விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு84சிறப்புக் கட்டுரை - நட்சத்திரக் குறியீடுஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரைகள் நட்சித்திரக் குறியீடு பெற்றுள்ளன.. (இங்கு சொடுக்கிப் பார்க்கவும்) அதே போல் நமது சிறப்புக் கட்டுரைகளையும் குறியிட இயலுமா? :) --sethupathy (பேச்சு) 14:28, 28 நவம்பர் 2012 (UTC) தமிழிலும் சிறப்புக் கட்டுரைகள் உள்ளன. (ஏறத்தாழ 50 என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் 1000 கட்டுரைகள்.). கட்டுரைகளை குறியிட முடியாது. சிறப்புக் கட்டுரையாக்கக் கோரலாம். தற்போது தமிழில் சிறப்புக் கட்டுரைகள் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. சிறப்புக் கட்டுரை அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். - தமிழ்க்குரிசில் சரி :) --sethupathy (பேச்சு) 15:04, 28 நவம்பர் 2012 (UTC) [1] என்பதனுள் தற்போதய தமிழ் விக்கிப்பீடியா சிறப்புக்கட்டுரைகள் அடங்கியுள்ளன, அக்கட்டுரைகளின் வலது மூலையில் நட்சத்திரக்குறி இருக்கும், ஒரு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க விரும்பினால் முதலில் சிறப்புக்கட்டுரையாக்க பரிந்துரைக்க வேண்டும், மேலதிக தகவலிற்கு இதை வாசித்துப்பாருங்கள் விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:38, 28 நவம்பர் 2012 (UTC) மீண்டும் சிறப்பு கட்டுரைப்பணியை ஆரம்பித்தால் என்ன? 50,000 கட்டுரைகளை நெருங்கும் தமிழ் விக்கியில் 10 சிறப்பு கட்டுரைகள் மட்டும் தான் உள்ளன. 1000த்துக்கு ஒன்றாவது இருந்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 2 திசம்பர் 2012 (UTC)
வேடிக்கை என்னவென்றால் தற்போது சிறப்புக்கட்டுரைகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரைவாசிக் கட்டுரைகளில் ஒரு மேற்கோளேனும் சுட்டப்படவில்லை.--சங்கீர்த்தன் (பேச்சு) 12:27, 2 திசம்பர் 2012 (UTC) Navigation menuவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:15, 7 திசம்பர் 2012 (UTC) கட்டுரைகளின் தரம்தமிழ் விக்கிக் கட்டுரைகள் தரமுயருவதற்கு உக்திகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா? Particularly, owing to the collaborative editing system followed, readability of content will suffer. Is there any way of overcoming problems arising as a result of collaborative editing in use. How can we bridge the gap between stylistic differences found in the language used by collaborative editors of the Tamil wikipedia. If you have any information on the above kindly send me for reference.−முன்நிற்கும் கருத்து Musanage (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கட்டுரையின் தரத்தைச் செம்மைப் படுத்துவதும் உயர்த்துவதும் கூட்டாக்கப் பங்களிப்பாளர்கள் கையில்தான் இருக்கின்றன. என்பது நல்லது. ஆனால் இந்த செம்மைப் படுத்தவதிலும் உயர்த்துவதிலும் உங்களுடைய கூட்டாக்கப் பங்களிப்பு எத்தகையது என்பதை நான் அறிய விளைகிறேன். பொதுவாக கூட்டாக்க கூட்டுத் தொகுப்பில் நேரும் பெரிய குறைபாடு நடையில் சீரின்மை. நடையில் சீரின்மை என குறிப்பிடும் நீங்கள் உங்களின் நடைக்கு உகந்தவாறு நடை இருப்பதே சீரான நடை என்பது போல் பல இடங்களில் பேசி இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் உங்கள் கொள்கைகளை வலிந்து மற்றவர் மீது திணிப்பது சரியா எனவும் கேட்டறிய விளைகிறேன். ஒருவரோ பலரோ சிலமுறையாவது படித்துப்பார்த்துச் சீர்மை பெருக்க வேண்டும். இதனை நீங்கள் செய்கிறீர்களா? ஒரு நாளைக்கு எத்தனை முறை? நீங்கள் செய்யாமல் மற்றவர்களை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்பது ஒரு அதிகாரி தனது கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளின் மீது அதிகாரம் செய்வது போன்று உள்ளது. எப்படி ஒரு தொகுப்பாசிரியர் (editor) சீரொழுக்கம் கூட்டுவாரோ, அதே போல நாமும் செய்ய வேண்டும். நாமும் செய்ய வேண்டும் என்கிறீர்கள் நீங்கள் செய்துவருகிறீர்களா? நீங்கள் செய்யாமல் மற்றவர்களை செய்ய வேண்டும் என்பது நீங்கள் ஒரு ஆசிரியராகவும் மற்றவர்கள் மாணவர்களாகவும் உங்கள் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்பது போது போன்ற கடுமையான அதிகாரம் தெரிகிறது. இது நல்லதா? இதனை இங்கே உள்ள எல்லோரும் ஏற்கிறார்களா? இங்கே பலர் கருத்துக்கந்தசாமிகளாகவும், கட்டப் பஞ்சாயத்து தலைவர்களாகவும் தகவமைத்துக்கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இது போன்ற அதிகார அலப்பறைகளினால் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று வரும் பலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவது உங்களுக்கு தெரியுமா? எனவும் கேட்டறிய விளைகிறேன். வணக்கம்.