விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு52பாராட்டுகள்
தமிழர் காலக்கணிப்பீடும், பழங்கால இலங்கை காலக்கணிப்பீடும்தமிழர் காலக்கணிப்பு முறையின் படி சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 14 அல்லது 15ம் திகதிகளில்) ஆண்டுப்பிறப்பு தொடங்குகிறது. அதையே தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தோம். (அன்மையில் தைப்புத்தாண்டு உருவாக்கம் வேறு) தமிழர் காலக்கணிப்பு முறைதான் இலங்கையிலும் இருந்தது என்றும், " சிங்களப் புத்தாண்டு என்று ஒன்று இல்லை. சிங்களவர் கொண்டாடுவது தமிழர் புத்தாண்டையே ஆகும். அதனாலேயே அவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர்." நான் பேச்சு பக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். மகாவம்சத்தின் தொடக்கத்தில் பௌத்தர் நிர்வாணம் அடைந்த நாளை விசாக மாதம் எனக்குறிக்கப்பட்டுள்ளது. இந்த "விசாக" மாதம் எந்த ஆண்டு கணிப்புக்குறியவை எனப் பார்த்ததில் வில்லெம் கெய்கர் 1912ம் ஆண்டு வெளியிட்ட மகாவம்சத்தில் [1] (அத்தியாயம் 1, பக்கம் 2) ஒரு பட்டியல் உள்ளது. இந்த மாதப் பட்டியலை சற்று ஆய்ந்து பார்த்தால், அது தமிழ் மாதப் பட்டியலின் மாற்று வடிவம் என்பதை ஒப்பு நோக்கலாம்.
இங்கே இடப்பட்டிருக்கும் பெயர்கள், தமிழ் பெயர்களின் ஒலிப்பில் இருந்து சற்று மாறுபட்டதாக மட்டுமே உள்ளன. அதுவும் தமிழில் இருந்து பௌத்த பிக்குகளால் பாளி மொழியில் எழுதப்பட்டு, பின்னர் பாளியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றும் போது இவ்வாறான மாற்றங்கள்/திரிபுகள் ஏற்படுவது இயல்பாகவே இருக்கும். இன்னும் சிலர் சித்திரை ஆண்டுப் பிறப்பு கொண்டாட்டம் 10ம் நூற்றாண்டு அளவிலேயே தோன்றியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் தமிழ் மாதப் பெயர் வழங்கல் முறை கி. மு 3ம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கை பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்டுள்ளவற்றின் ஊடாக உள்ளது என்பதன் அடிப்படையில், மிகப் பழங்காலம் தொட்டே தமிழரின் காலக்கணிப்பு முறை இருந்துள்ளது என்பதை கணிக்க முடிகிறது. அதேவேளை பௌத்தம் இலங்கைக்கு அறிமுகமாகும் முன்னரே இலங்கை அனுராதப்புரத்தில் தமிழர் மாத கணிப்பு முறையே இருந்துள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. (அங்கு வாழ்ந்தவர்களும் ஆட்சி அமைத்தவர்களும் தமிழர்களாகவே இருக்க முடியும் என்பதற்கு இதனை ஒரு சான்றகவும் கொள்ளலாம்.) தற்போதும் இலங்கை சிங்களவர்கள் புத்தாண்டாக, தமிழர் புத்தாண்டையே கொண்டாடி வருகின்றனர் என்பது இன்னொரு சான்று. --HK Arun 09:32, 8 ஏப்ரல் 2011 (UTC) When I was a boy everybody spoke it..it might die with me.--Natkeeran 16:45, 14 ஏப்ரல் 2011 (UTC) Culture trumps biology in language development, study argues--Natkeeran 16:46, 14 ஏப்ரல் 2011 (UTC) நோய் அறிகுறிகள்பொதுவாக நோய் அறிகுறிகள் என்று தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. காய்ச்சல், தலைவலி, இதயமுணுமுணுப்பு, போன்றவை இவற்றுள் அடங்கினாலும் ஆங்கிலத்தில் இதை Symptoms & Signs என்பர். Symptoms என்றால் நோயாளியால் உணரப்படும் நோயின் குறிகள், signs என்றால் மருத்துவரால் அறியப்படும் குறிகள். தமிழில் உள்ள அகரமுதலிகளில் Symptoms என்றாலும் சரி, signs என்றாலும் சரி நோய் அறிகுறிகள் என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது, எனவே எனது பரிந்துரையின்படி
இதுபற்றி நான் பல நாட்கள் யோசித்திருக்கின்றேன். ஆனால் எனக்கு இவற்றை சரியாக வேறுபடுத்திப் பெயரிட முடியவில்லை. உங்கள் பரிந்துரைகள் மிகவும் ஏற்புடையவையாகவே தோன்றுகின்றன. மிகவும் நன்றி செந்தி. --கலை 13:26, 16 ஏப்ரல் 2011 (UTC)
அறிகுறி (ஒன்று இதுவா என தெரிந்துக்கொள்வதற்கான ஆரம்ப நிலை) அடையாளம் (ஒன்று இதுதான் என தெரியும் முழுமையான நிலை) அந்த வகையில் செந்தியின் சொற்கள் பொருத்தமானவை. --HK Arun 14:30, 16 ஏப்ரல் 2011 (UTC)
சொற்களை சரிபார்க்க உதவி தேவை!!!கீழ் காணும் சொற்கள் - சரியா எனக்கூறவும் - நந்தகுமார் Immunology - எதிர்ப்பியல் Immune system - எதிர்ப்பு அமைப்பு Antigen - எதிர்ப்பி Antibody - எதிர்ப்பான் Immunity - நோயெதிர்ப்பு Vaccinology - தடுப்பாற்றலியல் Autoimmune diseases - தன்னெதிர்ப்பு நோய்கள் Immune complex - எதிர்ப்பு இணைவு
இலங்கையில் Immunology - நிர்ப்பீடனவியல், Immune system - நிர்ப்பீடனத்தொகுதி முதலான சொற்களைப் பயன்படுத்துகிறோம். இவை தூய தமிழ்ச் சொற்களா என்பது தெரியவில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 10:56, 17 ஏப்ரல் 2011 (UTC)
--செல்வா 13:03, 17 ஏப்ரல் 2011 (UTC) உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!!! நோயெதிர்ப்பியல் (infection and immunity) மற்றும் தன்னெதிர்ப்பு நோய்கள் (Autoimmune diseases) ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதால், எதிர்ப்பியல் (Immunology) என்பது சரி என்பது என் எண்ணம். மேலும் உரையாடுக. இச்சொற்கள் சரியாயின் இவை குறித்து எழுத விழைகிறேன் - நந்தகுமார். சூரிய பிரகாசுக்கு, தமிழ் விக்சனரியில் கீழ் கண்டவாறு பொருள் உள்ளது. சில சொற்கள் கடினமாக (அல்லது) பொருள் மயக்கமாக உள்ளதால் மேற்கூறிய சொற்களை எழுதியிருந்தேன்.
- நந்தகுமார்
Antigen என்பது antibody generator [Anti(body) + Gen] ; Antigen ஒன்று உடலில் புகுவதால் antibody உருவாக்கப்படுகின்றது. எதிர்ப்பி, எதிர்ப்பான் என்பது சரியே எனது பரிந்துரையின்படி சற்று இவற்றின் தொழிலை எண்ணிப்பார்த்தால்,
செல்வாவின் விளக்கத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 22:44, 17 ஏப்ரல் 2011 (UTC) ஆனால், செந்தி அவர்களே, antibody can be protective as well as pathogenic. எனவே, பொதுபெயரான "எதிர்ப்பான்" "எதிர்ப்பி" சரியாக இருக்கும் என எண்ணினேன் - நந்தகுமார்.
இந்தக் கலந்துரையாடலை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். --கலை 22:54, 19 ஏப்ரல் 2011 (UTC) Bab-el-Mandeb (பாப்-எல்-மான்டெப்)நீரிணை:Bab-el-Mandeb (பாப்-எல்-மான்டெப்)நீரிணை: இது செங்கடலை,ஏடன் வளைகுடாவோடும்,அரபியன் கடலோடும் இனைப்பதோடு ஜிபொஊடி(Djibouti),எரிட்ரி,ஏமன் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டது.இது கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அரபியன் பெனின்சுலாவை பிரிக்கிறது.பாப்-எல்-மான்டெப் என்பதற்கு அராபி மொழியில் "கண்ணீர் கதவு"(Gate of Tears)பொருளாகும்.ஏனென்றால் இந்த குறுகலான நீரிணை வழியாக கப்பலை செலுத்துவது என்பது கப்பல் மாலுமிக்கு பெரும் கடினமான செயலாகும். Marcin Jakubowski: Open-sourced blueprints for civilizationMarcin Jakubowski: Open-sourced blueprints for civilization --Natkeeran 03:07, 18 ஏப்ரல் 2011 (UTC) விக்கிப்பீடியா வளாகத் தூதுவர்ஆங்கில விக்கியில் விக்கி வளாகத் தூதுவர் பணிக்கான விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றேன். தற்போதைக்கு பூனாவை மையப்படுத்தி நிகழ்த்தப்படும் இது இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, கால்நடை மருத்துவம், மருத்துவக் கல்லூரி (ஆங்கிலம், சித்தா, ஆயுர்வேதம்) எனப் பல கல்லூரிகளிலும் உள்ள பயனர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வர் என நம்புகிறேன். புதுச்சேரியில் ஏதாவது மருத்துவக் கல்லூரியில் பணியில் சேருங்கால் நானும் வளாகத் தூதுவராகச் செயல்பட ஆர்வமாய் உள்ளேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 05:24, 18 ஏப்ரல் 2011 (UTC) இந்தியாவில் உள்ள பயனர்கள் தாம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இணைந்திருப்பின் இப்பணியில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இலங்கையிலும் இத்தகைய முன்னெடுப்புக்களை செயற்படுத்துவது பயனுடையது.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:01, 18 ஏப்ரல் 2011 (UTC) தினத்தந்தியில் விக்கிப்பீடியா பற்றி!தமிழகத்தில் வெளிவரும் நாளிதழான தினத்தந்தியில் இணைப்பாக திங்கள் கிழமை தோறும் வரும் மாணவர் ஸ்பெஷல் என்ற இணைப்பிதழில் விக்கிப்பீடியா குறித்து ஆங்காங்கைச் சேர்ந்தவர் ஒருவர் எழுதத் தொடங்கியுள்ளார். வரும் வாரங்களில் விக்கிப்பீடியா குறித்து பல செய்திகள் எழுத உள்ளதாக அறிமுகக் கட்டுரையில் கூறியுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவைக் குறித்தும் ஒரு சிறு அறிமுகம் கொடுத்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் படிக்கவும், விக்கிப்பீடியாவைப் பற்றி அறிய பலருக்கும் இது உதவலாம். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 10:15, 18 ஏப்ரல் 2011 (UTC) விக்கிப்பீடியா விடுப்பு!பருவத் தேர்வுகள் துவங்கிவிட்ட காரணத்தினால் இனியாவது படிக்கத் துவங்க வேண்டும். எனவே இனி மே மாத இறுதியில் தான் விக்கிப்பீடியா பக்கம் வரமுடியும். உதவி தேவைப்படுவோர் 0091 8148446213 என்ற எண்ணில் என்னைத் தொடர்பு கொள்ளவும்! உதவக் காத்திருக்கிறேன்!! இப்போதைக்கு என் வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். மே மாத இறுதி வரை முதற்பக்கப் படங்கள் அணியமாக உள்ளன. எனவே, முதற்பக்க இற்றைப்படுத்துனர்கள் அப்பகுதி பற்றிக் கவலைப் பட வேண்டாம். போய் வருகிறேன் நண்பர்களே! உங்களையெல்லாம் ஒரு மாதகாலம் பிரிகிறேன் என்ற சிறிய மனவருத்தத்தோடு செல்கிறேன்!!
