விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள்
பாலாவின் படங்கள்பயனர்:Balurbala#எனது பங்களிப்புகள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:44, 10 சூன் 2014 (UTC)
பரிந்துரைகள்
மேலுள்ள படத்துக்கு முந்திய பதிப்பின் போது தரம் சரி இல்லாதலால் நிராகரிக்கப்பட்டது. அப்டேட் செய்யப்பட்ட மேலுள்ள தற்போதைய படத்துக்கு இன்னும் கருத்து வரவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 19 மே 2014 (UTC)
ஜெய்சல்மேர் கோட்டைமஞ்சள் மணற்கற்களால் கட்டப்பட்ட ஜெய்சல்மேர் கோட்டைச் சுவர்கள் பகலில் பழுப்பு மஞ்சள் நிறத்திலும், மாலையில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கும். இக்கோட்டை மூன்றடுக்கு வரிசையில் அமைந்த சுவர்களால் கட்டப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவர் திடமான கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. கோட்டையின் இரண்டாவது அல்லது நடுவில் பாம்பு போன்று வளைந்து சுருண்ட சுவர்கள் உள்ளது. கோட்டையிலிருந்து நகரத்தைக் கண்காணிக்க இக்கோட்டையின் உச்சியில் 99 கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளது. ஆம்பர் கோட்டை ஆம்பர் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி
ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்ட பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. இக்கோட்டையில் பல அரண்மனைகளும், கோட்டையைச் சுற்றி ஏரியும் உள்ளது. கோட்டைக்குள் மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் அரசவை, அரச குடும்பத்தினர் மட்டும் கூடும் திவானி காஸ் எனப்படும் அரண்மனை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று. சூரிய குளத்தின் பெரிய செவ்வக வடிவில் பல அடுக்குகளுடன், நூற்றுக்கணக்கான படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான குளம். இச்சூரிய குளம் 53.6 x 36.6 மீட்டர் நீள, அகலம் கொண்டது. சூரிய குளத்தின் நான்கு மூலைகளில், நான்கு முகப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு மேடைகளில் சிறு பிரமிடு வடிவத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரிய குளம், நிலக் கணக்கியல் (Geometry) கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட இந்துக் கடவுளர்களின் 108 சிற்பங்கள் படிக்கட்டுகளுக்கு இடையே செதுக்கப்பட்டுள்ளன. ![]() இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பதான் நகரத்தில், பல அடுக்குகளுடனும், நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய, ஆழமான இக்கிணற்றை சோலாங்கி குல முதலாம் பீமதேவனின் நினைவாக, அவரது பட்டத்து இராணி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று. இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களிலும், தூண்களிலும் 800க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் உள்ளது. ![]() பாகிஸ்தானின், சோலிஸ்தான் பாலைவனத்திலுள்ள இக்கோட்டையின் சுற்றளவு 1500 மீட்டரும், உயரம் முப்பது மீட்டரும் கொண்டது. நீண்ட சதுர வடிவிலான இக்கோட்டையின் மீதுள்ள நாற்பது காவல் கோபுரங்களை (கொத்தளம்) பாலவனத்தின் பல கிலோ மீட்டர் தொலவிலிருந்தும் சாதராணமாக காணலாம். இக்கோட்டை இராஜபுத்திர மன்னர் இராய் சச்சா என்பவரால் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. |
Portal di Ensiklopedia Dunia