--சாட்டை (பேச்சு) 08:16, 8 சனவரி 2013 (UTC) சாட்டை, புதிய பயனர் ஒருவரின் ஐயத்துக்குச் செல்வா பொதுப்படவே விளக்கமளித்துள்ளார். இதே விளக்கம் எல்லா விக்கிப்பீடியாக்களுக்கும் பொருந்தும். செல்வாவின் பங்களிப்புகளை அவரது பயனர் பக்கத்தில் காணலாம். உரையாடலுக்குத் தொடர்பில்லாத தனியாள் தாக்குதலில் ஈடுபடாமல் வளர்முக பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். தங்களிடம் இருந்து இதே போக்கு தொடருமானால் தங்கள் பயனர் கணக்கைத் தடை செய்ய வேண்டி வரும். நன்றி.--இரவி (பேச்சு) 12:30, 8 சனவரி 2013 (UTC) :
இந்தி விக்சனரியில் தமிழ்ச் சொற்கள்இந்தி விக்சனரியில் பல சொற்கள் புரியாதவாறு உள்ளன. இவை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்ட மந்திரங்கள் என்று நினைக்கிறேன். என்ன பிழை என்று யாராவது பாருங்களேன். குப்பையாய் இருந்தால் நீக்கக் கோரலாம். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:55, 11 திசம்பர் 2012 (UTC)
எஸ்.ஆர்.எம் பல்கலையில் 17 அன்று பட்டறைதமிழ் விக்கி மின் குழுமம், மற்றும் [சென்னை விக்கி மின் குழுமம் ஆகியவற்றில் வந்த மின்னஞ்சல்கள் உங்கள் பார்வைக்கு. வருகிற 17ம் தேதி அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலையில் விக்கிமீடியாவைச் சேர்ந்த நூபூர் ராவல் விக்கி பட்டறைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னொரு மின்னஞ்சல்: டிங்கி காய்ச்சல் பற்றிய கட்டுரைக்கு அழைப்பு. நன்றி -- மாகிர் (பேச்சு) 15:07, 13 திசம்பர் 2012 (UTC) விக்கிப்பீடியா குறித்து தமிழ்நாடு அரசு செயலாளர் பேச்சு16-12-2012 அன்று சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப அவர்கள் கணினித் தமிழ் குறித்துப் பேசும்பொழுது, உலக இணையதள பயன்பாட்டில், "விக்கிபீடியா" தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பேசிய செய்தியின் கடைசிப் பகுதி மட்டும் இங்கு பார்வைக்காக... ”கணினி தமிழ் வளர்ச்சிக்கு, அரசு மட்டுமே செயல்பட வேண்டும் என இருக்கக் கூடாது. தமிழ் மொழியில் ஆர்வம் உள்ள எவரும் முன்வரலாம். ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி என, 25 ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் தமிழ் வலைப்பூக்கள், தனியாரால் உருவாக்கப்பட்டுள்ளன. "விக்கிபீடியா" உலக இணையதள பயன்பாட்டில், தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. உலகில் உள்ள 285 மொழிகளில், "விக்கிபீடியா' உள்ளது. இதில், இந்திய மொழிகளான இந்திக்கு 40வது இடமும், தெலுங்குக்கு 60வது இடமும், தமிழுக்கு 61வது இடமும் கிடைத்து உள்ளது.இந்திய மொழிகளுக்குள்,தமிழ் விக்கிபீடியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழில் சிறந்த நூல்களுள் ஒன்றாக, தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கும் பரிசளிக்கப்பட்டு உள்ளது.” என்று பேசினார். (பார்க்க: தினமலர் செய்தி) தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், நான் எழுதிய “தமிழ் விக்கிப்பீடியா” நூலுக்குப் பரிசளிக்கப்பட்டது குறித்தும் பேசிய அரசுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:14, 17 திசம்பர் 2012 (UTC)
மிக்க நன்றி தேனி சுப்பிரமணி. அரசுச் செயலாளர் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியும் தமிழ் விக்சனரியைப் பற்றியும் விரிவாகவும் பெருமையாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார். தேனி சுப்பிரமணி எழுதிய நூலுக்கு அரசு பரிசளித்ததைப் பற்றியும் குறிப்பிட்டார். மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கியதையும் தெளிவாகக் குறிப்பிட்டார் ("இலங்கையில் பிறந்து வளைகுடா நாடான அபுதாபியில் கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இ. மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முதற்பக்கத்தை உருவாக்கினார்."). திசம்பர் 16, 2012 அன்று இலயோலா கல்லூரில் நிகழ்ந்த கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள், இம்மாநாட்டைத் திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை செய்த காட்சி அருகே காட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றேன். --செல்வா (பேச்சு) 10:33, 17 திசம்பர் 2012 (UTC)
50,000 கட்டுரைகள்50,000மாவது கட்டுரையாக பெ. மாதையன் கட்டுரையை எழுதிய தேனி சுப்பிரமணிக்கு வாழ்த்துகள் :) எப்படியும் நான் தான் போட வேண்டும் என்று கட்டுரையை எழுதி வைத்துக் கொண்டு விடிய விடிய காத்திருந்ததில் தூங்கிப் போய் விட்டேன் :)--இரவி (பேச்சு) 05:20, 18 திசம்பர் 2012 (UTC)
1,00,000ஆவது கட்டுரையை எழுத முன்பதிவு செய்த தேனியார் அதை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் உண்ணாவிர்ஃஅதம் தான். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:53, 18 திசம்பர் 2012 (UTC)
ஐம்பதாயிரம் கட்டுரைகள் என்பது மிக்க மகிழ்ச்சியானதுதான் (பிரியாணி போடலாம்). இனி நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்டுவதைப் பற்றி ஆராய்ந்தாக வேண்டும். விக்கியில் எத்தனையோ கட்டுரைகளை மிகச் சிறப்பாக ஆக்க வேண்டுமென்ற எண்ணம் என்னுள்ளும் இருந்து கொண்டே இருந்தாலும், வேலைப் பளு எங்கே விட்டது? இங்கே ஜகார்த்தாவில் எல்லோரும் உறக்கத்திலிருக்கும் வேளையில், தன்னந்தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனினும் இடையிடையே விக்கிப்பீடியாவையும் எட்டிப் பார்க்கிறேன். பாரவதிஸ்ரீ, நீங்கள் வடை போச்சே என்கிறீர்கள். நான் இங்கே வடை எங்கு கிடைக்குமெனத் தேடுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:29, 18 திசம்பர் 2012 (UTC)
மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:12, 19 திசம்பர் 2012 (UTC) வாழ்த்துகள்! நானும் மீண்டும் வந்து விட்டேன்... --மதனாகரன் (பேச்சு) 06:49, 20 திசம்பர் 2012 (UTC) அதிகம் எழுதப்படும் கட்டுரைகள் பகுப்பில் மாதிரி கட்டுரைகளை உருவாக்குவதன் மூலம் தரத்தைக் கூட்டலாம்இங்கு அவ்வப்போது கட்டுரைகளின் தரம் குறித்து விவாதிக்கப்பட்டு கிடப்பில் போடப்படுகிறது. அதை பற்றிய பேச்சில தொடர்ச்சி இல்லை. தரத்தைக்கூட்டுவது என்றால் எப்படி அதை எளிதாக்குவது என்பதையும் தெளிவாக அறிய வேண்டுமல்லவா. அதற்கான மாதிரிக்கட்டுரைகளை உருவாக்கினால் என்ன? உதாரணத்திற்கு திரைப்படங்கள் பற்றியும் நடிகர்கள் பற்றியும் ஊர் பற்றியும் அதிக கட்டுரைகள் வரும் என நினைக்கிறேன். ஆனால் அதற்கான தரவு தளங்கள் எல்லாம் ஒரே கட்டுரையில் வருமாறு உருவாக்கினால் பின்னர் அதைப்போன்று வேறு கட்டுரைளுக்கான தரவுகளை புதியவரும் எளிதாக பெற முடியும். தமிழ் நாட்டு ஊர் பற்றிய கட்டுரைகள் என்றால் தமிழக அரசின் தலங்களில் அதை மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக கொடுத்திருப்பார்கள் அது போன்ற தளங்களை மேற்கோள்களாக அம்மாதிரி கட்டுரைகளில் இடலாம். அதைப்பார்ப்பவர் அவருடைய ஊருக்கு அதே தரவுகளை அத்தளங்கள் மூலம் பெற வழி வகுக்கும். வேறு எந்தெந்த பகுப்பில் அதிக கட்டுரைகல் உருவாக வாய்புளதோ அதில் ஒவ்வொன்றிலும் மாதிரி கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:35, 19 திசம்பர் 2012 (UTC)
ஓர் ஐயம்!அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம்! வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன். ஓர் ஐயத்துடன். இங்கே, விக்கிப்பீடியாவின் கட்டுரைகளிலும், விக்கி பொது ஊடகத்திலும் உள்ள படங்கள் முதலான கோப்புகள் காப்புரிமைக்கு அப்பாற்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இவற்றை எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா? காப்புரிமையற்ற கோப்புகள், குனு தளையற்ற ஆவணத் திட்டத்தின் கீழ் வரும் கோப்புகள் ஆகியவற்றை விக்கிப்பீடியாவிற்கு வெளியே வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா? --இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 10:12, 19 திசம்பர் 2012 (UTC)
--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 08:47, 20 திசம்பர் 2012 (UTC) தமிழ் இனி...தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குரும்படம்: தமிழ் இனி...--HK Arun (பேச்சு) 10:24, 19 திசம்பர் 2012 (UTC)
புலம்பெயர்ந்தோரின் நிலை என்னவோ! :-( −முன்நிற்கும் கருத்து 101.220.39.171 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. புறநானூறு - பன்னாட்டு மாநாடுவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ”புறநானூறு” எனும் தலைப்பில் பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. இந்த மாநாடு வாசிங்டன் வட்டாரத்தில் ஆகஸ்ட் 31 2013 தொடங்கி செப்டம்பர் 2 2013 வரை நடக்கவுள்ளது. புறநானூறு குறித்த கட்டுரைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு... பார்க்கலாம்]--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:11, 23 திசம்பர் 2012 (UTC)
நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்அனைத்து விக்கி உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்து நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.−முன்நிற்கும் கருத்து Sivam29 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
அனைவருக்கும் நத்தார்ப் பண்டிகை வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 03:24, 25 திசம்பர் 2012 (UTC)
காலம்/ஆண்டு, இடம்/நாடு, வகை/துறை வாரியாகப் பிரிக்கப்பட வேண்டியவை (தமிழ், தமிழர்)
எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: en:2012, en:Category:2012 works. தமிழ் விக்கியில் தமிழ்ப் படைப்புகளுக்குச் சிறப்புக் கவனம் தரலாம். --Natkeeran (பேச்சு) 03:25, 25 திசம்பர் 2012 (UTC)
--ஸ்ரீதர் (பேச்சு) 05:06, 25 திசம்பர் 2012 (UTC) இலங்கை வரலாறுபார்க்க: பேச்சு:முதலாம் விஜயபாகு --மதனாகரன் (பேச்சு) 11:16, 25 திசம்பர் 2012 (UTC) விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்கவிக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து தமிழ் கம்ப்யூட்டர் இதழில் நான் எழுதும் தொடர் கட்டுரை “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தலைப்பில் வெளியாகிறது. தமிழ் கம்ப்யூட்டர் ஜனவரி 1 - 15, 2013 இதழில் முதல் பகுதி வெளியாகியுள்ளது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:39, 2 சனவரி 2013 (UTC) பல ஊடகங்களில் ஊடுருவி விக்கி பரப்புரை செய்யும் தேனியாருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 2 சனவரி 2013 (UTC) அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம்தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சிறப்புமிக்க தமிழ் உயராய்வு மையமாகச் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் அயல்நாட்டுத் தமிழர் புலம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களைப் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்துப் பராமரிப்பதும் அவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதலும் இப்புலத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன. இந்நிறுவனப் பணிகளின் தொடர்ச்சியாக இப்புலம் “அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. தேசியக் கருத்தரங்கத் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா உள்ளிட்டு 6 அமர்வுகளாக நடத்தப்படும் இக்கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாக இந்நிறுவன வெளியீடாகக் கருத்தரங்க நாளன்று வெளியிடப்பட உள்ளது. கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப் பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இத்தேசியக் கருத்தரங்கிற்கான கட்டுரைகள் அனுப்ப விரும்புபவர்கள் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம் பக்கத்தைப் பார்வையிடலாம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:47, 5 சனவரி 2013 (UTC)
பெரும்பாலும் தேனியார் வரிக்கு வரி அக்குறிப்பிட்ட இணைய முகவரியில் உள்ளவற்றை அப்படியே எடுத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். .--viruba \உரையாடுக
|
Portal di Ensiklopedia Dunia