வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம்
வாண்டரர்சு துடுப்பாட்ட அரங்கம் (Wanderers Stadium) அரங்கம் ஜோகன்னஸ்பேர்க் நகரில் தென்னாப்ரிக்காவில் அமைந்துள்ளது. இங்கு தேர்வுத் துடுப்பாட்டம், ஒரு நாள் மற்றும் முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய போட்டிகள் இங்கு விளையாடப்படுகின்றது. வரலாறு1956 ஆம் ஆண்டில் இந்த அரங்கத்தில் முதல் போட்டி தென்னாப்ரிக்க இங்கிலாந்து அணிகளுக்கு நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் தென்னாப்பிரிக்கா பன்னாட்டு துடுப்பாட்டம் விளையாட அனுமதித்ததை தொடர்ந்து புதிய வாண்டெரர்ச் துடுப்பாட்ட அரங்கமாக மாற்றப்பட்டது இங்கு 32,000 இருக்கைகள் உள்ளன. உள்நாட்டு போட்டிகள்2009 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடைபெற்றது. இதில் டெக்கான் சார்ஜர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீழ்த்தி கோப்பை வென்றது. சிறப்புகள்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துடுப்பாட்ட போட்டிகளை இந்த மைதானத்தில் நடந்தது. 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. இந்த அரங்கம் தென்னாப்பிரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையில் விளையாடிய மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஒன்றாகும், இதில் உலக சாதனை படைத்த 434 இலக்குகளை கடந்து தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 18 சனவரி 2015 அன்று, வாண்டரர்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவின் ஏ பி டி வில்லியர்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார், இதற்கு முன்னர் இலங்கை வீரர் சனத் ஜயசூரியாவின் வசம் இருந்தது 19 ஆண்டு சாதனையை முறியடித்தார். அதே போட்டியில், கோரி ஆண்டர்சனின் மிக வேகமாக ஒருநாள் சதம் சாதனையையும் முறியடித்தார் 31 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அவர் 149 ரன்கள் எடுத்தார். [2] 21 பிப்ரவரி 2016 அன்று இங்கிலாந்துக்கு எதிரான இருபது20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஏபி டிவில்லியர்ஸ் மிக வேகமாக அரை சதம் (21 பந்துகள்) அடித்தார். [3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia