வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தமிழின் 18 மெய்யெழுத்துகளை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18-இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
வல்லெழுத்துகள் மிகும் இடங்கள்அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
எ என்னும் வினா எழுத்தின் பின்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுக்கள் பின்னும் ,வினாச் சுட்டுக்களின் பின்னும் வரும்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
இரண்டாம் வேற்றுமை அசை உருபுக்குப்பின் (ஐ)
நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)
என, ஆக என்ற சொற்களுக்குப்பின்
வல்லெழுத்து மிகா இடங்கள்அது, இது, எது என்னும் சொற்களின் பின் [1]
ஏது, யாது என்னும் சொற்களின் பின்
அவை, எவை, இவை, யாவை
அத்தனை, எத்தனை, இத்தனை[2]அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின் (இஃது எழுவாய்த்தொடர் ஆகையால் மிகாமலும், குற்றியலுகரச் சுட்டு ஆதலின் மிக்கும் வரும்)[6]
சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்
சில வினையெச்ச விகுதிக்குப்பின்
(விரியும்) மேலும் காண்கஉசாத்துணைஇந்த இலக்கண குறிப்பில் வரும் உள்ளடக்கம் புலவர் அ.சா. குருசாமி அவர்களால் எழுதப்பட்ட தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! என்ற நூலையும் மயிலை சின்னத்துரை சண்முகம் அவர்கள் எழுதிய, தமிழில் பிழையின்றி எழுதுவோம் (சென்னை:1986) என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டவை. இங்குக் குறிப்பிடப்படும் உதாரணங்களும் அந்நூல்களிலிருந்து பெறப்பட்டவையே. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் இந்தத் தலைப்பின் கீழ் மிகத் தெளிவான, விளக்கமான, பயனுள்ள குறிப்புகள் இருக்கின்றன. வெளியிணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia