விக்டோரியா ஒகாம்போ
விக்டோரியா ஒகாம்போ(ஆங்கிலம்:Victoria Ocampo CBE)(ஏப்பிரல் 7 1890-சனவரி 27, 1979) ஆர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதியும் எழுத்தாளருமாக விளங்கிய பெண்மணி ஆவார். பிறப்பும் படிப்பும்விக்டோரியா ஒகாம்போ வசதியான உயர் குடும்பத்தில் பிறந்தார். வீட்டிலேயே ஆசிரியர் மூலமாக பிரஞ்சு மொழியைக் கற்றார். தம் குழந்தைப் பருவத்திலேயே பிரெஞ்சு மொழியிலும் சுபானிசு மொழியிலும் புலமை பெற்றிருந்தார்.விக்டோரியா லனாசியன் என்னும் நாளேட்டில் கவிதைகள் கட்டுரைகள் எழுதி வந்தார். தாகூரும் விக்டோரியாவும்![]() 1924 இல் ரவீந்திரநாத் தாகூர் போனர்ஸ் அயர்சுக்குச் சென்றார்.அப்பொழுது விக்டோரியாவின் தொடர்பும் நட்பும் கிடைத்தன. விக்டோரியா இலக்கிய ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் தாகூரின் கீதாஞ்சலியின் மொழி பெயர்ப்பைப் படித்து இருந்தார். எனவே தாகூரின் மீது பற்றும் மதிப்பும் ஏற்பட்டது.அப்போது உடல் நலம் குன்றி இருந்த தாகூரை தம் இல்லத்தில் தங்க வைத்து பார்த்துக் கொண்டார்.இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு பழகினர்.தாகூரிடமிருந்த ஓவியத் திறமையை வெளிக்கொணர்ந்ததில் விக்டோரியாவுக்குப் பெரும் பங்கு உண்டு. 1952 ஆம் ஆண்டில் விக்டோரியா தம் வரலாற்றை எழுதத் தொடங்கினார்.அந்நூலில் தாகூர் பற்றி நூறு பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் அவர் இறந்த பிறகே வெளிவந்தது. பிற நிகழ்வுகள்![]() ![]()
1979 ஆம் ஆண்டில் சனவரி 26 இல் வாயில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக இறந்தார். படைப்புகள்De Francesca a Beatrice Domingos en Hyde Park El Hamlet de Lawrence Oliver Emily Bronte (terra incognita) Virginia Woolf T.E.Lawrence of Arabia உசாத்துணை |
Portal di Ensiklopedia Dunia