கடுமையாகப் பயிற்சி செய்தால் எளிமையாக தாக்கிவிடலாம்.வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 08:34, 19 ஏப்ரல் 2011 (UTC) சூர்யா, உயர்மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழத்துகள்!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 11:50, 19 ஏப்ரல் 2011 (UTC)
தேர்வுகளைத் திறமையாகச் செய்ய வாழ்த்துக்கள்.--கலை 19:46, 19 ஏப்ரல் 2011 (UTC)
முதன்மையான (சற்றே கடினமானவுமான) தேர்வுகள் முடிந்துவிட்டன. இனியும் நான் விடுப்பில் இல்லை!!! --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:10, 9 மே 2011 (UTC) இலக்குப் பதிவுஒரே நாளில் குறைந்தது 200 கட்டுரைகளை இலக்கு வைத்துப் பதியும் வெற்றிப் பதிவு முயற்சி ஒன்றை புன்னியாமின் நாளை செயற்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். நாளை 20ம் திகதி இலங்கை சீர்நேரப்படி காலை 6.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை சுமார் 18 மணித்தியாலங்கள் முழு நேரமாகப் பணியாற்றி இத்தகைய செயலை புரியத் திட்டம் வைத்துள்ளார். அவரது முயற்சி தடையின்றி நடந்தேற வாழ்த்துக்கள். பயனர்கள் தமது உரை திருத்தங்களையும் உற்சாகத்தையும் வழங்குமாறு வேண்டுகின்றேன். நன்றி--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 09:05, 19 ஏப்ரல் 2011 (UTC)
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் - நந்தகுமார் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாது புன்னியாமீன் செய்யும் பணிகள் மலைக்க வைக்கின்றன! அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் விரைவில் முழுநலம் பெற்று முன்னை விட புத்துணர்வுடன் செயல்பட இறைவனை வேண்டுகிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 11:53, 19 ஏப்ரல் 2011 (UTC) புன்னியாமீன், உங்கள் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். --மயூரநாதன் 18:16, 19 ஏப்ரல் 2011 (UTC)
தங்களது முயற்சிக்கும் அது இனிதே நிறைவு பெறவும் வாழ்த்துக்கள். தங்களை வருத்திச் செய்யாதீர்கள், உங்களால் இயலுமானவரை செய்யுங்கள்.--சி. செந்தி 18:37, 19 ஏப்ரல் 2011 (UTC)
மனமார்ந்த வாழ்த்துக்கள் புன்னியாமீன் - பயனர்:கி. கார்த்திகேயன்
200 என்ற இலக்குப் பதிவு![]() புகழனைத்தும் படைத்தவனுக்கே. இலங்கை நேரப்படி அதிகாலை 5.40க்கு ஆரம்பித்த எமது பணி மாலை 5.50 மணியாகும் போது 200 என்ற இலக்குப் பதிவுவை அடைந்து விட்டது. ஒத்துழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி…. நன்றி…. நன்றி. முயற்சி தொடரும்….. --P.M.Puniyameen 12:28, 20 ஏப்ரல் 2011 (UTC)
புன்னியாமீனுக்கும் அவருக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:58, 20 ஏப்ரல் 2011 (UTC)
மிக்க நன்றி மயூரநாதன் அவர்களே--P.M.Puniyameen 18:50, 20 ஏப்ரல் 2011 (UTC) ஒரு இலக்கை நிர்ணயித்து, அதில் வெற்றியடைந்தமைக்கும், உங்கள் சாதனைக்கும் எனது வாழ்த்துக்களும்.--கலை 19:30, 20 ஏப்ரல் 2011 (UTC)
இலக்குப் பதிவின் அடைவு 300புகழனைத்தும் படைத்தவனுக்கே. இலங்கை நேரப்படி அதிகாலை 5.40க்கு ஆரம்பித்த எமது பணி நள்ளிரவு 1.30 மணியாகும் போது இலக்குப் பதிவின் அடைவு 300 ஆகி விட்டது. எமது இலக்கைவிட 100 அதிகம். ஒத்துழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். --P.M.Puniyameen 20:07, 20 ஏப்ரல் 2011 (UTC)
நன்றிகள்ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல், நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 300 கட்டுரைகளை தரவேற்றம் செய்த நேரத்தில் நான் எதிர்பாராத விதமாக உலகலாவிய ரீதியில் பல பயனர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மனதைரியத்தைத் தந்து ஊக்கப்படுத்தினர். அதே போல ஆலமரத்தடி மற்றும் எனது பேச்சுப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைவருக்கும் இவ்விடத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். "வாழ்த்துக்களை எதிர்பார்த்து என் இலக்குப் பயணத்தை ஆரம்பிக்கவில்லை'. இருப்பினும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் வேலை செய்ததினால் உடல், மன சோர்வு ஏற்பட்ட நிலையில் இந்த வாழ்த்துக்கள் ஒரு புதுத் தெம்பினைத் தந்தன. 200 பதிவுகளுடன் நிறுத்திக் கொள்ள இருந்த நேரத்தில் பயனர் சிவகுமார் தொலைப்பேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு இயலுமான வரை தொடரும் படி தைரியத்தைத் தந்தார். அவரின் அன்புக் கட்டளை இல்லாதிருப்பின் 200உடன் நிறுத்தியிருப்பேன். அவர் அலுவலக விடயமாக ஒரு கூட்டத்தில் இருந்த போதும் கூட அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எண்ணிக்கையை கேட்டுக்கொண்டேயிருந்தார். எனது இந்த இலக்குப் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதொன்றல்ல. 19ம் திகதி காலை விக்கிப்பீடியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது அலுவலக கணனி இயக்குனர்கள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டால் என்ன என என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்பே என் சிந்தனையில் இத்திட்டம் உதித்தது. பின்பு சோடா கெனக்ஸ் சிவகுமார் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தேன். சிவகுமார் அதை விக்கியிலும் அறிவித்து விட்டார். அதன் பின்பே அனைத்துத் திட்டங்களையும் தீட்டி 20ம் திகதி இலக்குப் பயணத்திற்கு ஆயத்தமானேன். விக்கி செய்தி வந்தபின்பே கட்டுரைகளை டைப் பண்ண ஆரம்பித்தோம். ஏனவே 300கட்டுரைகளும் 19ம் திகதி மாலையிலும் 20ம் திகதி காலை முதல் மாலை வரையிலும் டைப் பண்ணப்பட்டவையே. இதற்காக 3 கனணிகளை பயன்படுத்தினோம். எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். இவ்வாறே எமது கூட்டு முயற்சி நடைபெற்றது. அனைத்தும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே தரவேற்றம் செய்யப்பட்டன. ஒத்துழைத்த ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விசேடமாக கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படும் போது உடனுக்குடன் திருத்தங்கள் செய்த சோடாவுக்கும் கெனக்சுக்கும் எனது விசேட நன்றிகள்.--P.M.Puniyameen 12:23, 21 ஏப்ரல் 2011 (UTC) சிறப்புப் பாராட்டுகள்மலைப்பூட்டும் படையெடுப்பு!! :) முன்னர் பயனர் நிரோ சக்திவேல் அவர்கள் படையெடுப்புபோல் புயல் விரைவில் திரைபப்படங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார் (200-500 என ஓரிரு நாட்களில்!!). அதுபோல ஆனால் வேறு துறைகளில் புன்னியாமீன் அவர்கள் நிறைவேற்றியிருக்கும் அரிய செயலை உளமாரப் பாராட்டுகிறேன். அவருக்கும் அவருடன் ஒத்துழைந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!! --செல்வா 01:09, 24 ஏப்ரல் 2011 (UTC)
கட்டுரைக்கு தேவையான படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது?நான் ஒரு புதிய பயனர்,பாப்-எல்-மான்டெப் பற்றிய எனது கட்டுரையை எழுதுகிறேன்.அதற்கான படத்தை எப்படி பதிவேற்றம் செய்வது? help needed!--−முன்நிற்கும் கருத்து N.e.sasikumar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சொற்களை சரிபார்த்தல்இங்கு ஆலமரத்தடியில் சொற்களை சரிபார்க்க உதவி தேவை] என்ற தலைப்பில் இருந்த விடயங்களைக் கவனிக்கத் தவறி விட்டேன். ஆலமரத்தடியில் எழுதப்படும் விடயங்கள் 'என் கவனிப்புப் பட்டியலில்' இடம்பெற்றாலும், தலைப்புக்கள் முழுமையாக பார்க்காமல், இறுதியாக வந்த தலைப்பைப் பார்த்துவிட்டு சில சமயம் விட்டு விடுகின்றேன். இவ்வாறு சொற்கள் தொடர்பான கலந்துரையாடலுக்கு, குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ, அல்லது கட்டுரை இல்லாதவிடத்து, அதற்காக ஒரு தனியான பக்கத்திலோ எழுதினால் நல்லது எனத் தோன்றுகின்றது. இப்படியான சொற்கள் பற்றிய கலந்துரையாடலுக்கு, அதற்காக ஒருதனியான பக்கத்தை உருவாக்குவோமா? விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தைப் பயன்படுத்தலாம். --Natkeeran 22:21, 19 ஏப்ரல் 2011 (UTC)
நாட்டுப் பண்கள்நாட்டுப்பண்கள் தொடர்பான கட்டுரைகளில் சில நாட்டின் பெயர் சுட்டி தலைப்பிடப்பட்டுள்ளன. எ.கா:சீன நாட்டுப்பண். சில நாட்டுப்பண்களின் தொடக்கவரி கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.எ.கா:ஜன கண மன இவற்றை ஒரே அமைப்பில் சீர்படுத்துவது பற்றிய பயனர் கருத்துக்கள்??நாட்டின் பெயர் சுட்டி தலைப்பிடுவது நல்லதேன எண்ணுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:01, 21 ஏப்ரல் 2011 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia