வினையெச்சம்தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை+எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை, தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன. எ.கா : படித்து வந்தான். மெல்ல நடந்தான். வினையெச்சச் சொற்கள் பொதுவாக இ அல்லது உ ஆகிய ஓசைகளைக் கொண்டு முடியும். தெரிநிலை வினையெச்சம்ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும் எ.கா: படித்துத் தேறினான் குறிப்பு வினையெச்சம்ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும் எ.கா: மெல்ல நடந்தான் வினையெச்சப் புணர்ச்சிபொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக நிற்க வருமொழியில் வல்லினம் வந்தாலும் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும். [1] எடுத்துக்காட்டு
சில குறியீடுகள்
இவற்றையும் பார்க்கவும்அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia