சைவ மதத்தில் இருந்தார்கள்.
பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது.
ஐந்து முகம் கொண்ட சிவபெருமானின் ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது. குருமூர்த்தியின் கோலத்தில் நான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.
சிவபெருமானின் அருவ வடிவம் லிங்க மூர்த்தியாகும். இம்மூர்த்தியின் வடிவம் சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திர வடிவங்களை தனக்குள் உள்ளடக்கியதாகும்.
இசைக்கலையில் வல்லவரான இராவணன் கைநரம்புகளிலேயே யாழ் அமைத்து இசைத்து சிவபெருமானை மயங்க செய்தவர்.
சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேசுவர விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம் என ஒன்பது விரதங்கள் சிவனுக்கு உகந்ததாக நம்பப்படுகிறது.
திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.
இந்து மதத்தின் பிற தெய்வங்களில் பல்வேறு லோகங்களில் வசிக்கும் பொழுதும் சிவபெருமான் கையிலையில் வசிப்பதால் பூலோக கடவுள் எனவும் கைலாசநாதன், கையிலாசன் என்று அழைக்கப்படுகிறார்.